இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்பு பாதையில் கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே
தீமைகள் தகர்ந்தொழிடும் உன் வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுயநலன்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே -- (2)
நீதியும் அன்பின் நேர்மையும் பொங்கி நிறைந்திடுதே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே -- (
இயேசுவே ...)
நன்மையில் இனி நிலை பெரும் என் சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலை வருமே -- (2)
எங்கிலும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே -- (
இயேசுவே ...)
No comments:
Post a Comment