Sunday, December 20, 2015

INBA YESU RAJAVAI NAAN PAARTHAL LYRICS

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்

இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறை திரை அற்ற பரிசுத்தரோடு
ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2

தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்

முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்

என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா

ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே

APPA PITHAVE ANBANA DEVA LYRICS


அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்

நன்றி உமக்கு நன்றி

தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்

உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே

இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே

Mulmudi baaramo dhevane

முள்முடி பாரமோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவை யாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதரே

தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ

கைகளில் ஆணியா குத்தினர்
களைக்குதோ கைகளும் இயேசுவே
சாட்டையால் முதுகினில் அடித்தனர்
சாட்டையும் ராஜனை அடித்ததோ

காடியா தாகத்துக்கு தந்தனர்
தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாருமே இல்லையோ

Kolkoda malai meethile

கொல்கொதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்

அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்

மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சசித்தார்

உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் ரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்

செந்நீரோ கண்ணீராய் மாறி
தரணியில் பாய்ந்ததங்கே
உன்நிலை நினைத்தவரே
தன்நிலை மறந்து சகித்தார்
 

வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை

Kanden kalvariyin katchi

கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்ணில் உதிரம் சிந்துதே
அன்பான அண்ணல் நம் இயேசு
நமக்காய் பட்ட பாடுகள்

கல்வாரி மலை மீதிலே
கள்ளர்கள் மத்தியிலே
சிலுவையில் அறைந்தனரே
உனக்காய் ஜீவன் விட்டாரே

பாழும் உலகத்தின்
பாவப்பிணி போக்க
சிலுவை சுமந்து போகும்
காட்சி கண்முன் போகும்

பாவ உலகத்தில்
ஜீவிக்கும் மானிடனே
பாரும் அவர் உனக்காய்
குருசில் தொங்கும் காட்சியை

Kalvari maa malaimel kai kaalgal

கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்

குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை

அஞ்சாதே என் மகனே மிங்கும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கென் இப்பாடு உனக்காகத் தானே
ஈனக்கோலமடைந்தேன்
உன்னை இரட்சித்தேன் என்றார்

கர்த்தரின் சத்தமதை சத்தியிம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே

Kalvari ratham enakkaga sinthi

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்

அல்லேலூயா அல்லேலூயா

கைகளில் ஆணிகளோ
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு

முட்கிரீடம் தரித்தவராய்
சிலுவையில் அறைந்தனரே
சிலுவையில் தொங்கினாரே இயேசு

உடைந்த உள்ளத்தோடு
சிலுவையில் மரித்தீரே
எனக்காய் மரித்தீரே இயேசு

En yesuve en nesare


என் இயேசுவே என் நேசரே
ஏன் இந்த பாடுகளோ
என் இதயம் நெகழிந்திடுதே
உம் முகம் பார்க்கையிலே

கைகளில் கால்களில் ஆணிகளால்
தழும்புகள் ஏற்றது எனக்காகவோ
பெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்
பெலன் தந்து என்னை தாங்கினீரே

தலையினில் முள்முடி துளைத்திடவே
தாகத்தால் தவித்தே துடித்தீரையா
அநாதையை போலவே சிலுவையிலே
அன்பினால் எனக்காக தொங்கினீரே

உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்
உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையா
என்னதான் ஈடாக தந்திடுவேன்
என்னையே உமக்காக தருகிறேன்

Anbin mugathai andru


அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்

கல்வாரி மலை மேல் - தேவ அன்பின்
எல்லை அன்று நான் கண்டேன்
கொல்கொதா மலை மேல்

தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
கருனையின் முகங்கண்டேன்
கல்வாரி மலைமேல் அன்று

தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
சிதைந்து மாண்டதினால் ஓ....ஓ..

இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால் ஓ...ஓ....

Oppu Kodutheer Ayya ummaiye

ஒப்புக் கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

எங்களை வாழவைக்க
சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

நித்திய ஜீவன் பெற
நீதிமானாய் மாற
ஜீவன் தரும் கனியாய்
சிலுவையில் தொங்கினீர்

சுத்திகரித்தீரே
சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா
உமக்காய் வாழ்ந்திட

பாவத்திற்கு மரித்து
நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே
என் பாவம் சுமந்தீர் ஐயா

மீட்கும் பொருளாக
உம் இரத்தம் தந்தீர் ஐயா
சாத்தானை தோற்கடித்து
சாவையும் வென்றீர் ஐயா

என்னையே தருகிறேன்
ஜீவபலியாக
உகந்த காணிக்கையாய்
உடலைத் தருகிறேன்

Um irathamea um irathamea

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே

பாய்ந்து வந்த நின் ரத்தமே
சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
பாவிகள் நேசர் பாவி என்னை
கூவி கழுவினீர் என்னை

நெசர் சிலுவை சத்தியம்
நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்
இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம்

நின் சிலுவையில் சிந்திய
வன்மையுள்ள இரத்தத்தினால்
என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரா

பன்றி போல் சேறில் புரண்டேன்
நன்றி இல்லாமல் திரிந்தேன்
கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர்

விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
புழங்காமல் போக்கினானே
களங்கமில்லா கர்த்தரே

ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா

kolkathaa meattinilea kodura paavi

கொல்கொதா மேட்டினிலே
கொடூர பாவி எந்தனுக்காய்
குற்றமில்லாத தேவ குமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்

பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்

மடிந்திடும் மன்னுயிர்க்காய்
மகிமை யாவும் இழந்தோராய்
மாசில்லாத தேவகுமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார்

இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட
இரட்சிப்பின் நதி என்னில் பாய
ஆதரவில்லா தேவகுமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார்

கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண்கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பி னிலே

உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

Appa um paatham amarnthuvitten

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப் போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா(4)

துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலனில்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே - என்னைக்

கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா

என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபையின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
இயேசையா நன்றி(4)

Maanida Uruvil

மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி

இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்

Kalvari mamalai oram

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே

சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்

Pothumanavarea Puthumaiyanavare

போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என்பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2)
ஆயுளெல்லாம் ஆராதனை

எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்

பாவங்கள் சுமந்ததனால் நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா

எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்

சிலுவையிலே ஏழ்மையானதால் என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்

Jeeva kristhu uyirthelunthar

ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
தேவ குமாரன் மரித்தெழுந்தார்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார்
அல்லேலூயா கல்லறைக் காட்சி
அற்புத சாட்சியே -ஆண்டவர்
இயேசு உயிர்த்தெழுந்தார்

பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
வேதாள கூட்டம் நடுங்கிடவே
அன்றதிகாலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்

நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து காட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
என் மன ஜோதி தம் அருள் ஆவி
என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்

நல் விசுவாசம் தந்திடுவார்
நம்பிடுவோரை எழுப்பிடுவார்
எக்காள சத்தம் கேட்டிட நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே