என் ஆற்றலின் ஆண்டவரை - நான்
எந்நாளும் போற்றிடுவேன் - நல்
அருள் மொழி கேட்க காலமெல்லாம் அவர்
காலடி அமர்ந்திடுவேன்
ஆண்டவர் எனது அரணாவார் - அவரே
எனக்கென்றும் துணையாவார்
வலிமையையும் வாழ்வும் வழங்கும் நல் தேவன்
என்னுடன் இருக்கின்றார்
என்றும் இருக்கின்றார்
ஆண்டவர் எனது மீட்பானார் - அவரே
எனக்கென்றும் ஒளியாவார்
வாழ்வாய் வழியாய் விளங்கும் நல் தேவன்
சீர்வழி நடத்திடுவார்
அவர்வழி தொடர்ந்திடுவேன்
No comments:
Post a Comment