Thursday, June 11, 2015

MALAIYANA NERATHIL MANAM SORTHA VELAIYIL

மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
1. எலியாவின் தேவனே
அக்கினியை என்றும் தந்திடுவார் – 2
கோலியாத்தை வென்ற தேவன்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
2. அழைத்தவர் மாறாதவர்
ஊழியப் பாதையில் நடத்திடுவார் – 2
உன்னையும் என்னையும் அவர் கைகளில்
வரைந்து என்றென்றும் காத்திடுவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
3. கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார் – 2
நோவாவின் பேழையில் இருந்ததுபோல்
என்னோடும் கூட இருந்திடுவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2

MAA PAAVIYAM ENNAYUM

மா பாவியாம் என்னையும்
உம் அன்பால் அணைத்தீரே
என் இயேசு ராஜா நன்றி
உம் சித்தம் நிறைவேற
தம் இரத்தம் தந்தீரே
என் இயேசு ராஜா நன்றி – 2
குயவன் கையில் களிமண்போல
என்னைக் கொடுத்தேன்
பரிசுத்தமாய் என்னை வனையும்
ஆத்ம பாரம் தந்து என்னை
இன்றே நிரப்பும்
உம் ஊழியம் செய்ய அனுப்பும்
அனுப்பும் அனுப்பும்
உம் சேவை செய்திடவே
அனுப்பும் அனுப்பும்
என் தேசம் சந்திக்கவே
இருள் சூழ்ந்த இடம் என்னை இன்றே அனுப்பும்
அழியும் மாந்தர் சந்திக்க
நரகாக்கினைனின்று ஜனம் இரட்சிக்க
அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்
அனுப்பும் அனுப்பும்
உம் சேவை செய்திடவே
அனுப்பும் அனுப்பும்
என் தேசம் சந்திக்கவே

MAANGAL NEERODAI VAANJITHU

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
1.தேவன்மேல் ஆத்துமாவே
   தாகமாயிருக்கிறதே
   தேவனின் சந்நிதியில் நின்றிட
   ஆத்துமா வாஞ்சிக்குதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
2.யோர்தான் தேசத்திலும்
   எர்மோன் மலைகளிலும்
  சிறுமலைகளிலுமிருந்தும் உம்மை
  நிதமும் நினைத்திடுவேன்
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
3.ஆத்துமா கலங்குவதேன்
   தேவனை நினைத்திடுவாய்
   அவரே என் இரட்சிப்பு தினமும்
   அவரை துதித்திடுவாய்
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
4.தேவரீர் பகற்காலத்தில்
   கிருபையைத் தருகின்றீர்
   இரவில் பாடும் பாட்டு எந்தன்
   வாயில் இருக்கிறதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

YUTHAVIN RAJASINGAM NEERE

1. யூதாவின் இராஜசிங்கம் நீரே
அல்ஃபாவும் ஓமெகாவும் நீரே
வல்லமை கனம் ஞானம் மகிமையையும்
துதியையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் நீரே
பாவமானீரே என்னை நீதியாக்கிட
சாபமானீரே எந்தன் சாபம் போக்கிட
காயமானீரே எந்தன் நோய்கள் தீர்த்திட
ஏழையானீரே எந்தன் ஏழ்மை நீக்கிட
2. நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர்
எந்நாளும் தாழ்ச்சி அடையேனே
அமர்ந்த தண்ணீர் பசும்புல்வெளியில் என்னை மேய்த்து
நித்தம் காக்கும் நல்ல தேவனே
பகைவர் முன்பாக பந்தி ஆயத்தம் செய்தீர்
என் தலையை எண்ணெயால் அபிஷேகமும் செய்தீர்
ஜீவ நாளெல்லாம் நன்மை கிருபை தொடருமே
நான் கர்த்தர் வீட்டினில் நீடித்து வாழ்வேனே
3. என் நாவு உந்தன் நீதியையும்
நாளெல்லாம் உந்தன் துதியையும்
ஓயாமல் போற்றிப்பாடும் குறைவையெல்லாம் நீக்கிப்போடும்
கைவிடாத நல்ல தேவன் நீர்
உமது மகிமையின் ஐசுவரியத்தின்படி
என் குறைவுகளெல்லாம் நிறைவாக்கும் தேவனே
யெஹோவா யீரே நீர் எந்தன் எல் ஷடாய்
போதுமானவரிலும் மிகவும் அதிகமானவர்

YEHOWA ROOVA EN NALLA MEIPPEN

யெஹோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
தாழ்ச்சி எனக்கில்லையே
யெஹோவா ரூவா என் நல்ல ஆயன்
குறைவொன்றும் எனக்கில்லையே

ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே

1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து சென்று என்னைப் போஷிக்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி தாகம் தீர்க்கின்றீர்

உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
நாள்தோறும் நடத்துகிறீர் – 2

ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே

2. எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்
பாத்திரம் நிரம்பிட எண்ணெயினாலே அபிஷேகம் செய்கின்றீர்

வாழ்நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும்
தொடர்ந்திட செய்திடுவீர் – 2

ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே

3. கதறின நேரம் என்னவென்று கேட்க வந்தீர் என்னைக் காணும் எல் ரோயீயே
கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர் என்னைத் தேற்றும் எபிநேசரே

தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர்
யெஹோவா ஷம்மா நீரே – 2

நான் தனிமையில் நடந்தேன் என் துணையாக வந்தீர்
யெஹோவா அப்பா நீரே

ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே

யெஹோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
தாழ்ச்சி எனக்கில்லையே
யெஹோவா ரூவா என் நல்ல ஆயன்
குறைவொன்றும் எனக்கில்லையே

ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே

YOSANAIYIL PERIYAVARE

1. யோசனையில் பெரியவரே
ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே
ஆராதனை ஆராதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

2. கண்மணி போல் காப்பவரே
ஆராதனை ஆராதனை
கழுகு போல சுமப்பவரே
ஆராதனை ஆராதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

3. சிலுவையினால் மீட்டவரே
ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே
ஆராதனை ஆராதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

4. வழி நடத்தும் விண்மீனே
ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே
ஆராதனை ஆராதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

5. தேடி என்னை காண்பவரே
ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே
ஆராதனை ஆராதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

6. பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே
ஆராதனை ஆராதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

7. உறுதியான அடித்தளமே
ஆராதனை ஆராதனை
விலை உயர்ந்த மூலைக்கல்லே
ஆராதனை ஆராதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

VALLAMAI DEVANE SARVA SRISTIYIN KARTHARE

வல்லமை தேவனே
சர்வ சிருஷ்டியின் கர்த்தரே
ஆராதிப்போம் உம் நாமத்தை
எங்கள் இயேசுவே
1. யெஹோவா ஷம்மா அல்லேலூயா
யெஹொவா ஷாலோம் அல்லேலூயா
என்றும் என்னோடு இருப்பவரே
சமாதான காரணர் நீரே
2. யெஹோவா ஸிட்கேனு அல்லேலூயா
யெஹோவா காதேஷ் அல்லேலூயா
எந்தன் நீதியாய் இருப்பவரே
பரிசுத்தம் செய்பவர் நீரே
3. யெஹோவா யீரே அல்லேலூயா
யெஹோவா நிஸியே அல்லேலூயா
எல்லாத் தேவையும் சந்திப்பீரே
ஜெயம் தரும் தேவன் நீரே
4. யெஹோவா ரஃப்பா அல்லேலூயா
யெஹோவா எல் ஷடாய் அல்லேலூயா
அற்புத சுகத்தைத் தருபவரே
சர்வ வல்லவர் நீரே

VETKAPATTU POVATHILLAI EN MAGANE

வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
1. கஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
நீ இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
2. குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் – 2
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
3. என் ஜனம் ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கத்திற்குப் பதிலாக
இரட்டிப்பான நன்மைகளைத் தருவேன் நான் – 2
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

VERU ORU AASAI ILA YESU RAJA

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர, உம்மைத் தவிர – 2
1. உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன் – 2
உம்மையே தழுவினேன்
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர, உம்மைத் தவிர
2. இருள் நீக்கும் வெளிச்சமே
என்னைக் காக்கும் தெய்வமே – 2
என்னைக் காக்கும் தெய்வமே
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர, உம்மைத் தவிர
3. மனமிரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே – 2
மறுவாழ்வு தந்தீரே
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர, உம்மைத் தவிர
4. சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா – 2
பெலன் தந்தீரையா
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர, உம்மைத் தவிர – 2

VAIKARAIYIL UMAKKAGA LYRICS

வைகரையில் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
காலை நேரம் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்

1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்
குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில்

2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கு நீர்தானய்யா

3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என்இதயம் பூரித்து துள்ளுகின்றது
என்உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

4. உம் கிருபையால் காலைதோறும் திருப்தியாக்கும்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

JEEVANULLA DEVAN THANGUM PARALOGA YERUSALEM

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் – 2
பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு – 2
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
1.கோடான கோடி தூதர்  கூடி அங்கே துதிக்கின்றனர் – 2
பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர் – 2
பரலோக தேவன் பரிசுத்தர் – நம் – 2
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் – 2
திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் – 2
அல்லேலூயா ஓசன்னா – 2
கொண்டாட்டம் கொண்டாட்டம் நம் தகப்பன் வீட்டில் – 2
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே – 2
எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி – 2
நீதிபதி கர்த்தரே – 2
எல்லாரையும் நியாயந்தீர்க்கும்  நீதிபதி – நம் –2
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
4. புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே – 2
நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே – 2
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் – 2
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் – 2
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் – 2
பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு – 2

JEYAM KODUKKUM DEVANUKKU

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியாய் உயர்த்துவேன்

1.நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எவருக்கும் அஞ்சிடேன்

2.அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார்

3.நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார்

4.உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே

THUTHIPPOM JEBIPPOM JEYAM EDUPPOM

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2

துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம்தானே – 2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே

1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே

2. பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்
கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்

3. அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்
திராட்சை செடி பலனை தராவிட்டாலும்

THIKKATTRA PILLAIGALUKKU SAGAYAR

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
   தூரத்தில் நின்றுவிடுவீரோ
   பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
   இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
2. கர்த்தாவே எழுந்தருளும்
   கைதூக்கி என்னை நிறுத்தும்
   தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
   தூயவரே இரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
3.தாயென்னை மறந்தாலும்
  நீர் என்னை மறப்பதில்லை
  ஏழையின் ஜெபம் கேளும் – 2
  இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
பக்கப்பலம் நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2

SORVAANA AAVIYAI NEEKKUM

1. சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன் – 2

இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே
2. ஊழியப் பாதையில் துன்பம்
விசுவாசிகளாலே நெருக்கம்
ஏன் இந்த ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே ஐயா – 2

இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே
3. வீடும் வாசலும் இல்லை
உற்றார் உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன் நான்
உமது சமூகத்திற்கே – 2

இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே
4. இரவெல்லாம் உறக்கமே இல்லை
வியாதியால் மனக்கவலை
தாங்குவோர் யாருமே இல்லை
நீரே பார்த்துக்கொள்வீர் – 2

இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே
5. காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே – 2

இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே

SUGAM THARAVENDUM YEHOWA ROBBA

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் – 2
1. நிமிர முடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் – 2
நிரந்தரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர் – 2
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா
2. தொழுநோய்கள் சுகமானதே
உம் திருக்கரம் தொட்டதால் – 2
கடும் வியாதிகள் விலகினதே
உமது வல்லமையால் – 2
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா
3. பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே – 2
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே – 2
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா
4. லேகியோனை தேடிச் சென்று
உம் பாதம் அமரச் செய்தீர் – 2
தெக்கப்போல்ய் நாடெங்கும்
உம் நாமம் பரவச் செய்தீர் – 2
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா
5. பேதுரு மாமி குணமாக்கினீர்
பணிவிடை செய்ய வைத்தீர் – 2
பேய் பிடித்த அநேகரை
அதட்டி விடுவித்தீர் – 2
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் – 2
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

SUGAM UNDU BELAN UNDU

1. சுகம் உண்டு பெலன் உண்டு
ஜீவன் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே – 2
2. நேசம் உண்டு பாசம் உண்டு
இரக்கம் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே – 2
3. அடைக்கலமே அதிசயமே
அண்டி வந்தேன் உம் பாதமே
நேசிக்கிறேன் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே – 2
4. துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே – 2
5. வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதத்தில்
உயர்த்துகிறேன் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே – 2
6. சுகப்படுத்தும் பெலப்படுத்தும்
திடப்படுத்தும் இந்நேரத்தில்
உயர்த்துகிறேன் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே – 2
7. சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம்
ஜீவன் பெற்றோம் உம் பாதத்தில்
நன்றி ஐயா நன்றி ஐயா
நேசிக்கிறேன் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே – 2

SINGASANATHIL VEETRIRUKKUM

1. சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4
2. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4
3. ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

4. ஆதியும் அந்தமுமானவரே
அல்ஃபா ஒமெகாவுமானவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4
5. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4
6. அக்னி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4
7. பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோலை உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

SAAMBALUKKU SINGAARATHAI THANTHAR

சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்
துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார்
துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்தார்
நீதியின் விருட்சமாய் நித்திய காலமாய்
இராஜரீக கூட்டமானேன்
1. வெட்கமா? நற்பலனும்  நாடி வரும்
துன்பமா? சந்தோஷமும் தேடி வரும்
அடிமையா? சுதந்தரமும் கூடி வரும்
நெருக்கமா? விடுதலையும் ஓடி வரும்
கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன்
ஆ…ஆ…ஆ…
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்
இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்
நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்
ஆத்துமா களிகூரும்
2. அழுகுரல் களிப்பாக மாறிவிடும்
நீதியோ துளிர்போல முளைத்திடும்
பாழ்நிலம் புதிதாக மாறிடும்
செல்வமோ குறைவின்றி சேர்ந்திடும்
கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன்
ஆ…ஆ…ஆ…
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்
இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்
நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்
ஆத்துமா களிகூரும்

SARVA SRISTIKKUM YEJAMAANAN NEERE

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
2. வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே
சாத்தான் தொடாமல் காப்பீரே

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
4. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இருதயத்தை படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசீர் பெறவே

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
5. சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
6. சாத்தான் என்னை எதிர்த்த போதும்
ஜெய கிறிஸ்து என்னோடே உண்டே
தோல்வி என்றும் எனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வேன்

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
7. எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
என்னைக் காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்

SANTHOSAM SANTHOSAM SANTHOSAME

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிட தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்

2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

SAGALA JANEGALE KAIKOTTI DEVANAI

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே
1. உன்னதமானவராகிய கர்த்தர்
எந்நாளும் அதிசயமானவராமே
மண்ணெங்கும் மகத்துவமான இராஜாவாம்
மகிழ்ந்து பாடிடுவோம்
2. போற்றி போற்றி பாடிடுவோமே
தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை
ஊற்றிடுவாரே ஆவிதனையே
சாற்றிடுவோம் துதியே
3. தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை
துதித்து உயர்த்திடுவோம்
4. தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடே
கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்
பிரதான தூதனுடைய சத்தத்தோடும்
எழுந்தருளி வருவார்
5. அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டு
அதிலொன்று நமக்காய் ஆயத்தம் பண்ணி
அழைக்கவே வருவார் அனுதினமும்
அல்லேலூயா பாடுவோம்

KONDADUVOM NAAM KONDADUVOM

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2

1. பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில்
    பாடி கொண்டாடுவோம் – 2
    தீயவன் நடுவில் வருவதில்லை – 2
    கர்த்தரோ ஜெயம் எடுத்தார் – நம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2

2. நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளவர்
    என்று நாம் உயர்த்திடுவோம் – 2
    கர்த்தரின் மகிமை மேகம்போல – 2
    இறங்கட்டும் இந்நாளிலே – 2
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2

3. அசைக்க முடியா கூடாரம் ஆவோம்
    அமைதியின் இல்லம் ஆவோம் – 2
    நோயாளி என்று சொல்வதில்லை – 2
    குற்றங்கள் நீங்கியது – நம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2

KEREETH AATRUNEER VATTRINAALUM

1. கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

2. இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப்போல் அழைக்கும் தேவன்
உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார்

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

3. முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார்

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

4. இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
மகிமையின் பிரசன்னத்தால்
மூடி நடத்திடுவார்

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

5. வழியில்லையென்று கலங்கும் நேரம்
புதுவழி ஒன்று திறந்திடுவார்
தாங்கிடும் கரத்தினால்
தூக்கி சுமந்திடுவார்

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

6. வேதனையால் நீ வாடும் நேரம்
இருக்கிறேன் என்றவர் வந்திடுவார்
அளவற்ற அன்பினால்
கண்ணீர் துடைத்திடுவார்

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

KUTRAM NEEGA KALUVINEERE

குற்றம் நீங்க கழுவினீரே
சுற்றி வருவேன் உம்மையே
பற்றிக் கொண்டேன் உம் வசனம்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
1.இரக்கம் கண்முன்னே
உம் வாக்கு என் நாவில்
நான் ஏன் கலங்கணும்
நன்றி கூறுவேன்
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
2.மகிமை மேகத்திற்குள்
மறைந்து நான் வாழ்கிறேன்
இரட்சகர் இயேசு தான்
எப்போதும் என்முன்னே
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
3.உம்மையே நம்பியுள்ளேன்
உம்மோடு தான் நடப்பேன்
தடுமாற்றம் எனக்கில்லை
தள்ளாடுவதும் இல்லை
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
குற்றம் நீங்க கழுவினீரே
சுற்றி வருவேன் உம்மையே
பற்றிக் கொண்டேன் உம் வசனம்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்

KKALAITHORUM KARTHARIN PAATHAM LYRICS

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே
மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

1. மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போலவே
என் தேவன்மேல் என் ஆத்துமா
தாகமாய் இருக்கின்றதே
மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

2. வியாதியோ வறுமையோ
துன்பமோ துக்கமோ
அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன்
என் இயேசுவின் நாமத்தினால்
மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2
3. அழைத்தவர் நடத்துவார்
அச்சமே இல்லையே
எல்லா தடைகளை நீக்கிடும்
அவர்  சமூகம் முன் செல்லுமே
மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே
மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

THOLLAI KASHTANGAL SOOLTHIDUM LYRICS

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் என்னைக் காக்க வல்லோர்
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

2. ஐயம் இருந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என் உள்ளம் மாறிற்றே
இயேசென்னைக் காக்கவல்லோர்

3.என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின்செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
என்னைக் கைவிட மாட்டார்

KARAIGAL NEEGIDA KAIGAL KALUVI

கறைகள் நீங்கிட கைகள் கழுவி
கர்த்தரைத் துதிக்கின்றேன்
பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான்
வலம் வருகின்றேன்

1. கர்த்தாவே உம் பேரன்பு
எப்போதும் என் கண்முன்னே
(உம்) வார்த்தையின் வெளிச்சத்தில்
வாழ அர்ப்பணித்தேன்

ஆராதனை ஆராதனை
ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

2. அறுவடையின் எஜமானனே
அரணான அடைக்கலமே
அல்ஃபாவும் ஒமெகாவும்
தொடக்கமும் முடிவும் நீரே

ஆராதனை ஆராதனை
ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

3. இரக்கங்களின் தகப்பனே
இளவயதின் வழிகாட்டியே
ஜீவிக்கின்ற மெய்தேவனே
ஜீவனின் அதிபதியே

ஆராதனை ஆராதனை
ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

4. நித்தியானந்த சக்ராதிபதி
நீர் ஒருவரே மாவேந்தர்
அரசர்க்கெல்லாம் அரசர் நீர்
பேரின்ப கர்த்தர் நீரே

ஆராதனை ஆராதனை
ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

5. மகா மகா நீதிபரர்
மகத்துவங்கள் நிறைந்தவர்
மீட்பளிக்கும் வல்லமையே
சாவாமை உள்ளவரே

ஆராதனை ஆராதனை
ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

6. எல்லாருக்கும் நீதிபதி
சர்வத்தையும் உருவாக்கினீர்
சகல கிருபையும் நிறைந்தவர்
சத்தியமானவரே

ஆராதனை ஆராதனை
ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

7. உண்மையுள்ள சிருஷ்டிக்கர்த்தர்
நன்மைகளின் பிறப்பிடமே
யோனாவிலும் பெரியவரே
பிரதான மேய்ப்பர் நீர்

ஆராதனை ஆராதனை
ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

கறைகள் நீங்கிட கைகள் கழுவி
கர்த்தரைத் துதிக்கின்றேன்
பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான்
வலம் வருகின்றேன்

KALIMANNAIYUM ORU KARUVIYAKKI

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

1. ஒன்றுக்கும் உதவாத என்னை அழைத்தீர்
உன்னத அன்பால் என்னை நேசித்தீர் – 2
இராஜாக்களாக மாற்றி விட்டீர்
ஆசாரியர்களாக மாற்றி விட்டீர் – 2

துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

2. உளையான சேற்றில் இருந்த என்னை
மாறாத நேசத்தால் எடுத்தீரையா – 2
அபிஷேகத்தால் என்னை நிறைத்து விட்டீர்
அபிஷேகப் பாத்திரமாய் மாற்றி விட்டீர் – 2

துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

3. ஆபத்துக்காலத்தில் அடைக்கலமே
இக்கட்டு நேரத்தில் ஆறுதலே – 2
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
கிருபையும் அன்பும் நிறைந்தவரே – 2

துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

4. அதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அற்புதமாய் என்னை நடத்துகிறீர் – 2
அதிசய குயவனே ஸ்தோத்திரமையா
அற்புத நாயகனே ஸ்தோத்திரமையா – 2

துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

KAZHUGUPOLA EZHUMBUVEN

1. சமாதானம் நெஞ்சிலே புயலின் நடுவிலே
சிலுவை சுமந்தார் மரணம் தோல்வி அடைந்ததே
இயேசு எனக்காய் மரித்ததாலே எழும்புவேன்
கழுகுப்போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
கழுகுப்போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன்
2. கனவும் கலைந்ததே கண்கள் ஏங்குதே
கண்கள் நதியாய் கண்ணீர் சிந்தி அழுததே
கருவில் என்னைக் காத்த தயவை நினைக்குதே
கழுகுப்போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
கழுகுப்போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன்

KARTHAVE UM KIRUBAI

கர்த்தாவே உம் கிருபை
எவ்வளவு எனக்கு அருமை
நான் உமது செட்டைகளின்
நிழலில் வந்து அடைவேன் – 2
1. பறந்து காக்கும் பட்சி நீர்
பாதுகாப்பாய் நான் இருப்பேன் – 2
தீவிரமாய் இன்று இரங்கிடுவீர்
கடந்து வந்து விடுவிப்பீர் – 2
2. செங்கடல் தடை செய்ய முடியாது
எரிகோ எதிர் நிற்க முடியாது
யோர்தான் வழிகளை திறந்திடுமே
கன்மலை உச்சியில் வந்திடுவேன்
3. நானும் ஆசி பெற்றவனே
என்னை சபிக்க யாராலும் முடியாது
காயங்கள் அடிகள் பிலேயாமுக்கே
காக்கும் செட்டையில் நானிருப்பேன்
4. வளர்ந்து பெருகிப் படர்ந்திடுவேன்
பரவிப் பாய்ந்து ஓடிடுவேன்
காருண்யம் என்னைப் பெரியவனாக்கும்
கிருபை என்னைத் தினம் உயர்த்தும்

KARTHARAI NAAN EKKALAMUM

கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
அவர் துதி என் நாவிலே
என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா
1. யெஹோவாவை நான் உள்ள வரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதை கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார்
2. அல்லேலூயா நான் பாடிடுவேன்
அவரை நான் ருசித்ததினால்
அநுதினம் அதிகாலையில்
அவர் பாதம் காத்திருப்பேன்
3. சிங்கக்குட்டிகளும் சோர்ந்திடுமே
பட்டினி கிடப்பதினால்
சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
சந்தோஷம் அடைவாரே

KARTHARIN SATHAM VALLAMAIYULLATHU

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாக மேல்
தற்பரன் முழங்குகிறார் – அல்லேலூயா
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
1. பெலவான்களின் புத்திரரே
    பரிசுத்த அலங்காரமாய்
    கனம் வல்லமை மகிமை
    கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
    பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்
    புது ஆசீர்வாதம் பெருக
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
2. கேதுரு மரங்களையும்
    லீபனோனின் மரங்களையும்
   கர்த்தரின் வலிய சத்தம்
   கோரமாக முறிக்கின்றது
   சேனை அதிபன் நமது முன்னிலை
   ஜெய வீரனாக செல்கின்றார்
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

3. அக்கினி ஜூவாலைகளை
    அவர் சத்தம் பிளக்கின்றது
    காதேஸ் வனாந்திரத்தை
    கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
    இராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
    இராஜரீகமெங்கும் ஜொலிக்கும்
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
4. பெண்மான்கள் ஈனும்படி
    பலத்த கிரியை செய்திடும்
   காட்டையும் வெளியாக்கும்
   கர்த்தரின் வலிய சத்தம்
   பெலன் கொடுத்து சமாதான மீந்து
   பரன் எம்மை ஆசீர்வதிப்பார்
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாக மேல்
தற்பரன் முழங்குகிறார் – அல்லேலூயா
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

KANNEERIN VAZHIGAL NANAIYUM YEN VIZHIGALAI

கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
கடந்திட்ட பாதைகளை
நினைத்திடும்போதெல்லாம்
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து
    பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ
    ஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்து
    நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
2. காரிருள் என்னை சூழ்ந்தபோது
   பேரொளியாய் நின்றதை மறப்பேனோ
   தீங்கு நாளில் கூடார மறைவில்
   ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
கடந்திட்ட பாதைகளை
நினைத்திடும்போதெல்லாம்
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

YEEN MAGANE INNUM INNUM PAYAM UNAKKU

ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோ
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
1. நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார் – உன்னில்
திகிலூட்டும் காரியங்கள்
செய்திடுவார் உன் வழியாய்
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
2. நீதியினால் ஸ்திரப்படுவாய்
கொடுமைக்கு நீ தூரமாவாய்
திகில் உன்னை அணுகாது
பயமில்லா வாழ்வு உண்டு
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
3. படைத்தவரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னை
விருப்பத்தையும் ஆற்றலையும்
தருகின்றார் அவர் சித்தம் செய்ய
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோ
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?

YETRA NERAM ENAKKU UTHAVI SEITHA KIRUBAI

ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை – 2
கிருபையே கிருபையே
கிருபையே தேவகிருபையே – 2
1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை
திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை – 2
திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை  – நான் – 2
2. தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை
தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை – 2
தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை  – நான் – 2
3. பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை
அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை – 2
அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை – நான் – 2
4. மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை
கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை – 2
கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை – நான் – 2

YESU RATHAM ENMELIRUPPATHAL

இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
தீமைகள் அணுகாது
இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
வியாதிகள் அணுகாது

என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
இயேசுவின் இரத்தம்
அவர் வார்த்தை என்னில்
இருப்பதினால் பயமேயில்லை

1. பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு
நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன்

2. சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்
விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன்

3. சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்
நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன்

IMMATTUM KAATHU NADATHINIRE

இம்மட்டும் காத்து நடத்தினீரே
இனிமேலும் காத்து நடத்துவீரே – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
உமக்கே ஆராதனை – 3
1.நான் நம்பும் தேவனும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் – 2
எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும்
தஞ்சமும் ஆனவர் நீர் – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
2.எந்தன் ஜீவனும் நீர்
ஜீவனின் பெலனுமே நீர் – 2
ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்த
நல்ல மேய்ப்பனும் நீர் – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
3.எந்தன் ஆதரவும் நீர்
எந்தன் கேடகமும் நீர் – 2
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர்
யாருக்கும் பயப்படேன் நான் – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
இம்மட்டும் காத்து நடத்தினீரே
இனிமேலும் காத்து நடத்துவீரே – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
உமக்கே ஆராதனை – 3

INTHAMATTUM KATHA EBINESARE

1. இந்தமட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
இந்த (புது) வருடத்தின் நாட்களிலே

ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா
2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்
3. சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே
4. பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே

IDAIVIDA NANDRI UMAKKUTHANE

இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – 2

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – 2

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – 2

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – 2

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா – 2

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2
அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா
நித்திய இராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

AANANTHA MAGILCHI APPA SAMUGATHIL

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3
1.கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
   குற்றம் சுமராது – 2
   காத்திடுவார் உயர்த்திடுவார்
   காத்து நடத்திடுவார் – 2
   காத்து நடத்திடுவார் – என்னை – 2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3
2.தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்
   சிநேகிதனும் நான்தான் – 2
   அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
   தள்ளி விட மாட்டார் – 2
   தள்ளி விடமாட்டார் – ஒரு நாளும் – 2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3

3.கைகள் நீட்டு கோலை உயர்த்து
   கடலைப் பிரித்துவிடு – 2
   காய்ந்த தரையில் நடந்துப் போவாய்
   எதிரி காண மாட்டாய் – 2
   வியாதி காண மாட்டாய் – இனி நீ –2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்?
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2

AARATHANAI NAAYAGAN NEERE LYRICS

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
ஆயுள் முடியும்வரை
உம்மைத் தொழுதிடுவேன் – 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2

1.ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே – 2
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2

2.மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே – 2
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே – 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
3.முடிவில்லா இராஜ்யம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் – 2
ஆயத்தமாய் நானும் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் – 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
ஆயுள் முடியும்வரை
உம்மைத் தொழுதிடுவேன் – 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2

AARATHANAI SUGAM THARUM

ஆராதனை சுகம் தரும்
ஆராதித்தால் பெலன் வரும்
நான் போற்றுவேன்
நான் புகழுவேன்
கிருபையை எந்நாளும்
நினைத்து வாழ்ந்திடுவேன் – உம்
1. எனது வாஞ்சையும் நீரே
எனது ஆசையும் நீரே
உந்தன் சமூகமே எனக்கானந்தம்
உந்தன் பிரசன்னமே எனக்காறுதல்
2. எனது ஏக்கமும் நீரே
எனது நோக்கமும் நீரே
எந்தன் பிரியமே எந்தன் நேசமே
எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே

AARATHANAI YENGAL DEVANUKKE

ஆராதனை எங்கள் தேவனுக்கே
ஆராதனை எங்கள் இயேசுவுக்கே
ஓசன்னா ஓசன்னா – 4
1.மகனாக மகளாக தெரிந்தெடுத்த
நல்மீட்பரை நாம் ஆராதிப்போம் – 2
பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம்
ஆபத்துக்காலத்தில் உதவிடுவார்
ஓசன்னா ஓசன்னா – 4
2.பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமே
ஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் – 2
இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ள
ஆயத்தமாவோம் இந்நேரமே
ஓசன்னா ஓசன்னா – 4
3.ஸ்தோத்திர துதி கன மகிமை யாவும்
ஒப்புவிப்போம் நம் தேவனுக்கே – 2
பெலனும் வல்லமையும் நிறைந்தவரை
போற்றியே என்றும் ஆராதிப்போம்
ஓசன்னா ஓசன்னா – 4

AARATHANAI AARATHANAI VALLAVARE NALLAVARE

ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
1. பாவங்கள் எனக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை
2. ஆவியின் வரங்களைத் தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய்த் தந்தவரே
உமக்கே ஆராதனை
3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தவரே
உமக்கே ஆராதனை

AARATHANAI AARATHANAI AAVIYODU AARATHIKKIROM

ஆராதனை ஆராதனை
ஆவியோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை
உண்மையோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை – 2

1.சத்திய தேவனே உம்மை உயர்த்தி
   தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
   நித்திய தேவனே உம்மை உயர்த்தி
   உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை – 2

2.யெஹோவா யீரே பார்த்துக்கொள்வீர்
   தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
   யெஹோவா நிஸியே வெற்றி தருவீர்
   உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை – 2

3.யெஹோவா ரூவா நல்மேய்ப்பரே
   தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
   யெஹோவா ராஃப்பா சுகம் தருவீர்
   உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை – 2

ANNAI ANBILUM VILAI LYRICS

அன்னை அன்பிலும் விலை
என் இயேசுவின் தூய அன்பே – 2
தன்னை பலியாய்த்  தந்தவர்
உன்னை விசாரிப்பார்
என் இயேசுவின் தூய அன்பே

1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை
பரன் சுமந்து மீட்டாரே
தம் நாமத்தை நீ நம்பினால்
தளர்ந்திடாதே வா
அன்னை அன்பிலும் விலை
என் இயேசுவின் தூய அன்பே

2. மாய லோகத்தின் வேஷமே
மறைந்திடும் பொய் நாசமே
மேலான நல் சந்தோஷமே
மெய்த்தேவன் ஈவாரே
அன்னை அன்பிலும் விலை
என் இயேசுவின் தூய அன்பே

3. உந்தன் பாரங்கள் யாவையும்
உன்னை விட்டே அகற்றுவார்
உன் கர்த்தரால் கூடாதது உண்டோ
நீ நம்பி வா
அன்னை அன்பிலும் விலை
என் இயேசுவின் தூய அன்பே – 2
தன்னை பலியாய்த்  தந்தவர்
உன்னை விசாரிப்பார்
என் இயேசுவின் தூய அன்பே

ANBHU KOORVEN INDRU UMMIL

அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் அன்பை எண்ணி
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2
ஓ என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலை ஈந்தீர் என்னை மீட்க
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2

ANBHU KOORUVEN INNUM ATHIGAMAI

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2
1.எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே – 2
இதுவரையில் உதவினீரே
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2
2. எல் ரோயீ எல் ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா – 2
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2
3. யெஹோவா ராஃப்பா யெஹோவா ராஃப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா – 2
சுகம் தந்தீரே நன்றி ஐயா
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2
4. யெஹோவா நிஸி யெஹோவா நிஸி
ஜெயம் தந்தீரே நன்றி ஐயா – 2
ஜெயம் தந்தீரே நன்றி ஐயா
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2
அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2

ANBARAM YESUVIN ANBINAI YENNIYE LYRICS

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
    கவலை எனக்கு இல்லையே
    புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
    என்னை நடத்திச் செல்லுவார்
காலம் மாறினாலும்
பூமி அழிந்தாலும்
இயேசு என்றும் மாறிடார்
   எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
   போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார்
அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
    உமக்கே நிகரே இல்லையே
    சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து
    என்னை நடத்திச் செல்லுவீர்
நல்ல தேவனின்
வல்ல வார்த்தைகளால்
எந்தன் வாழ்வு மலரும்
   எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
   புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர்
அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

3. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
    மேகமீதில் ஒரு நாள்
    மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
    மணவாளன் வந்திடுவார்
ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
பரிசுத்தர் கூட்டத்தோடு
    அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
    செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய்
அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

ANAITHAYUM ARULIDUM ENAKENA THANDHIDUM LYRICS

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

யெஹோவா யீரே – 4

1. புல்லுள்ள இடங்களில் எந்தனை
நித்தம் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும்
என் தேவனே

2. செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல் என்னை சுமந்திடும்
என் தேவனே

3. சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேனே
என் தேவனே

4. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே

ARPUTHA YESURAJANE UTHAMA MANAVALANE

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் –4
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்
1. கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் – 2
என் இராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு – 4
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்
2. நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
நான் போற்றிப் பாடும் சர்வ வல்ல தேவன் – 2
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு – 4
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்
3. ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவர்
இருளில் இருந்து புதையலைக் கொண்டு வருபவர் – 2
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
எனக்கு உரியவர் என் இயேசு – 4
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் –4
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

APPA NEEGA SEITHA NANMAI

அப்பா நீங்க செய்த நன்மை
அது கோடி கோடி உண்டு
நினைத்து பார்க்கும் உள்ளம்
அது எனக்கு இல்லையே
நினைத்து பார்க்கும் உள்ளம்
அது எனக்கு வேண்டுமே
1.பாவங்கள் செய்து மரித்தேன்
ஜீவனைத் தந்தீரே
பாவங்கள் இருந்த இடத்தில்
உம் கிருபை வைத்தீரே
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே
அப்பா நீங்க செய்த நன்மை
அது கோடி கோடி உண்டு
நினைத்து பார்க்கும் உள்ளம்
அது எனக்கு வேண்டுமே
2. நன்மைகள் என்னிடம் இல்லை
ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்
நான் உம்மை நினைக்கவில்லை
ஆனால் நீர் என்னை நினைத்தீரே
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே
அப்பா நீங்க செய்த நன்மை
அது கோடி கோடி உண்டு
நினைத்து பார்க்கும் உள்ளம்
அது எனக்கு வேண்டுமே
3. ஏழை என்னை நினைத்து
ஆசீர்வதித்தீரே
கரம் பிடித்து அன்பாய்
நடத்திச் சென்றீரே
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே
அப்பா நீங்க செய்த நன்மை
அது கோடி கோடி உண்டு
நினைத்து பார்க்கும் உள்ளம்
அது எனக்கு வேண்டுமே

APPA UMPATHAM AMARTHUVITTEN

அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு
என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4
1. துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலன் இல்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே
என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4
2. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானையா
என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4
3. என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா
என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4
4. முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்
அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபயின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
இயேசையா நன்றி – 4

APPA ALPHA OMEGA

அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2
1.பரிசுத்த வாழ்வு நான் வாழ
பிரித்தீரே பிறக்கும் முன்னாலே – 2
புகழ் உமக்கே – 4
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2
2.மறுபடி பிறக்கச் செய்தீரே
கிருபையால் இரட்சித்தீரே – 2
புகழ் உமக்கே – 4
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2
3.உம் அன்பை ஊற்றினீர் என்னில்
உன்னத அபிஷேகத்தாலே – 2
புகழ் உமக்கே – 4
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2
4.இரக்கத்தில் செல்வந்தர் நீரே
இதயத்தின் தீபமானீரே – 2
புகழ் உமக்கே – 4
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

ABISHEGAM EN THALAIMELE

அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
1. இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
    ஏராளம் ஏராளம் – 2
    காயம் கட்டுவேன் தேசமெங்கும்
    இயேசுவின் நாமத்தினால் – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
2. சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
    விடுதலை பெறணுமே – 2
    கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
    கட்டுக்களை உடைக்கணும் – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே

3. துதியின் உடை போர்த்தணுமே
    ஒடுங்கின ஜனத்திற்கு – 2
    துயரத்திற்குப் பதிலாக
    ஆனந்த தைலம் வேண்டுமே – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே

ANATHI DEVAN EN ADAIKALAME

அநாதி தேவன் என் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்
2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே
3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
என் சமாதானத்தின் உடன்படிக்கைதனை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார்
4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்
5. ஆனந்தம் பாடியே திரும்பியே வா
தூய தேவ பலத்தால்
சீயோன் பர்வதம் என்னை சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவேன்