உன்னோடு நான் விருந்துண்ண வேண்டும்
உன் வீட்டில் நான் குடிகொள்ள வேண்டும்
உன் அன்பில் நான் உறவாட வேண்டும்
என் வாழ்விலே இது ஒரு பொன்னாள்
என் அகமதிலே நீ வரும் திருநாள்
உன் அன்புக்காய் அனைத்தையும் இழப்பேன்
மன்னவன் உமக்காய் என்னையே கொடுப்பேன்
பொருட்செல்வமே என் கடவுள் என்று
ஏழையின் பொருளை எனக்கென பறித்தேன்
மனமாறினேன் மகிழ்வடைந்தேன் நான்
பன்மடங்காக ஏழைக்கு கொடுப்பேன்
என் பாவத்தை மன்னிக்க வருவாய்
என் உளமதிலே அமைதியை தருவாய்
என் இதயத்திலே வாழ்ந்திட வருவாய்
என் வீட்டிற்கு மீட்பினை தருவாய்
No comments:
Post a Comment