திருக்கரத்தால் தாங்கியென்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே
ஆழ்கடலில் அலைகளினால்
அசையும் போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டு
சேர்ந்திடுவேன் அவர் சமூகம் -- (திருக்கரத்தால்)
உன் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும் -- (திருக்கரத்தால்)
No comments:
Post a Comment