Sunday, May 20, 2018

PARALOGAM THAN EN PECHU LYRICS


பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்
தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா
1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் -என்னை
2. உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை
3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
சேர்ந்து பாடிடுவேன் -நான்
நடனமாடிடுவேன்
4. என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும் – நான்
5. கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்
எல்லாமே புதிதாகும்
6. என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டிச் சென்றிடுவேன்

OOTRUNGAYYA OOTRUNGAYYA LYRICS


ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய
உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே மழையை பொழியுமோ
நீரல்லவோ
வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால் வனாந்தரம் செழிக்கும்
நீரல்லவோ
ராஜாவின் முக களையில் வீரம் இருக்கும்
உங்க தயவுக்குள்ள பின் மாரி இருக்கும்
நீரல்லவோ

OOTRIDUME UM VALLAVAMIAYAI LYRICS


ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு
வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட
1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2
2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே – 2
3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2

OOTRA PADA VENDUME LYRICS


ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே – (2)
எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் – ஊற்றப்பட
1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – எண்ணெய்
2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – எண்ணெய்
3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் – எண்ணெய்
4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் – எண்ணெய்
5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே – எண்ணெய்

OPPUKODUTHIR AYYA LYRICS


ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக
1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா
2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்
3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட
4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா
5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்

NESIKKIREN UMMAI THAANE LYRICS


நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா
1. ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் – என்
அசைக்கப்படுவதில்லை – நான்
2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே – என்
நினைவெல்லாம் ஆள்பவரே
3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மை தேடணுமே
4. உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்

NANDRI ULLAM NIRAIVUDAN LYRICS


நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்
நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்
பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய்
பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய்
நன்றி நன்றி நன்றி

NAAN UYIRODU IRUKUM LYRICS

நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2
எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

NANDRIYAAL PONGUDHAE EMADHULLAM LYRICS

நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
நாதன் செய்பல நன்மைகட்காய்
நாள்தோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா
நன்றியால் ஸ்தோத்தரிப்போம் 
கடந்த வாழ்வில் கருத்துடனே
கண்மணிபோல் நம்மைக் காத்தனரே
கண்ணீர் கவலையினை மாற்றினாரே
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால்
ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
ஜீவிய பாதை நடத்தினாரே
ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை அல்லேலூயா
ஜீவனின் அதிபதியை – நன்றியால்
அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
அதிசயங்கள் பல புரிந்தனரே
ஆயிரம் நாவுகள் தான் போதுமா
ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா
ஆண்டவரைத் துதிக்க – நன்றியால்
பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை
பாச கரம் கொண்டு தூக்கினாரே
கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்
கருத்துடன் காத்தனரே அல்லேலூயா
கருத்துடன் காத்தனரே – நன்றியால்
பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி
போர்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்
ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே
நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா
நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்

NADANTHA THELLAM NANMAIKE LYRICS


நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு
நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி


1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்ப்களை இன்பமாக மாற்றினீர்;


2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி


3. உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்


4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர்


5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி


6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி


7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

NAANE VAZHI NAANE SATHYAM LYRICS


நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே(ளே)-உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை
1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே வருவாயா
இதயத்தில் இடம் தருவாயா
3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே
இதயத்திலே இடம் தருவாயா
4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்
கலங்காதே என் மகனே
கண்மணிபோல உன்னைக் காத்திடுவேன்

NADAKA SOLLI THAARUM LYRICS


நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்
1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே
2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

NADANAMADI STHOTHARIPAEN NAADHA LYRICS


நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்
அல்லேலூயா
1. காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா
2. வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக – ஐயா
3. ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம் தான் உண்டு – ஐயா 
4. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே

NALLA SAMARIAN YESU LYRICS


நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தார்
1. என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
2. அருகில் வந்தாரே
மனது உருகினாரே
3. இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
4. எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
5. காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
6. சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
7. மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே

NALLAVARE EN YESUVE NAAN LYRICS


நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!!
நன்மைகள் எதிர் பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர்
துதி உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே
1. எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மை போல் இல்லை ஐயா
நீரின்றி வாழ்வே இல்லை
உணர்ந்தெனய்யா…
உந்தனின் மாறா அன்பை மறவேன் ஐயா
2. என் மனம் ஆழம் என்னை நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக்கொள்வீர்
ஊழிய பாதையில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்
துதி உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே

EENA LOGATHIL YESU YEN PIRANTHAR LYRICS


ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்

ஆ அதிசயம் ஆ அதிசயம்
அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
அன்பரின் பிறப்பு அதிசயம்

மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே
மனு உரு எடுத்த மகிமையே

மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால்
பாவியின் சாயல் அணிந்ததால்

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆகாய மகிமை ஜொலித்ததால்
ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்