Saturday, December 26, 2015

Ummal Agatha Kariyam

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை (3)
எல்லாமே உமால் ஆகும் அல்லேலுயா
எல்லாமே உம்மால் ஆகும்

ஆகும் எல்லாம் ஆகும், உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

1. சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே (ஐயா நீரே)
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) --- உம்மால்

2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே (ஐயா நீரே)
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) --- உம்மால்

3. வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே)
அவாந்தர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) --- உம்மா

Ummai Ninaikkum Pothellam

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா

நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா

1. தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா

2. பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டு பிடித்தீர்
கண்ணின் மணிபோல் காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்

3. பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்
பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்

4. இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி
கண்ணீர் துடைக்கின்றீர்

5. உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்

6. சிநேகம் பெற்றேன் ஐயா
கனம் பெற்றேன் ஐயா
உந்தன் பார்வைக்கு அருமையானேன்
உம் ஸ்தானாதிபதியானேன்

7. உலக மகிமையெல்லாம்
உமக்கு ஈடாகுமோ
வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்
உம் வார்த்தையோ ஒழியாதையா

Ummai Padatha Natkalum Illaiye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)

1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) --- உம்மை

2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) --- உம்மை

3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) --- உம்மை

4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) --- உம்மை

Ummai Padatha Navum

1. உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமையிழந்ததே
பாரில் மகிமையிழந்ததே

உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே

2. எந்தன் பாவத்தைப் போக்க
பாரினில் வந்த பரனை போற்றுவேன் - தேவ
பரனை போற்றிடுவேன் --- உந்தன்

3. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவை அண்டை நீ வா - அவர்
சிலுவை அண்டை நீ வா --- உந்தன்

4. இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
போற்றித் துதித்திடுவோம் - தினம்
போற்றித் துதித்திடுவோம் --- உந்தன்

Um Namam Valka Raja

உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)
உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)

வாழ்க ராஜா அல்லேலுயா (4)
அல்லேலுயா ஓசன்னா (4)

1. யேகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) --- வாழ்க

2. யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) --- வாழ்க

3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2) --- வாழ்க

மாரநாதா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா (4)

un vetkathirku bathilaga

உன் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான பலன் வரும்
உன் இலட்சைக்கு பதிலாக
நித்திய மகிழ்ச்சி வரும்

துதித்திடுவோம் போற்றிடுவோம்
மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

1. சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் கொடுப்பாரே
துயரத்திற்கு பதிலாக
தைலத்தை கொடுப்பாரே - ஆனந்த

2. சோர்வை எல்லாம் மாற்றிடுவார்
துதியின் உடை தருவார்
நீதி தேவன் சரிக்கட்டுவார்
ஆறுதல் தந்திடுவார் - நல்ல

3. திறந்த வாசல் உனக்கு உண்டு
திகையாதே கலங்காதே
அவர் நாமத்தை தொழுதிடுவாய்
மகிமையை அடைந்திடுவாய் - அவர்

Undhan Prasanathaal vali nadathum

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்
உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்

தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே

மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே
உறவுகளால் வாழ்வில் எனக்கு - என்றும்
மனதில் சஞ்சலமே...
மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே,
உறவுகளால் வாழ்வில் எனக்கு - என்றும்
மனதில் சஞ்சலமே...

என்றும் மனதில் சஞ்சலமே…..

தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
கேள்விகள் உள்ள எனக்கு - உம்
வசனம் பேர் ஆறுதலே...
தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
கேள்விகள் உள்ள எனக்கு - உம்
வசனம் பேர் ஆறுதலே...

உம் வசனம் பேர் ஆறுதலே…

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்
உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்

தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே

Edhayum Thaangum oor Idhayam thaarum

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்
இயேசு தேவா என் தேவா

அனுபல்லவி

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே
எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

சரணங்கள்

1. கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்
குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ
வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்
உயிருள்ள மனிதன் முறையிடுவானே --- ஏன் என்று

2. சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்
வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்
மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்
மனிதனை சோதிக்க எம்மாத்திரம் - அவன் --- ஏன் என்று

Ennai kandavare ennai kaanbavare

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா

என்னை கண்டவரே
என்னை காண்பவரே
என்னை காத்தவரே
என்னை காப்பவரே

1. பாவீயாய் இருந்த என்னை கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்து கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்து கொண்டீரே

2. கடந்த காலம் எல்லாம் காத்து கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்து கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தீ செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே

3. தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே
மதில்களை தாண்டும்படி தூக்கி விட்டீரே
நெரிந்த நாணலை போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே

Ootridume Um Vallamayai

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காய் எழும்பிட

1. பெந்தே கோஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே
அப்போஸ்தலர் நாளில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டும் --- ஊற்றிடுமே

2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே --- ஊற்றிடுமே

3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே --- ஊற்றிடுமே

En Uyirana Uyirana Uyirana Yesu

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே

Elshaddai Enthan Thunai Neere

எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே

1. காலைதோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்

2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்

3. யேகோவா ராஃபா எந்த நாளும்
எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்

4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்

Endha Nilayil Nan Irundhaalum

எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே

அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே --- எந்த

பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே --- எந்த

நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி நோகடிப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே --- எந்த

கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே --- எந்த

Ennai Anantha Thailathal


என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே - (4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (4)

வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே - (2)
அன்பின் ஆவியானவரே - (2) --- என்னை

உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே - (2)
அன்பின் ஆவியானவரே - (2) --- என்னை

Ellam Neer Thane yesu rajane

எல்லாம் நீர் தானே
இயேசு ராஜனே (2)

தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே --- எல்லாம்

என் பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே --- எல்லாம்

உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே --- எல்லாம்

எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பு நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே --- எல்லாம்

அர்ப்பணிப்பேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே
உம் ஆவி ஊற்றுமே
இன்று ஊற்றுமே - அப்பா
உம் அக்கினி ஊற்றுமே

நிரப்பிடுமே என்னை இன்றே
அப்பா உம் ஆவியாலே
உம் ஆவி ஊற்றுமே
இன்று ஊற்றுமே - அப்பா
உம் அக்கினி ஊற்றுமே

En Vaalvil Yesuve ennalum

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது
பாதங்கள் நீயாக வேண்டும் - எந்தன்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது
ஓடங்கள் நீயாக வேண்டும் - வரும் --- என்

2. போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும்போது
பாலங்கள் நீயாக வேண்டும் - இணை
தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்
பாடங்கள் நீயாக வேண்டும் - மறை --- என்

3. காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் - சுடர்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும் - மழை --- என்

Endhan Dhevanaal Endhan Dhevanaal

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்

1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே

2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும்

3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார்

4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் (2)
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார்

Endhan Nesar Yesu Nadha

எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்
உந்தன் அன்பால் ஏற்றுக் கொண்டு ரத்தம் சிந்தி ரட்சிப்பீர்
நேசர் மா பெரும் கிருபையை நானோ எப்போதும் மறவேன்

எந்தன் நேசர் இயேசு நாதா
உம்மில் அன்பு கூறுவேன்
நேசர் மா பெரும் கிருபையை
நானோ எப்போதும் மறவேன்

எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்
பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்
மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்
சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர் --- எந்தன்

இனி நான் என் வாழ் நாளெல்லாம் உம்மையே பின் செல்லுவேன்
நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்
சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்
என்னிலும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே --- எந்தன்

Oruvarum Sera Koodatha


ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) இயேசுவே
நீரே நீர் மாத்ரமே (ராஜனே) (2)
நீரே நீர் மாத்ரமே (எங்கள் தெய்வமே) (2)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)

எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே

உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே)
நீரே நீர் மாத்ரமே (3)

பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4)
பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (10)

Karthave En Belane

கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்

1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார்

2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே

3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
சதா காலமும் ஜெயம் எடுப்பேன்

4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையே

5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி
நீதியின் சால்வையை எனக்குத் தந்து
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்

KALANGINA NERANGALIL KAITHUKKI EDUTHAVARE

கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை

நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணையில்லை

1.தேவைகள் ஆயிரம் என் முன் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை, என்னோடு நீர் உண்டு
தேவையை காட்டிலும் பெரியவர் நீரல்லோ
நினைப்பதை பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ --- நீங்க

2.மனிதனின் தூஷனையில் மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு, தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை --- நீங்க

KARTHER NALLAVAR THUTHIYUNGAL


1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

மகிழ்ந்து பாடு அல்லேலூயா
புகழ்ந்து பாடு அல்லேலூயா
சேர்ந்து பாடு அல்லேலூயா
போற்றிப் பாடு அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
துதித்துப் பாடு அல்லேலூயா
களித்துப்பாடு அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா (18)

2. வானங்களை விரித்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பூமியைப் படைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சந்திரனைப் படைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

3. செங்கடலைப் பிளந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அரசர்களை அழித்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சேனைகளைக் கவிழ்த்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேசத்தைத் தந்தவரைத் துதியுங்கள்

4. தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

KARTHER EN MEIPERAI IRUKINDRARE


1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

2. ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்

3. மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

4. சத்துருக்கள் முன்பில் எனக்காக
பந்தி யொன்று ஆயத்தம் செய்தார்
என்னை தம் எண்ணையால் அபிஷேகித்து என்
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்