Friday, November 22, 2019

MANGALAM SATHA JEYA

மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா
அணைத்துக்காத்தவா – உல – கனைத்தும் படைத்தவா
இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா
யேசுநாயாகா – எம் – நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா
ஞானவாரியே – திரு – வானமாரியே
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா

MANITHA O MANITHA

மனிதா ஓ மனிதா 
நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் -2 
நினைவில் வை நினைவில் வை 
நினைவில் வை ஓ மனிதா 
இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்
இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம் 
இறைவனை நினைப்போம் அவர் வழி நடப்போம் 
இருள்தனைக் களைவோம் அருள்தனை அணிவோம் 
கல்லான இதயம் நமக்கினி வேண்டாம் 
கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும் 
சாம்பலும் ஒருத்தலும் ஜெப தபம் யாவும் 
சாவினை அழித்து வாழ்வினைக் கொணரும்

MAGIMAI DEVA MAGIMAI

மகிமை தேவ மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்

மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது

தேசங்கள் பெருங்கூட்டமாய்
கர்த்தரைத் தேடிவரும்
ராஜாக்கள் அதிகாரிகள்
ஆர்வமாய் வருவார்கள்

பெரும் பெரும் செல்வந்தர்கள்
வருவார்கள் சபை தேடி
தொழில் செய்யும் அதிபதிகள்
மெய் தெய்வம் காண்பார்கள்

ஐந்து வகை ஊழியங்கள்
சபையெங்கும் காணப்படும்
அப்போஸ்தலர் இறைவாக்கினர்
ஆயிரமாய் எழும்புவார்கள்

சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் தேசமாவான்
கர்த்தர் தாமே அவர் காலத்தில்
துரிதமாய் செய்திடுவார்

கடற்கரையின் திரள் கூட்டம்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கத்தோலிக்க சபையெங்கும்
அபிஷேக நதி பாயும்

அரபு தேசமெங்கும்
அபிஷேக மழை இறங்கும்
இஸ்லாமியர் பெருங்குகூட்டமாய்
இரட்சகரை அறிந்து கொள்வார்கள்

பாரதம் மீட்படையும்
துதியால் நிரம்பிவிடும்
நாசம் அழிவு கொடுமை எல்லாம்
தேசத்தில் இருப்பதில்லை

PESUM DEIVAM NEER

பேசும் தெய்வம் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

என்னைப் படைத்தவர் நீர்
என்னை வளர்த்தவர் நீர்
என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி
என்னோடிருப்பவர் நீர்

இயேசுவே -4

என் பாரம் சுமப்பவர் நீர்
என் தகம் தீர்ப்பவர் நீர்
என்னைப் போஷித்து என்னை உடுத்தி
என்னோடிருப்பவர் நீர்

என் குடும்ப வைத்தியர் நீர்
ஏற்ற நல் ஒளஷதம் நீர்
எந்தன் வியாதி பெலவீனங்களில்
என்னோடிருப்பவர் நீர்

என்னை அழைத்தவர் நீர்
என்றும் நடத்துபவர் நீர்
என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து
என்னோடிருப்பவர் நீர்

எனக்காய் வருபவர் நீர்
என் கண்ணீர் துடைப்பவர் நீர்
எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்து
என்னோடிருப்பவர் நீர்

POLLAADHA MANIDHAN

பொல்லாத மனிதன் பொல்லாத மனிதன்
நல்ல ஈவுகளை பிள்ளைக்குக் கொடுப்பான் - (2)
பரம பிதாவும் வேண்டுபவருக்கு
நன்மைகளாயிரம் நிச்சயம் தருவார் (2)
நன்மையகளாயிரம் நிச்சயம் தருவார்.

இயேசு சொன்னார், இதை இயேசு சொன்னார் (4)
அவர் வார்த்தை சத்தியம், நிறைவேறும் நிச்சயம் (2)

1) வேண்டுவதற்கும், நினைக்கிறதற்கும்
மிகவும் அதிகமாய் கர்த்தர் செய்திடுவார் (2)
தாவீதும், யாக்கோபும், சீலாவும், பவுலும்
வேண்டுதல் செய்தனர், பெற்று மகிழ்ந்தனர் (2)
வேண்டுதல் செய்தனர், பெற்று மகிழ்ந்தனர் - இயேசு

2) வாலாவதில்லை நீ, வாலாவதில்லை
தலையாக உன்னை மாற்றிடுவார் - (2)
அபிஷேகத் தைலத்தை உன் தலையில் ஊற்றுவார்
உன் பேரும் சிறந்திடும் உன் வாழ்வு மலர்ந்திடும் (2)
உன் பேரும் சிறந்திடும் உன் வாழ்வு மலர்ந்திடும் - இயேசு

3) நிச்சயமாகவே முடிவு தான் உண்டு
உன் நம்பிக்கை என்றும் வீணாய்ப் போகாது (2)
கவலைப்படுவதால், உயரம் தான் கூடுமோ?
இயேசு உன் அருகில் இருந்தால் சந்தோஷமே! (2)
இயேசு உன் அருகில் இருந்தால் சந்தோஷமே! - இயேசு

BETHALAYIL PIRANTHAVARAI

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்


1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்


2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்


3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்


4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்


5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

PUTHIYA PADAL PADI PADI

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே -எனக்கு

உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே -தினமும்

அதிசயமானவரே
ஆலோசனைக் காத்தரே
வல்லமையுள்ள தேவா
வரங்களின் மன்னவனே -எல்லா

கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே -இயேசு

மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் -அவர்