எதை நான் தருவேன் இறைவா
உன் இதயத்தின் அன்பிற்கீடாக
எதை நான் தருவேன் இறைவா
குறை நான் செய்தேன் இறைவா
பாவ குழியில் விழுந்தேன்இறைவா
கறையாம் பாவத்தை நீக்கிடவே
நீ கல்வாரி மலையினில் இறந்தாயோ
பாவம் என்றொரு விஷத்தால்
நான் பாதகம் செய்தேன் இறைவா
தேவனே உம் திரு பாடுகளால்
என்னை தேற்றிடவோ நீ இறந்தாயோ
அகிலமே அறிவால் அளந்தேன்
உன் அன்பையும் அறிந்து மறந்தேன்
மகிமை நிறைந்த என் இறைவா
நீ மனிதன் எனக்காய் இறந்தாயோ
No comments:
Post a Comment