Thursday, November 21, 2019

EN THAIVAM VAZHUM POOMIYITHU

என் தெய்வம் வாழும் பூமியிது
எத்துணை அழகு இது
உலகே கண்கள் திறவாயோ
உவகை இன்று காணாயோ
பரந்து விரிந்த உலகம் படைத்தவன் அன்பு இதயம்
உயர்ந்து விரிந்த வானம் படர்ந்த அவர்மனம் கூறும்
எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும்
பொங்கிடும் நீரின் ஊற்றும்
மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும்
மின்னலும் தன்னொளி நிலவும்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு –2
இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப்பருகு – என் தெய்வம்
நிறைந்த அன்புடை நெஞ்சம் நிலவென ஒளிதரும் அறிவும்
மலர்ந்த முகந்தனின் அழகும் மங்கா கலைகளின் வளமும்
என்றென்றும் உழைக்கும் தன்மான மாந்தர்
எங்கெங்கும் ஒன்றாகும் கரங்கள்
நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் குணங்கள்
நிம்மதி தேடிடும் மனங்கள்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு –2
எழில் கண்டு வணங்கு இன்பம் அள்ளிப்பருகு – என் தெய்வம்

ENN SIRUMAIYAI KANNOKKI PARTHAVARE

என் சிறுமையை கண்ணோக்கிபார்த்தவரே
என் எளிமையில் கைதூக்க வந்தவரே – 2

துரத்தப்பட்ட என்னை
நீர் மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரியஜாதியாய் மாற்றினீர்
பீர்-லகாய் ரோயீ

என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 2

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே – 2
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே – 2
பீர்-லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 2
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் – 2
வாக்குத்தத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர் – 2
பீர்-லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 2

BEER LAHAI ROI ENNAI KAANKINTRA DEVAN

என் சிறுமையை கண்ணோக்கிபார்த்தவரே
என் எளிமையில் கைதூக்க வந்தவரே – 2
துரத்தப்பட்ட என்னை
நீர் மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரியஜாதியாய் மாற்றினீர்

பீர்-லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 2

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே – 2
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே – 2
பீர்-லகாய் ரோயீ

என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 2
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் – 2
வாக்குத்தத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர் – 2
பீர்-லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 2

ENTHAN YESAIAH ENTHAN YESAIAH

எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்

1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன்

2. உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2) 
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன்

ETHAI NINAITHTHUM NEE KALANGATHEY

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார் – 2

1. இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2 (எதை)

2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார்

3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை

4. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை

5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்

6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்

7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்
எதையும் செய்திடுவாய்

ENNIL ADANGA STHOTHIRAM DEVA

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

1. பூமியில் வாழ்கின்ற யாவும்
அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான்தூதர் சேனைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே

2. சூரிய சந்திரரோடே
சகல நட்சத்திர கூட்டமும்
ஆகாயப் பறவைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே

3. காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுதே

4. பாவ மனுக்குலம் யாவும்
தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு
ஒயா துதி பாடுதே

UYIRODU UYIRAGA KALANTHAVARU

உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு
எங்க இயேசு (3) என்று சொல்லு
இதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லு
நம்ம இயேசு (3) நல்லா சொல்லு
தாயின் கருவில் தெரிஞ்சவரு
என் பேரை சொல்லி அழைச்சவரு
எனக்காக (3) மரித்தீரே
எனக்காக (3) உயிர்த்தீரே

1. பூமியில் வந்தாரே
அன்பை விதைத்தாரே
சந்தோஷம் தான் (2)
அன்று நடந்த அற்புதங்கள்
இன்று இங்கு நடக்கும் ஐயா
குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்
இயேசு மட்டும் எனக்கு போதும் – எனக்காக

2. கிருபை தருபவர் பெருக செய்பவர்
ஆராதிப்போம் (2)
யோசனை தந்து நடத்திடுவார்
பெரிய காரியம் செய்திடுவார்
உலகத்தை ஜெயித்தார்
சாத்தானை அழித்தார்
கண்ணீரைத் துடைத்து சுகம் கொடுப்பார் – எனக்காக

3. உன்னைப் படைத்தவர் என்னைப் படைத்தவர்
அழகானவர் (2)
ஏந்தி தூக்கி சுமந்தார் ஐயா
கண்மணி போல் காத்தார் ஐயா
நீயும் நானும் அவரின் சொந்தம்
உலகத்தை நாமும் கலக்கிடுவோம் – எனக்காக

URUGATHO NENJAM AVAR THAANE

உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்
உனக்காக பலியாக வந்தார் - கலங்காதோ
கண்கள் வழியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியைக் கண்டு

நடமாட முடியா தடுமாறிக் கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்று
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாடச் செய்த தாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்
கதறிய மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கருணையாய் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அது தான் சிலுவையின் பரிசே

இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிகின்ற ஆத்மா
பாவத்தை நீக்கி பாவியை மீட்டு
இரட்சிப்பின் வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

URUGATHO NENJAM

உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு

1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

UMMAIYALLAAMAL ENAKKU YAARUNTU UMMAI THAVIRA

உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு 
உம்மைத் தவிர விருப்பம் எதுவுண்டு 
ஆசையெல்லாம் நீர் தானையா 
தேவையெல்லாம் நீர் தானையா 
இரட்சகரே யேசு நாதா 
தேவையெல்லாம் நீர் தானே 
இதயம் கன்மலை நீர்தானையா 
உரிய பங்கும் நீர்தானையா 
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் 
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 
(ஆசையெல்லாம் நீர் தானையா )
உம்மோடு வாழ்வது என் பாக்கியம் 
நீரே எனது உயிர் துடிப்பு 
உமது விருப்பம் போல் நடத்துகிறீர் 
முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வீர்
(ஆசையெல்லாம் நீர் தானையா )

உலகில் வாழும் நாட்களெல்லாம் 
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் 
உம்மைத்தான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன் 
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் 
(ஆசையெல்லாம் நீர் தானையா )

UMMAIYALLAMAL ENAKKU YARUNDHU

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
என் இயேசய்யா அல்லேலுயா

இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர் தானே

என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர் தானே

இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளும் ஐயா நீர் தானே

UMMAI POL YARUNDU

உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா 
இந்தப் பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு? 
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் 
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் 

1. உலகம், மாமிசம், பிசாசின் பிடியில் 
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன் 
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன் 
மனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன் 
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா? 
உம்மை மறந்த ஓர் துரோகி நான் 
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா? 
அடிமை உமக்கே இனி நான். 

2. இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை 
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும் 
நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும் 
உமக்கே உகந்த தூய சரீரமாய் 
ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும் 
இயேசுவே ஆவியால் நிரப்பும் 
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ 
அக்கினி என் உள்ளம் இறக்கும் 

3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும் 
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும் 
மேசியா வருகை வரையில் பலரை 
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும் 
முழங்காலில் நிற்க, வேதத்தை அறிய 
தினந்தோறும் தேவா உணர்த்தும் 
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் 
என்றுமே வராமல் காத்திடும்

UMMAI POLA DEIVAM ILLAI

உம்மை போல தெய்வம் இல்லை 
நீர் இல்லை என்றால் நானும் இல்லை 
உம்மை போல தெய்வம் இல்லை
உங்க அன்பிற்கு அளவே இல்லை
கண்ணில் கண்ணாய் வாழும் முல்லை (2)
உங்க அன்பிற்கு அளவே இல்லை (2)


உம்மை போல தெய்வம் இல்லை 
நீர் இல்லை என்றால் நானும் இல்லை 

முள்ளின் பாதையில் நடந்தேன் நான் 
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான் x(2) 
நீர் இல்லா மீனை போல துடித்தேன் நான் 
தாய் இல்லா பிள்ளை போல் அழுதேன் நான் x(2) 
மார்போடு அணைப்பாரே 
ஒரு தாயை போல் காப்பாரே x(2) 

உம்மை போல தெய்வம் இல்லை 
நீர் இல்லை என்றால் நானும் இல்லை

UM PAATHAM PANINTHEN

உம் பாதம் பணிந்தேன்

பல்லவி 

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 

சரணங்கள்

1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் --- உம்பாதம்

2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால் 
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் --- உம்பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் --- உம்பாதம்

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே --- உம்பாதம்

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் --- உம்பாதம்

6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் --- உம்பாதம்

7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் --- உம்பாதம்