Monday, April 13, 2020

UMAKKU NANDRI APPA

உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா 

1. நாம் கேட்பதற்கு மேலாக
நன்மை தருபவரே
நாம் நினைப்பதற்கு மேலாக
கிரியை செய்பவரே
எல்ஷடாய் நீங்கதானே வல்லமை உடையவரே 
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா 

2. யோர்தானை கடக்கும் போது
எங்கள் கரங்களை பிடித்தவரே
எரிகோவை தகர்த்திடவே
உந்தன் சமூகம் முன் செண்டதே 
யெகோவா ஷம்மா நீரே கூட இருப்பவரே
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா

YESU KRISTHUVIN ANBU ENDRUM

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை 
என்றும் குறையாதது

இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை 
என்றும் குறையாதது
இயேசு கிறிஸ்துவின் அன்பு…….

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார் 
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே (2)
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2)
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (இயேசு. )

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் (2)
உனக்காகவே அடிகள்பட்டார் 
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2) 
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்(இயேசு. )

UNGA NANMAIYAL THIRUPTHIYAAGA

உங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன்
உங்க பிள்ளையாய் நான் உம்மை எதிர்பார்த்திருப்பேன்
தேவைகள் சந்திக்கும் என் யெகோவா நீரே
கூப்பிடும் போது எனக்கு துணையாவீரே

குப்பையிலிருந்து எளியவனை தூக்கி
பிரபுக்களோடு உட்கார வைத்தீர்
ஆழத்திலிருந்து பாவியென்னை தூக்கி
கன்மலைமேலே உயர்த்தி வைத்தீர்
நல்லவரே நீதியின் சூரியனே
நித்தியமானவரே நிரந்தரம் நீர்தானே
ஏற்ற நேரத்தில் நன்மைகள் தருவீரே
தேவைகள் வரும்போது என்னோடு வருவீரே - நன்மையால்

வனாந்திரங்கள் வயல்வெளியாகும்
வெட்டாந்தரைகள் நீர் தடாகமாகும்
சோதனை காலம் சூழ்ந்திருந்தபோதும்
செழிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் துளிர்க்கும்
காற்றை கவனித்தால் விதைத்திட முடியாது
மேகத்தை பார்த்திருந்தால் அறுத்திட முடியாது
மலைகள் விலகினாலும் கிருபைகள் விலகாது
பர்வதம் பெயர்ந்தாலும் வார்த்தைகள் மாறாது - நன்மையால்

UNNATHA DEVAN UNNAI ALAIKIRAR

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
நம்பியே வந்திடுவாய் 
சிலுவை சுமந்தே
உனக்காய் அவர் மரித்தாரே 

பாவத்தில் அழியாதே
தேவனை மறவாதே
இருதயத்தை தட்டுகிறார்
இன்றதை திறந்தளிப்பாய் 

இன்று உன் ஜீவன் போனால்
எங்கு நீ சென்றிடுவாய்
இந்த வேளை சிந்தனை செய்
இயேசு உன்னை அழைக்கிறாரே 

நரகத்தின் பாதையிலும்
மரணத்தின் வழிகளிலும்
உல்லாசமாய் நடப்பது ஏன்
உண்மையாய் அழிந்திடுவாய் 

தம்மிடம் வருபவரை
தள்ளிடவே மாட்டார்
அன்புக்கரம் விரித்தவராய்
ஆண்டவர் அழைக்கிறாரே

UNDRAN SUYAMATHIYAE NERI ENDRU

உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே; – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே.

1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்.

2. சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ,
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு.

3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே.

4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றென்னாதே அதொண்ணாதே.

5. நான் என்னும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்.

AVAR ARPUTHAMAANAVARAE ENAI MEETENNAI

அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே


2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்


3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்


4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்

ALAIYOLIR ARUNANAI ANINTHIDUMA

அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ
வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்
அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌
வல்ல உன் மகனிடம் கேள்

Saturday, April 11, 2020

THAAI MARANDHALUM AVAR UNNAI

தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை-2

ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா
பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை கைவிட்டாலும்-2
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
உன்னை ஒருபோதும் மறப்பதில்லை 

நம்பினோர் கைவிட்டாலும்
நண்பர்கள் விலகிட்டாலும்-2
நல்ல நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே
உண்மை நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே 

அன்பானவர் மறைந்தாரோ
ஆதரவை இழந்தாயோ-2
ஆறுதலின் தேவன் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்
உண்மை தேவன் நம் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் 

தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் நம்மை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை
அவர் ஒருபோதும் மறப்பதில்லை
இயேசு ஒருபோதும் விடுவதில்லை

REHOBOTH EN VAAKKUTHTHATHTHAME

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-இயேசுவே-2-ரெகொபோத்

SENAIGALIN KARTHAR NAMMODU IRUKIRAAR

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2
அவர் சொல்ல எல்லாம் ஆகும்
அவர் கட்டளையிட நிற்கும்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

1.நான் கெம்பீரமாய் நடக்க
என் பாதையை அகலமாக்கினீர்
நான் விசாலத்தில் தங்கிட
என் எல்லையை பெரிதாக்கினீர்-2
என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு
அதிகாரமாய் பெருகிற்று-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

2.என் விருப்பங்கள் நிறைவேற்றிட
நான் செய்வதை வாய்க்க செய்தீர்
என் கனவுகள் நிறைவேறிட
நீர் வாசலை திறந்து வைத்தீர்-2
எனக்கு முத்திரை மோதிரம் தந்து
உங்க வார்த்தையை நிறைவேற்றினீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

3.நான் வாழ்ந்து செழித்திருக்க
நீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர்
நான் சிங்காசனத்தில் அமர
நீர் எனக்காய் யுத்தம் செய்வீர்-2
எனக்கு எதிரான கையெழுத்தை
முற்றிலும் குலைத்திட்டீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

YESU ENAKKU JEEVAN THANDHAARE

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4

சமாதானம் தந்தார் இயேசு -4
புது வாழ்வு தந்தார் இயேசு -4
விடுதலை தந்தார் இயேசு -4
வல்லமை தந்தார் இயேசு -4
அபிஷேகம் தந்தார் இயேசு -4

YESUVIN NAAMAM ELLAVATTERKUM

இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்

எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்

வல்லமைக்கும் கர்த்தத்துவத்துக்கும்
இம்மையிலும் மறுமையிலும்

ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்

ARULE PORULE AARANAME

அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே
இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந்தொடராமல்
மருண்டு மனது பிறழாமல், வஞ்சத் தொழிலிற் செல்லாமல்
கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொரு கோடி

சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்கு செய்துவந்த
நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,
என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்து
கன்று நினைந்து கதறுதல்போல் கழறுந் துதியுனக் கொரு கோடி

பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!
வற்றாஞான சமுத்திரமே வடுவொன்றில்லா வான் பொருளே!
பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக்
கற்றில்லாத மிகச்சிறியேன் கழறுந் துதியுனக் கொரு கோடி,

பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தே யென்றும் வாழ்ந்திருக்க,
நத்தும், இரவு முழுதனைத்தும் நாதா, என்னைக்காத்தருளி
முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன் தன்னைச் சேர்க்கக்
கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக் கொரு கோடி

ASIRVATHIKKUM DEVAN THAM ASIR

ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருக செய்வார் இவ்வருடம்


பெலத்தின்மேல் பெலனே
கிருபையின்மேல் கிருபை
மகிமையின்மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில்


1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு


2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுதே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு


3. ஆத்தும பாரம் பெருகிடுதே
ஊழியம் தீவிரம் அடைந்திடுதே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிது

AAR IVAR AARAARO INDHA

ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?
1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப் பொருள் தானிவரோ ? 
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த 
மாவலரோ ? — ஆர்
2. மேசியா இவர்தானோ ? – நம்மை – மேய்த்திடும் நரர்கோனோ ? 
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? — ஆர்
3. தித்திக்குந் தீங்கனியோ ? – நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? — ஆர்
4. பட்டத்துத் துரைமகனோ ? – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ ? — ஆர்
5. ஜீவனின் அப்பமோதான் ? – தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ ? — ஆர்