Saturday, March 28, 2020

UNGA KIRUBAI ENNAI ALAITHAVARAE

என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
நீர் இல்லாமல் நான் இல்லையே -2

நான் வாழ்ந்தது உங்க கிருபை
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே -2
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாம
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல -2
கதறி அழுத நேரத்தில்
என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாம
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல -2
தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாம
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

ENGAL ANBIN AVIYANAVARE

எங்கள் அன்பின் ஆவியானவரே
எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே - 2
இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே
உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன் - 2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன் -2

சோர்ந்து போன நேரம் எல்லாம்
எந்தன் துணையை தேற்றரவாளனே - 2
பெலவீனத்தில் உதவி செய்பவரே
அன்பின் ஆவியே என் அச்சாரமே - 2
ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன் - 2

நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்
நீர் இல்லாத நொடியும் வேண்டாம்
நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே- 2
உந்தன் கரம் ஒன்று போதுமே
உம்மோடு நான் என்றும் வாழுவேன்
ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன்

UMMEL VAANJAIYAI IRUPATAHANAL

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில்

இயேஷுவா இயேஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன்
ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அளிப்பீர் வெகு விரைவில்
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்
வேடனின் கண்ணி பாழாக்கும்
கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர்
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்துக் கொள்வீர்

KAARIYATHAI KAIKOODI VARAPPANNUVAR

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2
இது கிருபையின் நேரம், மகிமையின் ஆண்டு
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2
அல்லேலூயா அல்லேலுயா
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4

1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2
கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)

2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே & 2
கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)

THAGUVATHU THONAATHU YERKINDRAVAR

தகுவது தோணாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்று நாடாதாவர்
வாடிப்போனோரை நாடித்தான் சென்று
மூடிச்சிறகினில் காப்பவர்
அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..
என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா
பல்கால் யாக்கையில்
என் கால் தவறியும்
ஒருக்கால் விலகாது
மால்வரை சுமந்தார்-2
வழி தொலை கொடுத்தாய்
உழிதனை இழந்தாய் என
பழி சொல்லும் மாந்தர் முன்
செழி என ததும்பிடும் எந்தை
ஏகாதாவர்…….
ப நி ச ரி ம ப….
ரி க க ரி ம க ரி….

UM SITHTHAM DEVAA NADAPIYUM

உம் சித்தம் தேவா, நடப்பியும்
நான் ஓர் மண்பாண்டம்
உம் கையிலும்
உம் பாதத்தண்டை காத்திருக்கும்
என்னை உம் சித்தப்படி மாற்றும்

2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
என் இதயத்தை ஆராயுமே
உம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்
என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்

3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
காயப்பட்ட என்னை நோக்குமே
எல்லாம் வல்ல என் ஆண்டவரே
என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்

4. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட
என்னை உம் ஆவியால் நிரப்பும்!

UM SITHTHAM NIRAIVERA

உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்
இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன
படைக்கிறேன் இயேசுவே

உங்க முகத்தைப் பார்க்கனும்
இன்னும் உமக்காய் எழும்பனும்
உங்க கூட பேசணும்
என்னைத் தருகிறேன் இயேசுவே

பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன்
உம்மை விட்டு தூரப் போனேன்
உம் அன்பை எனக்கு தந்தீரே
உம் மகனாய் என்னை மாற்றினீரே

உலகின் அன்பு எல்லாம் மாறின போதும்
மாறாது ஒருபோதும் உம் அன்பு
சிலுவையில் பலியானீரே
என்னை உயர்த்தி வைத்தவரே
ஆராதனை என் இயேசுவுக்கே

Sunday, March 8, 2020

ELUNTHAR IRAIVAN JEYAME

எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்


2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்


3. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்


4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்


5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
போதுமே நன்மைபுரி நேயன் – தப்
பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்

GEETHAM GEETHAM JAYA JAYA

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு
ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்

பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன்

வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுவோம் -தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு

அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா
பூதகணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்

வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரர் - நம்
மேளவாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழுங்கிடுவோம்

Wednesday, March 4, 2020

THAMANDAI VANTHA BAALARAI

தம்மண்டை வந்த பாலரை 

1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.

2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

THAAVEETHIN THIRAVUGOLAI UDAIYAVARE

தாவீதின் திறவுகோலை உடையவரே 

என் முன்னே செல்பவரே 
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசல் திறந்த வாசலானீர்


நன்றி நன்றி இயேசு ராஜா 
சமாதானபலியானீரே x(3)


தைரியமாக கிருபாசனதண்டை 
நடனமாடி பிரவேசிக்கின்றேன் x(2)
உன் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் x(2)


நன்றி நன்றி இயேசு ராஜா 
சமாதானபலியானீரே x(3)


ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவோம்
இரத்தத்தினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன்

THUNBAM UNNAI SOOLNTHALAI

துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
பல்லவி
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி

2. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்

DEVANA EN NANBANE

தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)

சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)

1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே

2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே

3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே

DEVA PRASANNAM ENNAI MOODUM

தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்
என் வாழ்வில் ஆனந்தமே

வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம்
மணவாளனின் பிரசன்னமே

நான் தனிமையில் நிற்கும் போது
உம் பிரசன்னம் துணையானதே
நான் சோர்புற்ற வேளைகளில்
உம் பிரசன்னம் பெலனானதே

நான் கலங்கின காலங்களில்
உம் பிரசன்னம் களிப்பானதே
என் துக்கத்தின் நேரங்களில்
உம் பிரசன்னம் பேரின்பமே