எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன் -- (2)
ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே -- (எந்த காலத்திலும்)
துன்ப நேரத்தில் இன்பமே அவர்
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் -- (எந்த காலத்திலும்)
தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் என் சர்வமும் நீரே -- (எந்த காலத்திலும்)
No comments:
Post a Comment