Tuesday, November 12, 2019

DHEVA SAYAL THANDEERE

தேவ சாயல் தந்தாரே
தேவ ரூபம் தந்தாரே
மண்ணுக்குரிய என்னை
விண்ணுக்குரியவனாக்கவே!

பல்லவி 
ஆ... அதிசயமே! ஆ... அற்புதமே!

சரணங்கள்

1) விட்டாரே விண்ணை அன்பினாலே
வந்தாரே அடிமையின் ரூபமாக
மன்னிப்போடு, இரட்சிப்பையும் ஈந்தாரே
அப்பா பிதாவே, உமது அன்பு பெரியதே.

2) தங்கிடவே என்னில் என்றுமாக
வனைந்தாரே உகந்த பாத்திரமாய்
மதுரமான மொழியினால் தேற்றினாரே
தேவாதி தேவனின், பாசம் பெரியதே

3) உன்னதத்தின் பெலத்தினால் உள்ளமதை
உருவாக்கினாரே என்னை அவரைப் போல
பெலத்தின் மேல், பெலத்தினால் இடைகட்டியே
கர்த்தாதி கர்த்தரின், கிருபை பெரியதே

4) நித்தியமான வாசஸ்தலம் அவருடனே
என்றென்றும் மகிழ்வேன் மார்பினிலே
கிருபையோடு, காருணியமும் காண்பித்தாரே
ராஜாதி ராஜனே, உம் தயவு பெரியதே

No comments: