Monday, October 28, 2019

ATHIKAALAI NAERAM AANTAVAR SAMUUKAM

சுவிசேஷம் பரவட்டும்

1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அமைதலாய் காத்திருப்பேன்
என் இயலாமை மௌனம் அறிவிக்க
அவரைப் போலாவேன்

2. வடதிசை வாழும் என் குடும்பம்
உடன் என் நினைவில் கலந்துவிடும்
தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
வல்லமை தேவன் வெளிப்படுவார்

3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார்

4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து
மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்

UM SIRAGUGAL NILALIL ENNALUM

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா !
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் – 2

உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா!
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் -2

கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் -2
வலையினில் விழுகின்ற பறவை – அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை

MAAYAIYANA INDHA ULAGINILE

மாயையான இந்த உலகினிலே
பாவியான என்னைத் தேடி வந்தீரே
நீர் இல்லா வாழ்க்கை
இனி வாழ்க்கை இல்லை
நிலையில்லாத இந்த உலகினிலே
கால்களை உறுதியாக்கினீரே
உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
எங்கே செல்வேன்

தேனிலும் இனிமையானவரே
பாடலில் ராகமுமானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே நாங்கள் பாடவே

எளிமையான எந்தன் வாழ்வினிலே
மகிமையைத் தந்த மகத்துவரே
நீர் இல்லா வாழ்க்கை
இனி வாழ்க்கை இல்லை
தூய்மையாய் என்னை மாற்றுகிறீர்
செம்மையான வழியில் நடத்துகிறீர்
உம்மைவிட்டு நானும் எங்கே
செல்வேன் செல்வேன்
நீர் இல்லா வாழ்க்கை
வாழ்க்கையே இல்லை
அங்கும் இங்கும் அலைந்தபோதும்
நிம்மதி இல்ல
உம்மையே நானும் பற்றிடுவேனே
இன்பத்திலும் துன்பத்திலும்
நம்பிடுவேனே

ARUL MALAI POLINDHARULUM LYRICS

அருள் மழை பொழிந்தருளும்

1. இந்த அருள் காலத்தில் கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்

2. தீர்ப்பு நாள் வருமுன்னே எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே

3. மோட்ச வாசல் இயேசுவே பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே. 

4. உந்தன் இரத்த வேர்வையால்ää செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்தால் 

5. சீயோன் நகர்க்காய் கண்ணீர் விட்டதாலும் தேவரீர்
எங்கள் மெல் இரங்குவீர்

6. நாங்கள் உம்மைக் காணவே அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும் இயேசுவே

DEVA IRAKKAM ILLAIYO LYRICS

தேவா, இரக்கம் இல்லையோ?

பல்லவி

தேவா, இரக்கம் இல்லையோ? - இயேசு 

தேவா, இரக்கம் இல்லையோ? 




அனுபல்லவி

ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின் 

மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே --- தேவா 




சரணங்கள்

1. எல்லாம் அறிந்த பொருளே - எங்கள் 

இல்லாமை நீக்கும் அருளே - கொடும்

பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்

கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! --- தேவா




2. எங்கும் நிறைந்த ஜோதியே - ஏழைப்

பங்கில் உறைந்த நீதியே - எங்கள் 

சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்

துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி ! --- தேவா 




3. வேதாந்த வேத முடிவே - ஜெக

ஆதாரம் ஆன வடிவே - ஐயா,

தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே - யேசு

நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை --- தேவா 

KARTHER MEL BAARATHAI VAITHU

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்

நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்?

வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்

KARTHAR MEL NAMBIKAI VAIKUM

கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்

உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்

நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை

THOTTU PAKKA AASAIYE

தொட்டு பாக்க ஆசையே
உம்மை தொட்டு பாக்க ஆசையே
வஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்
தொட்டு விட ஆசையே
உங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சி
முத்தம்மிட ஆசையே

ஆசையே -4
இயேசுவே -4

நன்றி சொல்ல ஆசையே
உமக்கு நன்றி சொல்ல ஆசையே
இதுவரை தாங்கினீர்
இனிமேலும் ஏந்துவீர்
நன்றி சொல்ல ஆசையே
என் துக்கத்தை எல்லாம்
சந்தோஷமாய் மாற்றினீர்
நன்றி சொல்ல ஆசையே

ஆராதிக்க ஆசையே
உம்மை ஆராதிக்க ஆசையே
பாவியாக இருந்தேன்
பரிசுத்தம் ஆக்கினீர்
ஆராதிக்க ஆசையே
தள்ளப்பட்டு இருந்தேன்
கன்மலை மேல் வைத்தீரே
ஆராதிக்க ஆசையே

MEI BAKTHARE NEER VILITHELUMBUM

1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்.

2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே.

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்.

6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்.

MELLIYA PAADAL ONDRU NAAN

மெல்லிய பாடல் ஒன்று நான் பாடுவேன் 
மீட்பராம் இயேசுவையே நான் உயர்த்துவேன் 
உன்னத தேவனுக்கு நான் பாடுவேன் 
எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன் 

வழுவாமல் என்னை காப்பவரே 
மார்போடு அணைத்தென்னை தேற்றுவாரே 
தம் தோளில் சுமந்தென்னை தாங்குவாரே 
நெருக்கத்தின் கண்ணீரை துடைப்பாரே 

போற்றுவேன் (நான்) போற்றுவேன் 
என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆ 
என் உயிருள்ள நாளெல்லாம்-2 

என்னை நடத்திடும் தந்தை நீரே 
என்னை தழுவிடும் தாயும் நீரே 
என்னை புரிந்திட்ட நண்பன் நீரே 
என்னை சூழ்ந்திட்ட சொந்தம் நீரே 

எந்தன் குற்றமெல்லாம் மன்னித்தீரே 
எந்தன் நோய்களெல்லாம் குணமாக்கினீர் 
என் உயிரை அழிவுக்கு விலக்கினீரே 
என்னை இரக்கத்தால் முடிசூட்டினீர் 

போற்றுவேன் (நான்) போற்றுவேன் 
என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆ 
என் உயிருள்ள நாளெல்லாம்-2 

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே 
குறைவு என் வாழ்வில் இனி இல்லையே 
எந்த பொல்லாப்புக்கும் பயப்படேனே 
கர்த்தராம் தேவன் எந்தன் கூட உண்டே 

சத்ருக்கள் முன்பாக அபிஷேகித்தீர் 
எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர் 
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம் 
நன்மையும் கிருபையும் தொடர செய்தீர் 

போற்றுவேன் (நான்) போற்றுவேன் 
என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆ 
என் உயிருள்ள நாளெல்லாம்-2

MUGAMALARINTHU KODUPAVARAI KARTHAR

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்

1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம்

2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்

3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே

4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்