Wednesday, April 16, 2025

Pradhana Aasariyarae பிரதான ஆசாரியரே எங்கள்

 பிரதான ஆசாரியரே எங்கள்

பிரதான ஆசாரியரே

யெஷுவா -8
எங்கள் பிரதான ஆசாரியரே

ஒரே தரம் பலியிடப்பட்டதனால்
என்றென்றும் பூரணப்படுத்தினீரே
எங்கள் பிரதான ஆசாரியரே

இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற
கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர
கிருபை செய்தவரே
எங்கள் பிரதான ஆசாரியரே

தோளிலே எங்களை சுமப்பவரே
இதயத்தில் எங்களை பொறிந்தவரே
நியாபக குறியாய் வைப்பவரே
எங்கள் பிரதான ஆசாரியரே

பாவம் இல்லாத ஆசாரியரே
என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே
உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
எங்கள் பிரதான ஆசாரியரே

Puthiyulla Isthree Than Veetai புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்

 புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்

புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்

கணவன் தலையில் கிரீடம் கீழ்ப்படிகிற மேடம்
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி ஆகிறாள்
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்

நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு
இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து மகிழ்கிறாள்

பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில் சிறப்பு
வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல
இவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள்
அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்

Puthu Vaazhvu Vaazhnthiduvaen புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

 புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனைப் பாடிடுவேன்

தேவன் தந்த வார்த்தையே
ஜீவன் வல்லமை தரும்
எந்நாளும் அதையே முற்றிலும் நம்பி
நல் வாழ்வு வாழ்ந்திடுவேன்

இதயத்தில் விசுவாசித்தேன்
என் வாயினால் அறிக்கை செய்தேன்
முப்பது அறுபது நூறத்தனையாய்
மகிழ்வோடு அறுத்திடுவேன்

என் தேவன் இவ்வாண்டிலே
பெரும் காரியம் செய்திடுவார்
என் மூலம் அவர் தம் நாமத்தினையே
மகிமைப்படுத்திடுவார்

Povi Aazaha Vanthavare புவியாள வந்தவரே

 புவியாள வந்தவரே

பாவ நாசம் நீக்கிடவே
இருள் யாவையுமே அகற்றி நீங்கவே
புதுவாழ்வு அளித்திட வந்தவரே

ஆயர் குடிலை தேடி வந்தோர்
அவனியை தீர்க்கும் பாலகன் இவரே
அதிசயம் செய்யும் தெய்வம் இவரே
அவனியிலுள்ளோரே வணங்கிடுவோம்

வேதம் கூறும் ஜோதி விளக்காய்
தன்னொளி வீசிட பூவினில் பிறந்தார்
இழந்ததை நாடி தேடி வந்தோர்
அற்புத பாலனைத் தொழுதிடுவோம்

மாளிகையில்லை மஞ்சமில்லை
ஏழைத் தொழுவில் இறைமகன் உதித்தார்
முன்னனை பாலகன் மேசியா இவரே
வல்லப் பிதாவை பணிந்திடுவோம்

Ragasiyamai Oru Varugai ரகசியமாய் ஒரு வருகை

 ரகசியமாய் ஒரு வருகை

அனைவரும் காணும் ஒரு வருகை
இரண்டுக்கும் நடுவே உபத்திரவம்
அதன் நடுவில் மகா உபத்திரவம்

சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவே
வருகிறார் இரகசியமாய்
சபையை தம்மோடு அழைத்து வருகிறார்
வெளியரங்கமாய்
நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதே
அதில் மிகுதியாய் பாடுகள் புவியில்
தோன்றுதே

நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய்
மாறிடுவோம் இரகசியமாய்
ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம்
வெளியரங்கமாய்
கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொரு
சாதனைதான்- இந்த
இரட்சிப்பை நீ அசட்டைசெய்தால் நரக
வேதனைதான்

ஆரவாரத்தோடும் தூதன் சத்தத்தோடும்
எக்காளதொனியோடும் இறங்கி வருகிறார்
யாரும் அறியா நேரம் இவைகள் நடந்தேறும்
காத்திருந்தால் உன்னை அழைத்துச் செல்லுவார்
இது ரகசிய வருகை
ஒரு அதிசய வருகை

தீர்க்கதரிசி சொன்ன இறுதி ஏழு வருடம்
அந்திகிறிஸ்து தன்னை உயர்த்திக் கொள்கிறான்
மூன்றரை ஆண்டு காலம் முடிந்த பின்னே அவனும்
பாழாக்கும் அருவருப்பை உயர்த்தி வைக்கிறான்
அதை கண்கள் யாவும் காணும்
அது முடிவு நெருங்கும் காலம்

இயேசுவே ரட்சகர் என்பதை நம்பி நீ
மன்றாடி மன்னிப்பை பெற்றுக்கொள் இன்றே நீ
குற்றங்கள் ஒப்புக்கொள் வாழ்க்கையை மாற்றிக்கொள்
வேறொன்றும் வேண்டாமே வேண்டுதல் கேட்பாரே
இன்றைக்கே வந்தாலும் ஆச்சரியம் இல்லையே
ஆயத்தமாக நீ நின்றாலே தப்பித்தாய்
சட்டென்று செல்லுவாய் கர்த்தரை சந்திப்பாய்
மேகத்தில் உன்னைப்போல் நம்பினோர் நிற்பாரே
இயேசுவை நம்பாமல் இரட்சிப்பு இல்லாமல்
மோட்சத்தை எண்ணாதே மோசமாய் போகாதே
யாக்கோபின் கஷ்டத்தை சந்திக்க நாடாதே
சாத்தானின் முத்திரை பெற்றுத்தான் மாளாதே
நித்திய அக்கினி உனக்கு வேண்டாமே
சத்திய வேதத்தின் வார்த்தையை நம்பியே வா

பரலோகம் ஒருபுறத்தில்
பாடுகள் புவியில் மறுபுறத்தில்
விழிப்புடன் இருந்தால் நீ பிழைத்திடுவாய்
வரப்போகும் ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வாய்

 

Rathathaal Ennai Moodi இரத்தத்தால் என்னை மூடிக்

 இரத்தத்தால் என்னை மூடிக்கொள்ளும்

இரத்தத்தால் என்னை மறைத்துக் கொள்ளும்
இயேசுவின் இரத்தம் எங்கள் பாதுகாப்பு
இயேசுவின் இரத்தம் ஜெயம் தருமே

கல்வாரி இரத்தம் என் மேலேயுள்ளது
மின்னும் சுடரொளிப் பட்டையமே
சாத்தான் என்னை நெருங்காமல்
அக்கினி வேலி அடைத்துக் கொள்வேன்

எகிப்திலே சங்காரம் நடந்தபோது
இஸ்ரவேல் ஜனங்களை மீட்ட இரத்தம்
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்த
தேவாட்டுக் குட்டி இயேசு இரத்தம்

பஸ்காவின் இரத்தம் பரிசுத்தமானது
வீடுகள் நிலைக்காலில் பூசிக் கொள்வோம்
எங்கள் குடும்பங்கள் சபைகளில் தெளித்துக்கொள்வோம்
பாளயம் முழுவதும் காவல் செய்வோம்

Sabaiyai Katukiraar சபையை கட்டுகிறார்

 சபையை கட்டுகிறார்

இயேசு சபையை கட்டுகிறார்
உண்மை கடவுள் இயேசு
தனது சபையை கட்டுகிறார்
தூய ஆவி சக்தியாலே
கட்டி எழுப்புகிறார்

மனிதனுடைய அறிவினாலே
சபையை கட்டவில்லை
புத்திசாலித்தனத்தினாலும்
சபையை கட்டவில்லை
ஆவியானவரின் வல்லமையாலே
சபையை கட்டுகிறார்
பாவிகளை மனம் மாற்றி
கட்டி எழுப்புகிறார்

மாயாஜால மந்திரங்களால்
சபையை கட்டவில்லை
மதவாத தந்திரங்களால்
சபையை கட்டவில்லை
நோயை நீக்கி பேயை ஓட்டி
சபையை கட்டுகிறார்
மனதுக்குள்ளே நிம்மதி
தந்து கட்டி எழுப்புகிறார்

தீவிரவாதம் காட்டி மிரட்டி
சபையை கட்டவில்லை
அரசாங்க அதிகாரத்தால்
சபையை கட்டவில்லை
நம்பிக்கை வைக்கும் மக்களை வைத்து
சபையை கட்டுகிறார்
சாட்சியாக நிற்போரை வைத்து
கட்டி எழுப்புகிறார்

Samathanam Venduma Jebam Seiyom சமாதானம் வேண்டுமா

 சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்

சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம்
நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம்

முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
முடியாது என்று ஒன்றுமில்லை
வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால்
வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை

வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம்

எலியாவும் ஒரு மனிதன்தான்
ஜெபித்திட மழை மறைந்ததே
மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
நின்ற மழை அன்று பொழிந்ததே

விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்

வானவரே விண்ணப்பம் செய்யும்போது
மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட – அவர்
சித்தப்படி என்றும் நடந்திட

மனத் தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
உயிர் உள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்

Santhosam Santhosam Santhosame சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

 சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

இயேசுவின் பாதத்திலே சந்தோஷமே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆண்டவரைத் துதிப்போம் எந்நாளுமே

உன்னதமானவர் பலத்தோடு
வாழும் நாளெல்லாம் சந்தோஷமே
உழைக்கும் உயர்வை அளிக்கும் தேவ
வல்லமை இருப்பதால் சந்தோஷமே

சர்வ வல்ல தேவன் இயேசு
நம்மோடு இருப்பாதால் சந்தோஷமே
சருக்கும் எதிரியை நொறுக்கும் தேவ
பட்டயம் இருப்பதால் சந்தோஷமே

கர்த்தாதி கர்த்தர் இயேசு தேவன்
கரத்தில் நாம் இருப்பதால் சந்தோஷமே
காக்கும் துயர் நீக்கும் இயேசு
நாமத்தைத் துதிப்பதால் சந்தோஷமே

Santhosamaayirunga Eppoluthum சந்தோஷமாயிருங்க – எப்பொழுதும்

 சந்தோஷமாயிருங்க  எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும்
நம்மைக் காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

விசுவாச ஓட்டத்திலும்
ஊழியப் பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

என்னதான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க

Senaigalin Karthar சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

சேராபீன்கள் கேரூபீன்கள் வாழ்த்தும் பரிசுத்தர் பரிசுத்தரே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

பட்சிக்கும் அக்கினி பாவங்களைத் தண்டிக்கும்
பரிசுத்த தேவன் அவரே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

பயப்படுவோம் இயேசு நாமத்திற்கு
நாங்கள் நடுங்குவோம் அவர் வசனத்திற்கு
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

தேவ மகிமை சூழட்டுமே
தேவ கிருபை தாங்கட்டுமே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

Senaigalin Karthare Nin சேனைகளின் கர்த்தரே நின்

 சேனைகளின் கர்த்தரே நின்

திருவிலம் அளவற இனிதினிதே

வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத

திருவருளிலமே கணுறும் உணரும்
தெருளம்பகமே இனிதுறும் நிசமிது

ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய

புவியோர் பதிவான் புகநிதியே
புனருயி ருறுமுழுக் கருளினிதே
புதுவிடமே,புகுமணமே,புதுமதியே
புரிவொடு இனிதருள்

பேயடே புவி பேதை மாமிசம்
பேணிடாதடியாருனைப்
பேறு தந்தவனே யெனச்சொலி
பேணிடத்துணை ஈவையே
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
பிசகொழியே திடமளியே
பெருமலையினிலரு முயிர்தரும்

ஆலய மது நிறைவாக
அவைக் குறை வொழிந்தேக
அவரவருனதில மெனமனவிடர்சாக
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்
ஆலய பர னேச
ஆசுக மது வீச
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிக ரெது

Senaigalin Maa Karthar சேனைகளின் மா கர்த்தரவர்

 சேனைகளின் மா கர்த்தரவர்

யாக்கோபின் தேவனவர்
என்றும் உயர்ந்த அடைக்கலமே
என் நம்பிக்கையின் பெலனே

உணர்கிறாயா உணர்கிறாயா?
உண்மையை நீ உணர்கிறாயா?
உணர்கிறாயா உணர்கிறாயா?
உண்மையை உணர்கிறாயா?

அடைக்கலமே இனி உன் பெலனே
ஆபத்தில் அனுகூலமே
பூமி நிலைமாறி மலை சரிந்தும்
நீ அசைக்கப்படாய் உறுதி

சொல்லுவாயா சொல்லுவாயா?
எப்போதும் நீ சொல்லுவாயா?
சொல்லுவாயா சொல்லுவாயா?
எப்போதும் சொல்லுவாயா?

அமர்ந்திருந்து நீ அறிந்து கொள்வாய்
அவரே தேவனென்று
உனக்காரும் இல்லையே மேதினியில்
இது தாவீதின் அனுபவமே

அனுபவி நீ! அனுபவி நீ!
இது முதல் நீ அனுபவியே
அனுபவி நீ! அனுபவி நீ!
இது முதல் அனுபவியே

Senaigalin Thevanagiya சேனைகளின் தேவனாகிய

 சேனைகளின் தேவனாகிய

கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்
சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின் நாமத்தில்
யுத்தம் புரிகிறேன்

வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்
கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்

பட்டயத்தை நம்பவில்லையே
என் வில்லையும் நான் நம்பவில்லையே
உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்
வாக்குத்தத்தம் பற்றிக்கொண்டேன்
வெட்கப்பட்டுப் போவதில்லையே

மாம்சத்தோடும் சண்டையில்லையே
இங்கு ரத்தத்தோடும் சண்டையில்லையே
இந்த பூலோகத்தின் அதிபதியோடும்
பொல்லாத ஆவிகளோடும்
அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்

என்னை கீழே தள்ளிவிட்டானே
சத்ரு ஊர் முழுதும் தூற்றி விட்டானே
என் தேவன் என்னை தூக்கிவிட்டார்
நிந்தைதனை மாற்றிவிட்டார்
சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே

Senaigalin Thevanagiya சேனைகளின் தேவனாகிய

 சேனைகளின் தேவனாகிய

கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்
சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின் நாமத்தில்
யுத்தம் புரிகிறேன்

வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்
கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்

பட்டயத்தை நம்பவில்லையே
என் வில்லையும் நான் நம்பவில்லையே
உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்
வாக்குத்தத்தம் பற்றிக்கொண்டேன்
வெட்கப்பட்டுப் போவதில்லையே

மாம்சத்தோடும் சண்டையில்லையே
இங்கு ரத்தத்தோடும் சண்டையில்லையே
இந்த பூலோகத்தின் அதிபதியோடும்
பொல்லாத ஆவிகளோடும்
அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்

என்னை கீழே தள்ளிவிட்டானே
சத்ரு ஊர் முழுதும் தூற்றி விட்டானே
என் தேவன் என்னை தூக்கிவிட்டார்
நிந்தைதனை மாற்றிவிட்டார்
சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே

Singasanathil Veetrirukkum சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

 சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே

இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே

பரிசுத்தமும் சத்தியமும் – தாவீதின்
திறவுகோலை உடையவரே

அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே

Singasanathil Veetriruppar சிங்காசனத்தில் வீற்றிருப்பார்

 சிங்காசனத்தில் வீற்றிருப்பார்

தேவன் இயேசுக்கிறிஸ்து
துதிகனம் மகிமையெல்லாம்
அவருக்கே செலுத்திடுவோம்

ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தர்
ஆட்டுக்குட்டி ஆனவரே
உன்னதமானவரே
உலகத்தின் ஒளி நீரே

தேவன் சபையில் வாசமாகி
நடுவிலே உலாவுகின்றார்
அற்புத தேவன் நீரே
அதிசயமானவரே

இயேசுவின் நாமத்தில் பிதாவே உம்மை
தொழுகிறோம் பணிந்திடுவோம்
சர்வ வல்லவரே
பரிசுத்தமுள்ளவரே

Siragugalaalae Moodiduvaar சிறகுகளாலே மூடிடுவார்

 சிறகுகளாலே மூடிடுவார்

அரணான பட்டணம் போல காத்திடுவார்
கழுகை போல எழும்ப செய்வார்
உன்னை நடத்திடுவார்
அவர் உன்னை நடத்திடுவார்

எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்லமை உள்ளவரே
உன்னை நடத்திடுவார்
அவர் உன்னை நடத்திடுவார்

பாதை அறியாத நேரமெல்லாம்
அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார்
கரங்களை பிடித்து கைவிடாமல்
உன்னை நடத்திடுவார்

வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலே உன்னை
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார்
சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்தி
தலையை உயர்த்திடுவார்

பாதம் கல்லில் இடறாமல்
தூதர்களை அனுப்பிடுவார்
உன்னை காக்க கூட இருந்து
உன்னை நடத்திடுவார்

Sothu Sugam Irunthaalum சொத்து சுகம் இருந்தாலும்

 சொத்து சுகம் இருந்தாலும்

வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே

சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்

கிருபை தந்தவரே நன்றி ஐயா
என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா
கண்ணீர துடச்சிடுங்க
காயங்களை ஆற்றிடுங்க

சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா
என்னை அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

Sthothiramae Sthothiramae Appa Appa ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா

 ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா

உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
வல்லவரே நல்லவரே வல்லவரே நல்லவரே

கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
ரட்சகரும் தேவனுமானார் – நான்
நம்பின என் துருகமும் கேடகமானார்
ரட்சணிய கொம்புமானார்

தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு
சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்

உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம்
காருணியத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்

Sutha Iruthayathai Sristiume சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

 சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

செத்த மனிதனை உயிர்ப்பியுமே
சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே
சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே

பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்
அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும்
மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன்
கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன்
உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன்

உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர்
ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர்
சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும்
வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும்
கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும்

நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே
உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே
பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்
ரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர்
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்குவீர்

வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்
கட்டுண்ட பாவிதனை தேற்றிச்செல்கிறீர்
பாவப்பழிகளை நீக்கிடும் ஐயனே
பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே
கெம்பீரித்தும்மை பாடி போற்றிடுவேனே

Svarna Raagangal Svaram ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே

 ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே

வெள்ளி மணியோசைகள் ஜத்தி போடவே
ராகங்கள் தாளங்கள் கைத்தாளங்கள் – தந்து
உம்மை தினம்தோறும் நான் பாடுவேன்

பன்னிரண்டு வருடம் பாடுகள் பட்டவளாய்
பற்பல இடங்களில் ஓடி அலைந்து திரிகின்றாள்
பார்வேந்தன் இயேசுவின் ஆடையைத் தொட்டாள்
அந்தஷணமே குணமடைந்தாள்

கானாவூரிலே கல்யாண வீட்டிலிலே
திராட்சை ரசமில்லையே இயேசுவைத் தேடியே வந்தனரே
ஜாடிகளில் தண்ணீரை நிரப்பிடச் சொன்னார்
தண்ணீரை ரசமாக்கினார்

எத்தனை அற்புதங்கள் என் வாழ்வில் செய்தீரே
எண்ணிடக் கூடுமோ என் வாழ்நாளும் போதுமோ
இயேசுவை அன்றி நான் யாரைப் பாடுவேன்
என் தேவன் இவரைப் பாடுவேன்

Thanimaiyai Azhuginrayo தனிமையாய் அழுகின்றாயோ

 தனிமையாய் அழுகின்றாயோ

அழைத்தவர் நானல்லவோ

கலங்கிடாதே மகனே ‍எந்தன்
தோளில் சுமப்பேன் என் மகனே
கலங்கிடாதே என் மகளே எந்தன்
நெஞ்சில் அனைப்பேன் என் மகளே
தனிமையாய் அழுகின்றாயோ

இன்றுவரை உந்தன் வாழ்வில்
என்றேனும் கை விட்டேனோ
வென்று வந்தவை எல்லாம்
என்னாலே என்று உணர்வாய்
பின்வாழ்வைத் திரும்பிப் பார்த்தால்
என் அன்பை நன்கு அறிவாய்

எவைகள் உன் தேவையென்று
என் ஞானம் அறிந்திடாதோ
உந்தன் ஏக்கங்கள் அறிவேன்
தேவை உணர்ந்து நான் தருவேன்
தேவையில்லாததை
உன்னின்று அகற்றும் போது

Thanimaiyai Azhuginrayo தனிமையாய் அழுகின்றாயோ

 தனிமையாய் அழுகின்றாயோ

அழைத்தவர் நானல்லவோ

கலங்கிடாதே மகனே ‍எந்தன்
தோளில் சுமப்பேன் என் மகனே
கலங்கிடாதே என் மகளே எந்தன்
நெஞ்சில் அனைப்பேன் என் மகளே
தனிமையாய் அழுகின்றாயோ

இன்றுவரை உந்தன் வாழ்வில்
என்றேனும் கை விட்டேனோ
வென்று வந்தவை எல்லாம்
என்னாலே என்று உணர்வாய்
பின்வாழ்வைத் திரும்பிப் பார்த்தால்
என் அன்பை நன்கு அறிவாய்

எவைகள் உன் தேவையென்று
என் ஞானம் அறிந்திடாதோ
உந்தன் ஏக்கங்கள் அறிவேன்
தேவை உணர்ந்து நான் தருவேன்
தேவையில்லாததை
உன்னின்று அகற்றும் போது

Thanimaiyil Ummai தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்

 தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்

தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே

அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே

நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே

நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன்

Thalai Saaikum Kal neeraiya தலை சாய்க்கும் கல் நீரய்யா

 தலை சாய்க்கும் கல் நீரய்யா

மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு
பரம்புவாய் என்றீரே
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

Thasanagiya Yakobe Bayapadathe தாசனாகிய யாக்கோபே

 தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே

உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன்
இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன்
மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்

வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன்
வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன்
உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்

தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன்
கால்கள் கல்லில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன்
நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன்

ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன்
அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன்
உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்

Thaesamae Nee Payapadathae தேசமே தேசமே நீ பயப்படாதே

 தேசமே தேசமே நீ பயப்படாதே – உன்

தேவனில் களி கூர்ந்து மகிழ்ந்திடுவாய்
கர்த்தர் உந்தன் வாழ்விலே
பெரிய காரியம் செய்திடுவார்
கலங்காதே திகையாதே
கண்ணீர் சிந்தாதே

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பாரே எதிர்
பாராத ஆபாத்திலும் தப்புவிப்பாரே
பாவங்கள்இ சாபங்கள் போக்கிடுவாரே
பெரிய இரட்சிப்பை தந்திடுவாரே

சந்தோஷம் இல்லையென்று சோர்ந்து விடாதே
சத்துருவின் தொல்லைகளால் துவண்டுவிடாதே
சாத்தானைக் கண்டு நீயும் பயந்துவிடாதே
சத்திய தேவனுண்டு மறந்து விடாதே

அப்பா பிதாயென்று அழைத்திடுவாயே உன்
அருகினிலே அவர் வருவார் மகிழ்ந்திடுவாயே
என்ன வேண்டும் என்று இயேசு உன்னைக் கேட்பாரே
எதையும் கேட்க முடியாமல் திகைத்து நிற்பாயே