தந்தேன் என்னை ஏசுவே இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய தந்தேன் என்னை தாங்கியருளும்
ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
ஊரில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரந்தனில் வைத்து -- (தந்தேன் என்னை...)
உந்தன் சித்தம் நான் செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்கு கட்டினும்
ஏசுவே அங்கே இதோ போகிறேன் -- (தந்தேன் என்னை...)
ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீடருக்கு அளித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் -- (தந்தேன் என்னை...)
No comments:
Post a Comment