Sunday, May 27, 2018

DEVANIN AALAYAM THUDHIGALIN AALAYAM LYRICS

தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்
மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்
நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்
1. கண்கள் காண்பது செவ்வையான பார்வையா
எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா
கைகள் செய்வது சுத்தமான செயலா
கால்கள் போவது சரியான இடத்திற்கா
நாவு பேசுவது சமாதான வார்த்தையா
சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா
2. தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு
ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு
பரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடு
குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடு
சுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடு
சரீரமென்பதை ஆலயமாக்கிடு

ENAKKU OTHASAI VARUM LYRICS


எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்
2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே
3. என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே
4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே
5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்

EJAMAANAANAE UM SEVAIKAAI ENNAI LYRICS

எஜமானனே (2)
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2
அழியும் என் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)
ஆராதிப்பேன் அதை எண்ணியே
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்
என்னில் என்ன நன்மை கண்டீர்
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்
உம் சித்தத்தை நான் செய்வதே
அனுதினமும் என் போஜனம் – அழியும்

EN VAAZHVIL YESUVE LYRICS


என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்
சோகங்கள் பாராமல் நான் வாழும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் நான் சாயும் போது
பாதங்கள் நீயாக வேண்டும்
எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும்
காலங்கள் எல்லாம் என் நெஞ்சின் வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் சுடர் தீபங்கள் நீயாக வேண்டும்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும்
மழை மேகங்கள் நீயாக வேண்டும்

ENNATHAN AANAL ENNA LYRICS

என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்
என்னதான் காடு மரணமே கிறிஸ்து 
1. காடு மேடு கடந்து சென்றாலும்
கரம் பிடித்து என்னை நடத்துகிறாரே
ஆறுகளை நான் கடக்கும் போதும்
மூழ்கி நானும் போவதில்லை
அக்கினியில் நடக்கும் போதும்
எரிந்து நானும் போவதில்லை
2. மரணமே ஆனாலும் என்ன
ஜீவனே ஆனாலும் என்ன
பரிசுத்தரின் பின்னே செல்வேன்
திரும்பி நானும்பார்க்கமாட்டேன்
எனது ஜீவன் உமது கரத்தில்
ஒருவரும் பறிப்பது இல்லை 
3. கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே
சாவு எனக்கு ஆதாயமே
தேவனின் அன்பிலிருந்து
பிரிப்பவர்கள் யாரும் இல்லை
உமது பாதம் எனது தஞ்சம்
எனது கோட்டை நீர்தானே
– என்னதான் காடு மரணமே கிறிஸ்து

EN ATHUMAVUM SARIRAMUM LYRICS


என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்லா
என்னில் இயேச வாழ்கின்றார்
இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்
1. அப்பா உம் திருசித்தம் – என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
2. கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

EN JANAGAL ORU POTHUM LYRICS


என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……
எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்
எதிரிகள் உன்னை துரத்தினாலும்
உன்னோடு கூட நான் இருப்பதனால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை 
1. வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்
பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
பரிகாரியாய் நான் இருப்பதினால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
2. ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்
குறைவுகளால் மனம் கலங்கினாலும்
உனக்காக யாவையும் செய்திடுவேன்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

NEERE VALI NEERE SATHYAM LYRICS


நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும் மெய்நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தான் ஐயா
1. கல்லுமல்ல மண்ணுமல்ல கல்லான ஓர் சிற்பமல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால் நீர் தானையா
ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கி;ல்லை
ஆவியாய் இருக்கின்றீர் ஆண்டவரே
2. உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது
உம்நாமம் மகிமைக்கே உண்டாக்கினீர்
படைப்பு தெய்வமல்ல பார்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே தெய்வம் ஐயா
3. எல்லாம் வல்ல தெய்வம் நீரே எல்லை இல்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி

PADAGO PADAGU KADALILE LYRICS


படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையே
1. வாலிபப்படகே உல்லாசப்படகே
தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே – படகோ
2. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையே அழிக்கும் படகே
சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே – படகோ

NANDRI BALI PEEDAM KATTUVOM LYRICS


நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே


1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்


2. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா


3. குற்றம் செய்தால் மரித்திருந்தோம்
இயேசுவோடே கூட எழச்செய்தீர்
கிருபையினாலே இரட்சித்தீரே
உன்னதங்களிலே உட்காரச்செய்தீர்


4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே


5. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்

ELUNTHAR IRAIVAN JEYAME LYRICS


எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்
1. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்
2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்
3. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்
4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்
5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
போதுமே நன்மைபுரி நேயன் – தப்
பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்

DEVAN ARULIA SOLLI MUDIYATHA LYRICS

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கோடா கோடி ஸ்தோத்திரம்
1. கிருபையினாலே விசுவாசம் கொண்டு
இரட்சிக்கப்பட்டீர்களே
இது உங்களாலே உண்டானதல்ல
தேவன் தந்த நல்ல ஈவே
2. உலர்ந்து போன எலும்புகளெல்லாம்
உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே
இது இருதயத்தின் அன்பின் ஆவியே
தேவன் தந்த நல்ல ஈவே
3. குடும்ப வாழ்விலும் சந்தோசமாய்
குறைவில்லாது நடத்துகின்றரே
நல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம்
தேவன் தந்த நல்ல ஈவே
4. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட
நன்மைகளைத் தருகின்றரே
இது தேவன் தரும் ஆசிர்வாதமே
தேவன் தந்த நல்ல ஈவே

ARUL ERALAMAI PEIYUM LYRICS


அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே
பல்லவி
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள்
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள்
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்

DEVA ENNAI AASIRVATHIUM LYRICS

தேவா என்னை ஆசீர்வதியும் – என்
எல்லையை பெரிதாக்கும்
உமது கரமே என்னுடன் இருந்து
எல்லா தீங்குக்கும் விலக்கிடும்
தேவனே இயேசுவே தேவனே
இயேசு தேவா
1. தாகம் தீர்க்கும் தண்ணீரையும்
வறட்சி நீக்கும் ஆறுகளும்
தேவ ஜனத்தில் ஆவியையும்
இன்று பலமாய் ஊற்றிடும்
2. தேவ சபையில் எழுந்தருளி
மகிமை பொழிந்திடுவீர்
மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்
மனதில் நிறைந்திடுவீர்
3. இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட
வாசல்கள் துதியால் நிறைந்திடும்
ஊழிய எல்லையை நீர் விரித்து
எந்நாளும் சேவையில் கலந்திடும்
4. என்றென்றும் இயேசுவின் கரத்தினால்
அன்றன்று தேவையை பெற்றிடுவேன்
ஒன்றுக்கும் இனி குறைவு இல்லை
சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன்
5. தெய்வீக வாசனை சாட்சிக்கே
தீங்கை முற்றும் நீக்கிடுமே
ஆவியும் அருளும் தங்கிடவே
ஞானத்தின் அறிவு பெற்றிடுவேன்
தேவனே இயேசுவே தேவனே

DEVA SABAYEELAE DEVAN YELLUTHARULENAR LYRICS

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்
1. பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்
2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே
3. இராப்பகலாய் தம் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்
4. உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்
5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே
6. ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்

EN JEEVAN NEERTHANE LYRICS

என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே 
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் 
1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே 
2. நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும்
நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே

DASANAGIYA YAKOBE BAYAPADADHE LYRICS


தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே
1. உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன்
இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன்
மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்
2. வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன்
வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன்
உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்
3. தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன்
கால்கள் கல்லில் இடராமல் கருத்தாய் காத்திடுவேன்
நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன்
4. ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன்
அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன்
உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்

EN DEVANE EN YESUVE LYRICS


என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்
1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
2. என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா
3. துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்
4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
5. உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா
6. படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்

EZHAI ENTHAN MEETHU ANBHU LYRICS


ஏழை எந்தன் மீது அன்பு தேவா
ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா
பாவியான எந்தன் மீது நாதா
ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!!
1. வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே
பேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து
அலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து
பாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!!
2. உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை
தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து
பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உம்மை நினைத்து
நன்றிகள் கோடி சொல்வேன் தேவா
உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா!!
3. எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்
அத்தனையும் மறந்து நான் எத்தனமாய் வாழ்ந்ததேனோ
அற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து
துதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா

KARTHAR PERIYAVAR NAM APPA PERIYAVAR LYRICS

கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்
தேவன் பெரியவர் நம் இயேசு பெரியவர்
1. அன்னாளைப் போல கர்த்தரிடம்
இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
அன்னாளை நினைத்த பெரியவர்
நம்மையும் நினைத்திடுவார்
2. சாலமோனைப் போல கர்த்தரிடம்
ஞானத்தை(யே) கேளுங்கள்
அந்த ஞானத்தை தந்த பெரியவர்
நமக்கு நிச்சமாய் தந்திடுவார்
3. எலியாவைப் போல கர்த்தருக்காய்
பெருங்காரியம் செய்திடுங்கள் – அன்று
எலிசாவை நடத்திய தேவனே
இன்று நம்மையும் நடத்துவார்

KARTHAR PERIYAVAR ENGEL LYRICS


கர்த்தர் பெரியவர் – எங்கள்
இயேசு பெரியவர்
வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள் – 1
1. தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே! – சர்வ
2. மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள் – சர்வ
3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர் – சர்வ

NAAN UMMAI PATRI RATCHAGA LYRICS


1. நான் உம்மைப்பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தான்டவா
நான் சாட்சி கூறுவேன்
சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப்பாடுவேன்
2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்
3. மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்
4. நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

MAGILVOOM MAGILVOOM DHINAM AGAMAGILVOM LYRICS


மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
பல்லவி
ஆஆ…. ஆனந்தமே
பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே
1. சின்னச்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
“ஜீவன் பெற்றுக்கொள்” என்றுரைத்தார்
2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொருப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்
3. அவர் வரும் நாளிலே என்னைக் கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார்
அவர் சமூகமத்தில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

ELUPUTHAL EN DESATHILAE LYRICS


எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவ கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்


1. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே


2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே


3. கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்


4. ஒருமனமாய் சகைளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே


5. தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்


6. ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே


7. துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை


8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே


9. அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே


10. மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே

EN YESU RAJAVUKAE LYRICS


என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்தரிப்போம்


1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்


2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ


3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்வேன்
ஓயாமல் பாடுவேன் – நான்


4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீரே
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே ஆ…ஆ

ENTHAN MEIPARE ENNAI AANDU LYRICS

எந்தன் மேய்ப்பரே
என்னை ஆண்டு நடத்துமே
நீர் நடத்தும் இடமெல்லாம்
பின் சென்றிடுவேன்
உம் சத்தம் கேட்கவே
செவிசாய்த்திடுவேனே
நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன் 
பசுமையான மேய்ச்சலண்டை
அமர்ந்த தண்ணீர்கள்
என் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார்
தடைகள் மலையைப்போல நின்று
பள்ளத்தாக்குகள் நேர்ந்தாலும்
என் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார்

KADALIN ALATHILE MULGHI PONA LYRICS


கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்
கண்ணோக்கி பார்த்திடுமே இயேசையா
கண்ணோக்கி பார்த்திடுமே
நீர் இரக்கமும் உருக்கமும்
நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே
என் இயேசையா கிருபையும் உள்ளவரே
1. தர்ஷிசுக்கு ஓடி போன யோனாவை மீட்டிரே
என்னையும் மீட்டுக் கொள்ளும் என் இயேசையா
என்னையும் மீட்டுக்கொள்ளும்
அழிவில் இருந்து நினிவேயை ரட்சித்தீரே
எங்களையும் ரட்சித்து கொள்ளும்
என் இயேசையா எங்களையும் ரட்சித்து கொள்ளும்
2. மீனின் வயிற்றிலிருந்த யோனாவின் ஜெபத்தைக் கேட்டீர்
என் ஜெபமும் கேட்டருளும் என் இயேசையா
என் ஜெபமும் கேட்டருளும்
இரட்டுடுத்தி ஜெபித்த நினிவேயின் ஜெபம் கேட்டீர்
எங்கள் ஜெபம் கேட்டருளும் என் இயேசையா
எங்கள் ஜெபம் கேட்டருளும்
3. யோனாவின் சத்தத்தை நினிவே கேட்டது போல்
என் தேசம் கேட்கணுமே என் இயேசையா
என் ஜனம் கேட்கணுமே
நினிவேக்கு கிடைத்த கிருபை போல
எங்களுக்கும் கிருபை தாருமே
என் இயேசையா எங்களுக்கும் கிருபை தாருமே

KARTHAR NALLAVAR AVAR KIRUBAI LYRICS


கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2
பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
1. கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்
பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால்
அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார்
மகிமையினால் நம்மை மூடிடுவார்
பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
2. அந்நியபாஷைகள் தந்திடுவார்
அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார்
வரங்களினால் நம்மை நிறப்பிடுவார்
ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார்
பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

KIRUBAI EMMAI SOLTHU KOLLUM LYRICS


கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை
சரணங்கள்
யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
இயேசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை
1. தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை
2. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம் – கிருபை
3. ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார் – கிருபை
4. ஜாதி ஜனங்களையும் – வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார் – கிருபை
5. உண்மையும் நேர்மையுமாய் – இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை

KIRUBAIYETHE DEVA KIRUBAIYETHE LYRICS


கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப் பாதையிலே – இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே – கிருபையிதே
2. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை – கிருபையிதே
3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – கிருபையிதே
4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் – கிருபையிதே
5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் – கிருபையிதே

KIRUSTHUKUL VALUM ENNAKU LYRICS


கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு -3
1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்
2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்
3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்
4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்
5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

KODUTHATHU ONDRUMILAYAE LYRICS


கூடாதது ஒன்றுமில்லையே – 4
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது
தேவனால் கூடுமே – 2
1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே
2. லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே
3. வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே
4. கடல் மேல் நடந்தாரே
கடும் புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே

AANI KONDA UM KAYANGALAI LYRICS


ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
ஆயனே என்னை மன்னியும்
1. வலது கரத்தின் காயமே -2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
2. இடது கரத்தின் காயமே -2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
3. வலது பாதக் காயமே -2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
4. இடது பாதக் காயமே -2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
5. திருவிலாவின் காயமே -2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

APPA NAAN UMMAI PAARKIREN LYRICS


அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
4. ஜீவ நீருற்று நீர்தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன்

ENAKKAI JEEVAN VITTAVARAE LYRICS


எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே
1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன்செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே
2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
3. மனிதர் என்னை கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்

JEEVAN THANTHEER UMMAI AARADHIKKA LYRICS


1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிக்க
ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனைத் தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்..

MANAMIRANGUM DHEIVAM YESU LYRICS


மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்
1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்
2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்
3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்

MARIDA EM MA NESARE LYRICS


மாறிடா எம்மா நேசரே- ஆ
மாறாதவர் அந்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே
1. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே
2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே
3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க
4. நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே
5. பயமதை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே