வைகறை பொழுதின் வசந்தமே நீ வா
விடியலை தேடும் விழிகளில் ஒளி தா
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா
வழி இருள்தனிலே வளர்மதி என வா - இங்கு
பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா
அலைகளில்லா கடல் நடுவே பயணமென என் வாழ்வு
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர
இறைவா என் இறைவா இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன்
வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா
இடர்வரினும் துயர்வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும்
இணைபிரியா நிலையெனவே எனை பிரியா துணையெனவே
இறைவா என் இறைவா இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன்
வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா
No comments:
Post a Comment