Tuesday, November 12, 2019

VAIGARAI POZHUTHIN VASANTHAME NEE


வைகறை பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலை தேடும் விழிகளில் ஒளி தா 
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா 
வழி இருள்தனிலே வளர்மதி என வா  - இங்கு 
பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா 

அலைகளில்லா கடல் நடுவே பயணமென என் வாழ்வு 
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர 
இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன் 
வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா 

இடர்வரினும் துயர்வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் 
இணைபிரியா நிலையெனவே எனை பிரியா துணையெனவே 
இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன் 

வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா 

No comments: