Friday, July 27, 2018

NAAME THIRUTCHABAI KRISTUVIN LYRICS

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்
1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்
2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும்
3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்
4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்

KALANGUVATHEN KANNEER VIDUVADHEN LYRICS

கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..
சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்
கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..
புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!
அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்
தோல்வியில் ஜெயம் தருவார்
வியாதியில் சுகம் தருவார்

KANMALAIYAI NOkKI AARAADHIPOAM LYRICS

கன்மலையை நோக்கி ஆராதிப்போம்
கன்மலையை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த கன்மலை கிறிஸ்துவே
எங்கள் கன்மலை கிறிஸ்துவே (2)
ராஜாவை நோக்கி ஆராதிப்போம்
தேவனை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த ராஜா இயேசுவே
எங்கள் தேவன் இயேசுவே (2)
எஜமானை நோக்கி ஆராதிப்போம்
எல்ஷடாய் நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த எஜமான் இயசுவே
எங்கள் எல்ஷடாய் இயேசுவே (2)
இரட்சகரை நோக்கி ஆராதிப்போம்
உன்னதரை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த இரட்சகர் இயேசுவே
எங்கள் உன்னதர் இயேசுவே (2)
Kanmalaiyai noakki aaraadhipoam
Kanmalaiyai noakki thudhi seivoam (2)
Andha kanmalai kristhuvae
Engal kanmalai kristhuvae (2)
Raajaavai noakki aaraadhipoam
Kanmalaiyai noakki thudhi seivoam (2)
Andha raajaa yaesuvae
Engal theavan yaesuvae (2)
Ejamaanai noakki aaraadhipoam
Elshadaai noakki thudhi seivoam (2)
Andha ejamaan yaesuvae
Engal elshaddaai yaesuvae (2)
Ratchagarai noakki aaraadhipoam
Unnadharai noakki thudhi seivoam (2)
Andha ratchagar yaesuvae
Engal unnadhar yaesuvae (2)

OH MEGAME ENNAI THOTTU LYRICS


ஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமே
சிறு பூவெல்லாம் தலையாட்டியே
உம் பாடல் கேட்க மனம் ஏங்குதே
ஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமே (2)
1. அன்பாலே எனை அழகாய் மாற்றி
அன்பிலே உம் அழகைப் பார்த்து
அதிசயம் நீர் அதிசயம்
என்று என் மனம் சொல்லுதே
கைகளில் எனை அழகாய் வரைந்து
கருவிலே கண்மனிப் போல் காத்து
கருத்துடன் எனைப் படைத்தீர்
என்று என் மனம் சொல்லுதே
உம் முகம் பார்க்க மனம் எங்குதே
உம் கையைப் பிடித்து நான் நடக்கவே
உம்மை நான் பிரியாமலே – ஓ மேகமே
2. பாசத்தால் எனைத் தூக்கியே சுமந்து
நேசமாய் என் நிழலாய் நின்று
அற்புதம் நீர் அற்புதம்
என்று என் மனம் சொல்லுதே
சிறகினால் எனை பறக்க செய்து
வாழ்விலே எனை உயர்த்திய உம்மை
எப்படி நான் மறப்பேன்
என்று என் மனம் சொல்லுதே
உம் முகம் பார்க்க மனம் எங்குதே
உம் கையைப் பிடித்து நான் நடக்கவே
உம்மை நான் பிரியாமலே – ஓ மேகமே
Oh maegamae ennai thottu poagumae
I Siru poovellaam thalaiyaattiyae
Um paadal kaetka manam aengudhae
Oh maegamae ennai thottu poagumae (2)
1. Anbaalae enai azhagaai maatri
Anbilae um azhagai paarthu
Adhisayam neer adhisayam
Endru en manam solludhae
Kaigalil enai azhagaai varaindhu
Karuvilae kanmani poal kaathu
Karuthudan enai padaitheer
Endru en manam solludhae
Um mugam paarkka manam engudhae
Um kaiyai pidithu naan nadakkavae
Ummai naan piriyaamalae – Oh maegamae 
2. Paasathaal enai thookkiyae sumandhu
Naesamaai en nizhalaai nindru
Arpudham neer arpudham
Endru en manam solludhae
Siraginaal enai parakka seidhu
Vaazhvilae enai uyarthiya ummai
Eppadi naan marappaen
Endru en manam solludhae
Um mugam paarkka manam engudhae
Um kaiyai pidithu naan nadakkavae
Ummai naan piriyaamalae – Oh maegamae

KARTHARAI NOKKI AMARNTHIRUPPEN LYRICS


கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
கவலை மறந்து காத்திருப்போம்
1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்
2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
உதவி செய்து காத்திடுவார்
உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்
3. வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
கர்த்தரையே சார்ந்திருப்போம்
அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்
4. சுயபுத்தியில் சாய்ந்திடாமல்
முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்
வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
வாழ்வின் பாதை காட்டிடுவார்

EN AATHMA NESARE EN ANBU LYRICS


என் ஆத்ம நேசரே
என் அன்பு இயேசுவே
உம்மை நான் போற்றுவேன்
என்றென்றுமாய் (2)
உம் அன்பினைப் போல
நான் கண்டதில்லையே
உலகத்தில் சொல்வேன்
உற்சாகமாய் (2)
1. பாவியான என்னையும் பரிசுத்தமாக்கினீர்
பாசம் கொண்டு அன்பு வைத்தீரே
வெறுமையான என்னையும் வெற்றி வீரன் ஆக்கினீர்
வெட்கமின்றி உம்மைப் பாடுவேன் (2) – என் ஆத்ம
2. வாழவைப்பேன் என்றீரே வாக்குத்தத்தம் தந்தீரே
வாழ்வின் துணையாக நின்றீரே
மகிமையான மீட்பினால்
என்னை சொந்தம் கொண்டீரே
மரணத்தை எனக்காய் வென்றீரே (2) – என் ஆத்ம
3. அழிவில்லாத செல்வத்தை அளவில்லாமல் தந்தீரே
அன்பரே உமக்காய் வாழ்ந்திட
முடிவில்லாத இன்பத்தை முழுமையாக தந்தீரே
மீட்பரே உம் துதிகள் (புகழை) பாடிட (2) – என் ஆத்ம
4. அன்பின் ஆழம் அகலமோ நீளம் உயரமோ
யாரும் அளந்திடாதது (அறிந்திடாதது)
மாறிடாத அன்பிது என்னைத் தேடி வந்தது
முற்றும் ஜெயம் கொள்ள வைத்தது (2) – என் ஆத்ம

ENNAI KAAKUM KEDAGAME LYRICS


என்னைக் காக்கும் கேடகமே
தலையை நிமிரச் செய்பவரே
இன்று உமக்கு ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை


1. உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
எனக்கு பதில் நீர்தந்தீரய்யா
படுத்து உறங்கி விழித்தெழுவேன்
நீரே என்னைத் தாங்குகிறீர்
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்


2. சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
அஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்
விடுதலை தரும் தெய்வம் நீரே
வெற்றிப்பாதையில் நடத்துகிறீர்


3. பக்தியுள்ள அடியார்களை
உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்
வேண்டும்போது செவிசாய்க்கிறீர்
என்பதை நான் அறிந்துகொண்டேன்


4. உலகப்பொருள் தரும் மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
நீர் ஒருவரே பாதுகாப்புடன்
சுகமாய் வாழச் செய்கின்றீர்


5. உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்
உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன்
எனக்கு நன்மை செய்தபடியால்
நன்றிப் பாடல் பாடிடுவேன்

KALANGUVATHEN KANNEER VIDUVADHUMEN LYRICS


கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

நேசரின் கரங்களே தேற்றுமே

இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..
சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்

உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்

அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்

கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..

புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!
அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்

அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்

நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்

நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்

தோல்வியில் ஜெயம் தருவார்

வியாதியில் சுகம் தருவார்
Kalanguvadhaen kanneer viduvadhumaen
Naesarin Karangalae thaetrumae
Yaesuvin kaayangal aatrume 
Saorndhu paona un ullam paarkkiraar
Udaindhupaona un nenjam kaangiraar
Azhaiththa dhaevan unnai nadaththi selvaar
Kaneergal thudaippaar kavalaigal maatruvaar
Pudhu jeevan ootruvaar pudhu sirushtiyaakkuvaar 
Avarukkaana un izhappugal paarkkiraar
Avarukkaana un alaichchalgal kaangiraar
Needhi dhaevan unakku niyaayam seivaar
Nichchayam palan tharuvaar urudhiyaai uyarththiduvaar
Thoalviyil jeyam tharuvaar
Viyaadhiyil sugam tharuvaar

MAGIMAIYIN RAJA MAGIMAIYODU LYRICS

மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்
ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே
1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
3. சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை