Wednesday, February 13, 2019

UM ANBU ETHANAI PERITHAIYA LYRICS


உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

MARAKKA PADUVATHILLAI NAAN LYRICS


மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல – 2
1. தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர் – கலக்கமில்ல
2. உள்ளங்கையிலே
பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே – 2
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – கலக்கமில்ல

IMAIPOLUTHUM ENNAI KAIVIDAMAATTEER LYRICS


இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டார்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன் (2)
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் (2)
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீரண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம் உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் வாழ்க்கை உந்தன் கையில்
என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர் (2)
என் குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

KUPPAYANA ENNAI GOBURATHILE LYRICS

Kuppayana Ennai
குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே
உதவாத என்னை உமக்காய் தெரிந்தீரே
நீங்கதான் எல்லாம் இயேசப்பா
என் இயேசப்பா
உம்மை விட யாருமில்லப்பா
1. கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரே
கண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரே
சோர்ந்துப் போய் இருந்தேனப்பா
என் இயேசப்பா
சோகங்கள் தீர்த்தீரப்பா
2. தனிமையில் எனக்கு துணையாய் நீன்றீரே
ஆனாதை எனக்கு அடைக்கலம் தந்தீரே
தாகத்தால் தவித்தேனப்பா
என் இயேசப்பா
ஜீவ தண்ணீர் தந்தீரப்பா

NAAN POTRI PADUVAEN LYRICS

Naan Potri Paduvaen
நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை
துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
துதிக்குப் பாத்திரரே
என் துதிக்கு பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே (2)
நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்
மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
மகிமைக்குப் பாத்திரரே
நீர் மகிமைக்குப் பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே (2)

ESANAE UM SEVAIKE LYRICS


ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே (2) என்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும் (2)
1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும் (2)
அன்னல் நீர் என்னோடிருந்தால்
தின்னமாய் அவை தீர்ந்திடும் (2)
2. என்னருகில் நீர் எந்த வேளையும்
ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)
சத்திய வழியில் சஞ்சரிக்கவே
தத்தம் செய்தேன் என்னையே (2)
3. மகிமையில் நான் உந்தன் வீட்டில்
மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)
உமையல்லாதே இகத்திலும் நான்
இமைப்பொழுதும் தனித்திரேன் (2)

ALLELUYA THUTHI UMAKE LYRICS


அல்லேலூயா துதி உமக்கே
அல்லேலூயா துதி உமக்கே (2)
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் (2)
1. அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) – அல்லேலூயா
2. கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2) – அல்லேலூயா

DEVANAE ENNAI THARUGIREN LYRICS


தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்
எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே
ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது
தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது