Sunday, July 31, 2016

ATHIIKAALAIYIL SURIYANAI PAARKALYIILE

அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னை காண்கின்றார் - அவர்
என்றென்றும் என்னை காண்கின்றார்
என்னை காண்கின்றார்

எல்ரோயீ எனை காணும் தேவனே - (2)
(என்னை காணும் தேவன்)
எல்ரோயீ எனை காணும் தேவனே - (2)
(என்னை காண்கின்ற தேவன்)

மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு

ENATHU ULLAM YAARUKKU THERIYUM

எனது உள்ளம் யாருக்கு தெரியும் - இயேசையா
எனது நினைவு யாருக்கு புரியும்

என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே - இயேசையா

1. அன்னை தந்தை அறியவில்லையே - என்
உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்னை அறிந்த தெய்வம் நீரையா - என்
உள்ளம் புரிந்த அன்னை நீரையா --- எனது

2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர் --- எனது

3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
என் உள்ளம் நொந்து சோகமானது
என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே --- எனது

ENTHAN YESAIAH ENTHAN YESAIAH LYRICS

எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்

1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா (2) --- எந்தன்

2. உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) --- எந்தன்