ஒரு பாடல் நான் பாடுவேன்
மன்னன் உந்தன் கருணையை எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து
நன்றி பாடல் நான் பாடுவேன்
ஒரு நாளில் நீ செய்த நன்மைகளை சொல்ல நினைத்தால்
வாழ்நாளே போதாதைய்யா சொல்லியும் தீராதய்யா
நன்றி சொல்வேன் நாளெல்லாம் உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன்
என் அன்பு தாயாக தந்தையாக எந்தன் இறைவா
எந்நாளும் எனை பார்க்கின்றாய் கண்ணாக காத்தாள்கின்றாய்
நான் நினைப்பேன் நன்றி சொல்வேன் நாளெல்லாம் பாடி புகழ்வேன்
1 comment:
Many Thanks 🥰
Post a Comment