Tuesday, November 12, 2019

THASARE ITHTHARANIYAI ANBAI

தாசரே இத்தாரணியை அன்பாய்
யேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் யேசுவைக் கூறுவோம் அவரைக்
காண்பிப்போம் மாவிருள் நீக்கு வோம்
வெளிச்சம் வீசுவோம்

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் யேசு பாவப் பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே

பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
யேசு கனிந்து திரிந்தனரே

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

இந்தியதேச மாது சிரோமணிகள்
விந்தை யளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்த்து சிறந்திலங்கிட

மார்க்கம் தப்பிநடப் போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

No comments: