Tuesday, April 17, 2018

AALUGAI SEIYUM AAVIYANAVARE LYRICS


ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே

1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்

2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்

3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்

4. சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே

AGILATHAI AALUM DEIVAM LYRICS

அகிலத்தை ஆளும் தெய்வம்
ஆண்டவர் இயேசுவையே
ஆர்வமுடன் தொழுவோம்-2
வானமும் பூமியை
வார்த்தையால் படைத்தவரை
வாருங்கள் நாம் தொழுவோம்-2
1. பாவத்தை சாபத்தை
நோய் பிணியை அகற்ற
பாரினில் வந்துதித்தாரே
பரலோக மைந்தன் அவர்
பரிசுத்த தேவன் அவர்
ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை
2. வழிதப்பி போன நம்மை
வழிகாட்டும் மேய்ப்பனாக
பாரினில் வந்துதித்தாரே
அவரே நம் இருள் நீக்கும்
ஒளியாக வந்த தெய்வம்
ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை

AAVIYANAVARE ANBIN AAVIYANAVARE LYRICS


ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே
1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே
2. பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே
3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே
4. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

SUTHTHA IRUDHAYATHAI SRISTIYUME LYRICS


சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே
செத்த மனிதனை உயிர்ப்பியுமே
சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே
சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே 
பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்
அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும்
மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன்
கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன்
உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன் 
உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர்
ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர்
சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும்
வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும்
கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும் 
நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே
உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே
பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்
ரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர்
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்குவீர் 
வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்
கட்டுண்ட பாவிதனை தேற்றிச்செல்கிறீர்
பாவப்பழிகளை நீக்கிடும் ஐயனே
பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே
கெம்பீரித்தும்மை பாடி போற்றிடுவேனே

KARTHARAI THUTHIYUNGAL AVAR YENDRUM NALLAVAR LYRICS


கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2
2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்
3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்
4. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்

ANBARIN NESAM AAR SOLLALAGUM LYRICS


அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய
1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய
2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய
3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய
4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய
5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே – அதிசய

DEVANE NAAN UMATHUNDAIYIL INNUM LYRICS

தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை
மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா
2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து
3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என் துயர்க் கல் நாட்டுவேனே
என்றன் துன்பத்தின் வழியாய்
இன்றும் உம்மைக் கிட்டி சேர்வேன்
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன்

DEVAKUMARA KETKIRATHA EN DHIYANA LYRICS


தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா
1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்
2. கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

DEVA SARANAM KARTHA SARANAM LYRICS

தேவா சரணம்
கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்
1. தேவாதி
தேவனுக்கு சரணம்
இராஜாதி
இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம்
2. கர்த்தாதி
கர்த்தனுக்கு சரணம்
காருண்ய
கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம்
3. மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற
மகுடமே சரணம்
சத்தியஆவியே சரணம்
சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

DEVA SITHAM NIRAIVERA ENNAIYUM LYRICS

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே
1. முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்
2. முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்
3. பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார்
4. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கை பெற
இரட்சகர் அழைத்திடுவார்

DEVA SAAYAL AAGA MARI LYRICS

தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்
1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ சாயல்
2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ சாயல்
3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ சாயல்
4. ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே – தேவ சாயல்
5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ சாயல்
6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே – தேவ சாயல்
7. உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய் – தேவ சாயல்

ETHAI KURITHUM KALAKAM ILLAPPA LYRICS


எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

1. இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்

2. கவலைகள் பெருகும் போது…
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்

3. எப்போதும் உம் புகழ்தானே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்

4. வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை

5. என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

6. எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்


Ethai Kurithum Nee
ethaikkuriththum kalakkam illappaa
ellaavattirkaakavum nanti solluvaen
yaar maelum kasappu illappaa
ellaarukkaakavum mantaduvaen
ethaik kuriththum kalakkam illappaa


1. ithuvarai uthavi seytheer
inimaelum uthavi seyveer


2. kavalaikal perukum pothu…
karththar ennaith thaettukireer


3. eppothum um pukalthaanae
ummaiththaan niruththiyullaen


4. valappakkaththil iruppathanaal
naan asaikkappaduvathillai


5. en samookam mun sellum
ilaippaaruthal tharuvaen enteer


6. enakkaay yuththam seytheer
yaavaiyum seythu mutippeer

ETHAI NINAITHUM NEE KALANGATHE LYRICS


எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச்
செல்வார் (2)


1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2


2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு
பூரண சுகம் தருவார்


3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை


4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை


5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து
களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்


6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்


7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
துணையால்;
எதையும் செய்திடுவாய்

EZHAI MANU URUVAI EDUTHA LYRICS


ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே
1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு 
2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு 
3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு 
4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை மனு 
5. மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை மனு

ETHANAI NAMMAI ETHANAI INBAM LYRICS


எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து
வாசம் பண்ணும் போது


1. அது ஆரோன் தலையில்
ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி
உடையை நனைக்கும்


2. சீயோன் மலையில் இறங்குகின்ற
பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம்
இங்கு உண்டாகும்


3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு


4. இருவர்; மூவர் இயேசு நாமத்தில்
கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று
இரட்சகர் சொன்னாரே

ITHU SINTHIKKUM KAALAM LYRICS


இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
பல்லவி
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ
2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ

AMEN ALLELUIA MAGATHUVA THAM LYRICS


ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென்
1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்
2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென்
3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் – ஆமென்

AAVIYAI MALAI POOL OOTRUM LYRICS


ஆவியை மழைபோலே யூற்றும், – பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி
பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை
சரணங்கள்
1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை
2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை
3. காத்திருந்த பல பேரும் – மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். — ஆவியை
4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை

AATHUMAME EN MUZHU ULLAME LYRICS


ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
சரணங்கள்
1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே
2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே
4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே
6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே

AARUTHALIN DEIVAME UMMUDAIYA LYRICS


ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது


1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்


2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்


3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்


4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்


5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்