Saturday, May 19, 2018

VAZHVAI ALIKKUM VALLAVA LYRICS

வாழ்வை அளிக்கும் வல்லவா

தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே

ஏனோ இந்த பாசமே
ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே
புரிந்த பாவி மேல்

உலகம் யாவும் வெறுமையே
உன்னை யான் பெறும்போது
உறவு என்று இல்லை உன்
உறவு வந்ததால்

தனிமை ஒன்றே ஏங்கினேன்
துணையாய் நீ வந்தாய்
அமைதியின்றி ஏங்கினேன்
அதுவும் நீ என்றாய்

IYARKAIYIL URANTHIDUM INAIYATTA IRAIVA LYRICS

இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா - என்

இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா   --2

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு - இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ --2
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாகவா  --2

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ  --2
குயிலாகினேன் குரலாகவா
மயிலாகினேன் நடமாடவா  --2

ALAIYOLIR ARUNANAI ANINTHIDUMA LYRICS


அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ

வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்

அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌
வல்ல உன் மகனிடம் கேள்

AROKIYA THAAYE AADHARAM NEEYE LYRICS


ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே  --2
தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே

தீராத போராட்ட வாழ்க்கை எங்கள்
திகில் போக்க வரவேண்டுமே..!
கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மை
சிறை மீட்க வர வேண்டுமே..!  -- 2
வேறெங்கு போவோம் வினை தீர வேண்டி
நீர் எங்கள் நிறைவான தயவானதாலே  --ஆரோக்கியத் தாயே

உனை நம்பி வந்தோரில் யாரும் இங்கு
ஏமாந்த கதை இல்லையே
எங்கள் தாய் உன்னை தினம் போற்றும் நெஞ்சில்
ஒரு துளியேனும் துயர் இல்லையே..!   --2
விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக
விளங்கும் எம் தாயே உன் துணை வேண்டினோம்  --ஆரோக்கியத் தாயே

THAYAPARA RANI THATCHANAM ALLRANI LYRICS


தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும்
தலைபணி ஜெயராணி  --2

தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை
விமரிசை புரிராணி  --2

தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
வங்கமார் கலிங்கம் கொங்கனம் மலையாளம்
குதுகலி மகாராணி  --2

தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
ஆந்திரம் குடகம் அகில மராட்டம்
ஆண்டிடும் மகாராணி  -- 2

NAALAM NAALAM PUNITHA NAALAM LYRICS


நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம்  (2)

அன்பான தெய்வத் தாயாரின் நாளாம்  (2)
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம்  (2)  -நாளாம் நாளாம்

தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம்  (2)
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம்  (2)  -நாளாம் நாளாம்

தெய்வீக அன்போ கன்னியின் வழியாய்  (2)
தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம்  (2) -நாளாம் நாளாம்

YESU NAMAM PADAPADA LYRICS

இயேசு நாமம் பாடப்பாட‌

இனிமை பொங்குதே அவர்
இல்லம் வாழ எந்தன் இதய‌ம்
ஏங்கித் த‌விக்குதே

ஓங்கும் குர‌லைக் காக்க‌ வேண்டும்
உன் நாம‌ம் பாட‌வே
என் உள்ள‌ம் தேற‌வே என் தாக‌ம் தீர‌வே
உன் அன்பில் வாழ‌வே
என் தேவா தேவா வா

ஏங்கும் விழிக‌ள் தேற்ற‌ வேண்டும்
வான் தீப‌ம் காண‌வே
என் அன்பில் வாழ‌வே உன்னோடு சேர‌வே
என்னில் நீ வாழ‌வே
என் தேவா தேவா வா

YESU YESU YESU ENTRU SOLLA ASAITHAN LYRICS


இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்
நான் எப்போதும் 
உங்க கூட இருக்க ஆசைதான் - 2
உங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசைதான்  (2) - நான் உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் - 2 

உங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான்  (2) -நான் உங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசைதான் - 2 

உங்க அன்பில் நானும் தினம் வாழ ஆசைதான் (2) - நான் 
உங்களோட செல்லமாக மாற ஆசைதான் - 2 

NILAIYILLA ULAGU NIJAMILLA URAVU LYRICS

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

நிலையானதொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
நீ மட்டும் போதும் எப்போதும்
நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
நீ மட்டும் போதும் எப்போதும்

ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
ஆடி இங்கு அடங்குது வாழக்கை
வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
வசந்தம் வந்து எம்மில் என்றும் தங்கும்
நீ மட்டும் போதும என் வாழ்வு மாறும்  --2
நீ மட்டும் போதும் எப்போதும்

பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
பொழுதிங்கு போகுது கழிந்து
உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் --2
நீ மட்டும் போதும் எப்போதும்
 

YESUVAE UNTHAN VARTHAIYAAL LYRICS

இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில்
கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என்
உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே

தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலங்களும் இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே
நீதியும் அன்பின் மேன்மையும்
பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே.

நன்மையில் இனி நிலைபெறும் என்
சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும்
ஒன்றாகும் நிலைவருமே
இன்றெழும் புது விந்தைகள்
உன்னைப் புகழ்ந்திடுதே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுதே

MATHAVE THUNAI NEERAE LYRICS

மாதாவே ! துணை நீரே உம்மை 

வாழ்த்திப் போற்ற வரந்தாரும் 
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
ஏற்றன்பாக எமைப் பாரும்.

வானோர் தம் அரசே ! தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக் காலத்துமே தற் காரும்.

ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்
ஓர் சாவான பவந்தானும்
என்றேனுஞ் செய்திடாமற் காத்து
எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும் 

UM SIRAKUKAL NIZHALIL LYRICS


உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா !
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் - 2
உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா!

பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் -2
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் -2

வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை

NEEYAE ENATHU OLI LYRICS

நீயே எனது ஒளி நீயே எனது வழி
நீயே எனது வாழ்வு இயேசையா - 2

நான்கு திசையும் பாதைகள்
சந்திக்கின்ற வேளைகள்
நன்மை என்ன தீமை என்ன
அறியாத கோலங்கள் - 2
நீயே எங்கள் வழியாவாய்
நீதியின் பாதையின் பொருளாவாய் - 2
உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் - நீயே

துன்ப துயர நிகழ்வுகள்
இருளின் ஆட்சிக் காலங்கள்
தட்டுத் தடுமாறி விழத்
தகுமான சூழல்கள் - 2
நீயே எங்கள் ஒளியாவாய்
நீதியின் பாதையின் சுடராவாய் - 2
உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உனதருள் தாரும் – நீயே

AROKKIYA MATHAVE UMATHU PUGAZH LYRICS

ஆரோக்கிய மாதாவே உமது புகழ் 

பாடித் துதித்திடுவோம் -எந்நாளும்
பாடித் துதித்திடுவோம்  (2) 

அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே  (2)
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே  (2) 

தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே  (2)
வானுலகும் இந்த வையகமும்  -அருள்
ஓங்கிட எங்கும் நிறைந்தாயே  (2)

முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே -அவன்
குறைகளை நீக்கிட நினைத்தாயே  (2)
நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும்
இயேசுவின் அருளால் கொடுத்தாயே  (2) 

பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே
பசும்பால் வாங்கித் தந்தாயே  (2)  -இந்த
உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும்
அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் (2) 

சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால்
சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே  (2)
பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர்
வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே  (2) 

கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்
கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே   (2)  -நமது
நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்
உன்னத நிலைபெற வைத்தாயே 
(2)

VANTHOM UN MAINTHAR KOODI LYRICS

வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ 

மாசில்லாத் தாயே
சந்தோஷ மாகப் பாடி – உன்
தாள் பணியவே !

பூலோகந் தோன்று முன்னே – ஓ
பூரணத் தாயே ! 
மேலோனின் உள்ளந் தன்னில் – நீ
வீற்றிருந்தாயே !

தூயோர்களாம் எல்லோரும் – நீ
தோன்றும் நாளினை
ஓயாமல் நோக்கிப பார்த்தே – தம்
முள் மகிழ்ந்தாரே !

நாவுள்ள பேரெல் லோரும் – உன்
நாமம் போற்றுவார்
பாவுள்ள பேர்களோ உன் – மேற் 
பாட்டிசைப்பரே!

NEE ENTHAN PAARAI EN LYRICS


நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே 

ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன்துணையில் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ-2
தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் -2
ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது
போனாலும் உனில் தஞ்சம் உண்டு
இயேசுவே இயேசுவே - 2

இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ-2
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் - 2
என்றென்றும் உன் ஆசி கொண்டு - வரும்
நல்வாழ்வை கண்முன்னே கண்டு
இயேசுவே இயேசுவே -2

UN PUGAZHAI PADUVATHU LYRICS


உன் புகழைப் பாடுவது என்
வாழ்வின் இன்பமைய்யா
உன் அருளைப் போற்றுவது என்
வாழ்வின் செல்வமைய்யா
     
துன்பத்திலும் இன்பத்திலும் நல்
தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல்
அன்னையாய் அருகிருப்பாய்  (2)
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய் (2)       - உன் புகழை

பல்லுயிரை படைத்திருப்பாய் நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ
என்னையும் ஏன் அழைத்தாய்  (2)
அன்பினுக்கு அடைக்கும் தாழ் 
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்  (2)     -உன் புகழை

GNANAM NIRAI KANNIKAIYAE LYRICS

ஞானம் நிறை கன்னிகையே 

நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் எழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
தாயுதரம் நீ தரித்திடவே
தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்

வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே
வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்

MATHAVE SARANAM UNTHAN LYRICS


மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி

மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே

நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே

ANNAIKKU KARAM KUVIPPOM LYRICS

அன்னைக்குக் கரம் குவிப்போம்

அவள் அன்பைப் பாடிடுவோம் – 2

கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த
முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்

UMMAI THEDI VANTHEN LYRICS

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2

முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2

கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2
அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2

MAMARAI PUKAZHUM MARIYENNUM MALARAE LYRICS


மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாதரின் மா மணியே (2)

அமலியாய் உதித்து அலகையை மிதித்து
அவனியைக் காத்த ஆரணங்கே (2)
உருவிலா இறைவன் கருவினில் மலர
உறைவிடம் தந்த ஆலயமே!

பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து
ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)
இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி
வானக வாழ்வை அளிப்பாயே!

VIYAKULA MAMARIYAE THIYAKATTHIN MATHAVAE LYRICS


வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)

பன்னிரு வயதில் ஆலயத்தில்
அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை
கரங்களை விரித்தே கள்வனைப் போல்
கழுமரத்தினில் கண்டதினால்

கண்ணீரே சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே
மண்ணவர்க்காகத் தன்னுயிரை
இன்று மாய்த்திடக் கண்டதினால்

MATHA UN KOVILIL LYRICS


மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் - 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா 

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே - 2
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா 

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே - 2
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா 

பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா

ANBANA MANTHARAE KOODUNGALAE LYRICS


அன்பான மாந்தரே கூடுங்களே 
ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே

கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே 
நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே  (2)
மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே 
மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே  (2) 

முப்பொழுதும் அவள் கன்னியம்மா 
எப்பொழுதும் நம் அன்னையம்மா


வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே 
வேதங்கள் அறியாத தத்துவமே (2) 
தேவாதி தேவனின் தாயகமே 
திருமறை போற்றிடும் நாயகமே   (2)   -முப்பொழுதும்

தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே 
தீமைகள் களைகின்ற அன்புத்தாயே  (2)
உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே 
ஊமைகள் பேசிட மொழியும் நீயே  (2)   -முப்பொழுதும் 

KARUNAI MAZHAIYAE MARY MATHA LYRICS


கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ 
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ   (2)

கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ   (2)
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ  (2) -கருணை

தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே   (2)
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே 
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே 
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே  (3)  -கருணை

THEVA THAAYIN MAATHAM ITHU LYRICS


தேவ தாயின் மாதம் இது அல்லவோ..! இதை
சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா  -- 2

பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை
புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே  -- 2
ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி 
ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே   --தேவ தாயின்

தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை
சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம்  -- 2
கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து --2
கோயிலுக்கு சாயும் வேளை ஆவலுடன் போவோம் வாரீர் -- தேவ தாயின்

ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க
ஒப்பந்தமே செய்தால் ஒரு தப்புமில்லையே - 2
இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் - 2

இந்த மாதம் எல்லோருக்கும் நல்ல வரம் சேர்ந்து வரும் -- தேவ தாயின்

MAASILLA KANNIYAE MATHAVAE LYRICS


மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல் 
நேசமில்லாதவர் நீசரேயாவார் 

வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2

மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் 
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்  (2) -வாழ்க

தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ 
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே  (2)  -வாழ்க

VAANLOGA RANI VAIYAGA RANI LYRICS


வான்லோக ராணி வையக ராணி 
மண்மீதிலே புனித மாது நீ - 2

விண்ணொளிர் தாரகை தாயே நீ 
தண்ணொளிர் வீசிடும் ஆரணி - 2 

பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வராணி 
பாதுகாத்து ஆளுவாயே நீ - 2

ஜென்ம மாசில்லா மாதரசி 
செம்மைசேர் மங்கையர் ராணி நீ பாவமேது

புண்ணிய மேநிறை மாது நீ 
விண்ணவர் போற்றிடும் அம்மணி பாவமேது

AMMA NEE THANTHA JEBAMALAI LYRICS


அம்மா நீ தந்த ஜெபமாலை 
ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை 
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் 
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம்


சந்தோஷ தேவ இரகசியத்தில் 
தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய் 
எம் தோஷம் தீர இயேசுபிரான் 
உம் அன்பு மகனானார் அவரை 
காணிக்கை வேண்டி புலம்பியதும் 
வீணாகவில்லை தாய்மரியே 
உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே


துயர்நிறை தேவ இரகசியத்தில் 
தூயவரின் வியாகுலங்கள் கண்டோம் 
உயர் வாழ்விழந்த எமக்காக 
உன் மைந்தன் உயிர் தந்தார் அவரை 
சாட்டைகளும் கூர் முள்முடியும் 
வாட்டிய சிலுவைப்பாடுகளும் 
சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா 
தாய் நெஞ்சம் நொறுங்கியதார் அறிவார்

மகிமையின் தேவ இரகசியத்தில் 
மாதா உன் மாண்பினைக் கண்டோம் 
சாகாமை கொண்ட நின் மகனார் 
சாவினை வென்றெழுந்தார் அவரே 
தூயாவியால் உன்னை நிரப்பியதும் 
தாயுன்னை வானுக்கு எழுப்பியதும் 
மூவுலகரசி ஆக்கியதும் 
மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே 

ORU NAALUM UNAI MARAVAEN LYRICS


ஒரு நாளும் உனை மறவேன்
தாயே ஒருநாளும் உனை மறவேன்

கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2
உலகமெலாம் அறுந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்

நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2
என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்

சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2
சாதனைகள் படைத்தாலும் – 2 சரித்திரமாய் முளைத்தாலும்

AMMA AMUTHINUM INIYAVALAE LYRICS


அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே 
அகமே மகிழ்வாய் மரியே --2


தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே --2 
அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே


அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய் 
அவனியிலே அருள்பொழிவாய் 
அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

அருள்நிறை மாமரியே அமல உற்பவியே --2 
கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே