Tuesday, February 27, 2018

THEEVINAI SEIYATHE MAA SOTHANAIYIL LYRICS

தீவினை செய்யாதே மா சோதனையில் 
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் 
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் 
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

ஆற்றித் தேற்றியே காப்பார் 
நித்தம் உதவி செய்வார் 
மீட்பர் பலனை ஈவார் 
ஜெயம் தந்திடுவார்

வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் 
சேராமலே நீங்கி நல்வழியிலும் 
நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் 
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான் 
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான் 
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் 

யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

BALARE ORR NESAR UNDU LYRICS

பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே  
நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே  
உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்  
இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும்
பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச வீட்டிலே  
பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே  
ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ?  
அங்குளளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ
பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டிலே  
நல் மீட்பரின் பேரன்பால் பொற்கிரீடம் அணிவீர்  
இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார்  
இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார்
பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே  
மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே  
அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை  
நீர் அவரிடம் வாரும், ஈவார் அவ்வின்பத்தை

NAAN KANAMALPONA ADALLAVO LYRICS

பல்லவி 
நான் காணாமற்போன ஆடல்லவோ 
கர்த்தர் என்னைத் தேடுகின்றார்

ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை 
அன்புமீறி நான் நடந்தேன் 
ஆபேலைக்கொன்ற காயீனைப்போல 
வன்கொலை நான் புரிந்தேன் 
ஆரம்ப முதலில் விழுந்த 
அன்பர் என்னைத் தேடுகின்றார்

கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான் 
காட்டித்தந்த யூதாஸ் தானே 
கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து 
பெரும்பழி நான் சுமந்தேன் 
கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன் 

கர்த்தர் என்னைத் தேடி வந்தார்

ANANDHA VAZHVU VENDUMENTRU LYRICS

பல்லவி 
ஆனந்த வாழ்வு வேண்டுமென்று 
அறிஞர் ஒருவர் நினைத்தாராம் 
ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று 
அறிவுரை சொல்லும் என்றாராம்

குழந்தையை அழைத்து முன்னிருத்தி 
குழந்தை போல் வாழுங்கள் என்றாராம் 
வந்தவர் திகைத்து சென்றாராம் 
வாழும் வழிதனை மறந்தாராம்

அம்மா அப்பா பெரியோரே 
ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள் 
அன்பால் உள்ளம் மாறிவிட்டால் 

ஆனந்தம் நம்மைத்தேடி வரும்

ANANTHA NAAL VARUME LYRICS

பல்லவி 
ஆனந்த நாள் வருமேஎந்தன் 
ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்லஆனந்த

அனுபல்லவி 
கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால் 
பாடிப் பாடித் தினம் மகிழ நல்லஆனந்த

தேவ சித்தம் நிறைவேறும்திரு 
மந்தை யாவும் ஒன்று சேரும்ஆனந்த

மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட 

பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும்ஆனந்த

UYIRTHEZHUNTHAR ULAGAMELLAM LYRICS

பல்லவி 
உயித்தெழுந்தார் உலகமெல்லாம் புகழ்பாடவே 
உயித்தெழுந்தார் உள்ளம் எல்லாம் மகிழ்ந்திடவே

பாராளும் வேந்தன் புதிய வாழ்வையே 
ஈவாக ஈந்தார் இறைவன் இயேசுவே 
மாறாக நெஞ்சின் இருள்தனைப்போக்க 
ஒளியாக உயித்தாரே வழிகாட்டினார்

மண்மீது வாழும் உயிர்கள் எல்லாம் 
படைத்தாண்ட தேவன் உயிர்த்தெழுந்தார் 
எந்நாளும் நாமும் அவரோடு வாழ 

உள்ளத்தில் உயிராக இருந்தாளுவார்