உன் இதய வாசல் தேடி வருகின்றேன்
என் இதயம் உறைய என்னில் வாருமே
நீயில்லையேல் நானில்லையே
நான் வாழ என்னுள்ளம் வா
காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதைய்யா
உன் வழியில் நான் என்றும் வாழ்வேனையா
குயில் கூவ மறக்கலாம் மயிலாட மறக்கலாம்
நயமுடனே நண்பரும் நம்மை விட்டு பிரியலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதைய்யா
உன் வழியில் நான் என்றும் வாழ்வேனையா
No comments:
Post a Comment