Saturday, January 26, 2019

SAARONIN ROJAAVE ENN AATHMA LYRICS

சாரோனின் ரோஜாவே என் ஆத்ம நேசரே
பழுதற்ற இரத்தமே, தேவாட்டுக் குட்டியே - 2

அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர்
பதினாயிரங்களிலும் சிறந்தவரே - 2
ஓசானா உன்னத தேவனே
ஓசானா தாவீதின் மைந்தனே - 2 (x 2)

உறவுகள் பிரிந்த போதிலும்
நண்பன் என்னை வெறுத்த போதிலும்
துணையாக வந்த அன்பினை
மறந்திடேனே (x 2)
துணையாளரே, துணையாளரே
துண்பத்தில் தாங்கும் மணவாளரே - 2

ஓசானா உன்னத தேவனே
ஓசானா தாவீதின் மைந்தனே - 2 (x 2)

அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர்
பதினாயிரங்களிலும் சிறந்தவரே - 2
ஓசானா உன்னத தேவனே
ஓசானா தாவீதின் மைந்தனே - 2 (x 2)

- சாரோனின் ரோஜாவே

NALLAVARE VALLAVARE MAGIMAIYIN LYRICS

நல்லவரே, வல்லவரே,
மகிமையின் தேவன் நீரே
பரிசுத்தரே, பரிகாரியே,
துதிகளில் வசிப்பவரே x 2 Times

உம்மைப்போல யாருமில்லை
பரிசுத்த தெய்வம் நீரே
உமக்கு ஈடாய் ஒன்றுமில்லை
நிகரில்லா ராஜன் நீரே x 2 Times

பரிசுத்தரே, பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே,
ஆராதனை, ஆராதனை
ஆராதனை உமக்கே x 2 Times

1. பரலோகத்தின் அப்பங்களால்
வனாந்திரத்தில் போஷித்தீரே x 2 Times
வழிகளெல்லாம் நிழல் தந்து
கண்ணீரேல்லாம் துடைத்தவரே  x 2 Times

2. தள்ளாடினால் தாங்குவீரே
ஒரு தந்தைபோல் சுமப்பீரே [நான்]
தாகம் தீர்க்கும் கன்மலையே
அடிக்கப்பட்டீர் எனக்காகவே

INTHA MATTUM KATHA EBINESARE LYRICS

1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை – அல்லேலூயா!

2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)

3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே – மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)

4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)

AVAR AZHAIPPAI ANUSARITHTHEN LYRICS

அவர் அழைப்பை அனுசரித்தேன்
அவர் அழைப்பை அனுசரித்தேன்    
அவர் அழைப்பை அனுசரித்தேன்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே

தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே

அவர் அழைப்புக் களிப்பேன் பதில்
காடானாலும் மேடானாலும்
காடானாலும் மேடானாலும்
காடானாலும் மேடானாலும்

கந்தையானாலும் நிந்தையானாலும்
கந்தையானாலும் நிந்தையானாலும்
கந்தையானாலும் நிந்தையானாலும்
--தொண்டு செய்வேன்

துன்பமானாலும் இன்பமானாலும்
துன்பமானாலும் இன்பமானாலும்
துன்பமானாலும் இன்பமானாலும்
---தொண்டு செய்வேன்

மழையானாலும் வெயிலானாலும்
மழையானாலும் வெயிலானாலும்
மழையானாலும் வெயிலானாலும்
--தொண்டு செய்வேன்

அடியானாலும் மிதியானாலும்
அடியானாலும் மிதியானாலும்
அடியானாலும் மிதியானாலும்
---தொண்டு செய்வேன்

SAGO SAGO YESUVUKKAGA LYRICS

எட்டுத்திக்கும் உள்ள இயேசுவின் அன்பு பிள்ளைகளே
வாங்க வாங்க நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்
ஐயையோ போதுமே பாடுகள் போதுமே
சகோ, சகோ எழுந்து வா
ஐயையோ போதுமே அவஸ்தைகள் போதுமே
சகோதரி விரைந்து வா

சகோ, சகோ இயேசுவுக்காக
வாழ்வில் உயர யோசிக்காம
வா வா சகோ இயேசுவுக்கா
Shine -ய் ஜொலிக்க
Late பண்ணாம வா வா சகோ - எட்டுத்

1. இந்த உலகம் முழுசும் மகா கேட்டினால
சாத்தான் பிடியில் மாட்டியிருக்கு
பலர் மனசு முழுசும் பகை வைராக்கியம்
கசப்பு மனமுறிவு ஆகி இருக்கு
மனுக்குலத்தை காப்பாற்ற ஒன்றாக சேருவோம்
வா வா வா வாங்க சகோ...
ஒன்றாக சேர்ந்து நாம் சுவிசேஷம் சொல்லுவோம்
ஏ.. வா வா வா வாங்க சகோ...
இதயம் ஜெயிப்போம் மனதை மாற்றுவோம்
சாத்தானின் பிடியிலே இருப்போரை மீட்டிடுவோம்
இயேசு ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
அதே நம்பிக்கையில் நாமும் ஜெயித்திடுவோம் வா வா சகோ... - எட்டுத்

2. பலர் வாலிப வயசு கர்த்தர் குடுத்த வயசு
கேட்டின் இருளின் பிடியில் இருக்கு
பல தாயின் மனசு பல தந்தையின் மனசு
அதினாலே உடைந்திருக்கு
வாலிபரை Meet பண்ணி வாலிபத்தை காப்பாற்ற
ஏ.. வா வா வா வாங்க சகோ...
அவர்களை பெற்றெடுத்த Parents-சை Happy பண்ண
வா வா வா வாங்க சகோ
இதயம் ஜெயிப்போம் மனதை மாற்றுவோம்
சாத்தானின் பிடியிலே இருப்போரை மீட்டிடுவோம்
இயேசு ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
அதே நம்பிக்கையில் நாமும் ஜெயித்திடலாம் வா வா சகோ... - எட்டுத்

YETTUTHIKKUM ULLA YESUVIN ANBU LYRICS

எட்டுத்திக்கும் உள்ள இயேசுவின் அன்பு பிள்ளைகளே
வாங்க வாங்க நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்
ஐயையோ போதுமே பாடுகள் போதுமே
சகோ, சகோ எழுந்து வா
ஐயையோ போதுமே அவஸ்தைகள் போதுமே
சகோதரி விரைந்து வா

சகோ, சகோ இயேசுவுக்காக
வாழ்வில் உயர யோசிக்காம
வா வா சகோ இயேசுவுக்கா
Shine -ய் ஜொலிக்க
Late பண்ணாம வா வா சகோ - எட்டுத்

1. இந்த உலகம் முழுசும் மகா கேட்டினால
சாத்தான் பிடியில் மாட்டியிருக்கு
பலர் மனசு முழுசும் பகை வைராக்கியம்
கசப்பு மனமுறிவு ஆகி இருக்கு
மனுக்குலத்தை காப்பாற்ற ஒன்றாக சேருவோம்
வா வா வா வாங்க சகோ...
ஒன்றாக சேர்ந்து நாம் சுவிசேஷம் சொல்லுவோம்
ஏ.. வா வா வா வாங்க சகோ...
இதயம் ஜெயிப்போம் மனதை மாற்றுவோம்
சாத்தானின் பிடியிலே இருப்போரை மீட்டிடுவோம்
இயேசு ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
அதே நம்பிக்கையில் நாமும் ஜெயித்திடுவோம் வா வா சகோ... - எட்டுத்

2. பலர் வாலிப வயசு கர்த்தர் குடுத்த வயசு
கேட்டின் இருளின் பிடியில் இருக்கு
பல தாயின் மனசு பல தந்தையின் மனசு
அதினாலே உடைந்திருக்கு
வாலிபரை Meet பண்ணி வாலிபத்தை காப்பாற்ற
ஏ.. வா வா வா வாங்க சகோ...
அவர்களை பெற்றெடுத்த Parents-சை Happy பண்ண
வா வா வா வாங்க சகோ
இதயம் ஜெயிப்போம் மனதை மாற்றுவோம்
சாத்தானின் பிடியிலே இருப்போரை மீட்டிடுவோம்
இயேசு ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
அதே நம்பிக்கையில் நாமும் ஜெயித்திடலாம் வா வா சகோ... - எட்டுத்

NEEGA MATTUM ILLAYINAKKA LYRICS

நீங்க மட்டும் இல்லையினாக்கா
எங்கோ நான் மண்ணாய் போயிருப்பேன் - 2

பெத்த மனசு அது
பித்து... பித்து... பித்து... பித்து...
பிள்ள மனசு அது
கல்லு... கல்லு... கல்லு... கல்லு...

பெத்த மனம் பித்தப்பா
பிள்ள மனம் கல்லப்பா
ஏற்றுக்கெள்ளும் இயேசப்பா
உந்தன் பிள்ள நானப்பா - 2

துன்பத்தின் பாதையிலெல்லாம் அப்பா... அப்பா...
தோலோடு சுமந்துக் கொண்டீரே
தந்தை பேல் தாயை போல காத்து வந்தீரே
மார்போடு சேர்த்தனைத்தீரே
- பெத்த மனசு...

நான் அழுத வேளையில் எல்லாம் அப்பா... அப்பா...
கண்ணீரை துடைக்க வந்தீரே
அன்பில்லாத வேளையிலெல்லாம் நீர் எனக்கு
அன்பு தந்து அரவனைத்தீரே
- பெத்த மனசு...

பாவத்தில் சூழன்ற  என்னையே
அப்பா... அப்பா...
உம் கையால் புதுமையாக்கினீர்..
உமது வார்தையால் என்னை தினந்தோறும்
உம் வழியில் நடத்தி சென்றீரே...
- பெத்த மனசு... 

INDHIYA DHESAM UNNAI KAANAVENDUM LYRICS

இந்தியா தேசம் உம்மை காணவேண்டும்
இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே

இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும்
இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே (2)

இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே
நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்
(இந்தியா தேசம்)

உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் வேற்றுமை வேண்டாம் ஐயா
உம் கரத்தாலே படைக்கப்பட்டோம் என்ற உணர்வை ஊற்றும் ஐயா (2)

இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே
நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்

வறுமைகள் மாறனும் எங்கள் பாரதம் செழிக்கனுமே
ஒருமன ஆவியால் எங்கள்
சபைகள் பெருகனுமே(2)
(இந்திய தேசம்)

இனங்களினாலும் மொழிகளினாலும் பிரிவினை வேண்டாம் ஐயா
உம் இரத்தத்தாலே இணைந்துவிட்டோம் என்ற உணர்வை ஊற்றும் ஐயா(2)

இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே
நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்

ஜாதிகள் நீங்கனூம் எல்லாம் ஒன்றாய் சேரனுமே
வேற்றுமை இன்றியே உந்தன் அன்பால் இனையனுமே(2)

இந்தியா தேசம் உம்மை காணவேண்டும்
இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே

இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும்
இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே (2)

இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே
நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்
(இந்தியா தேசம்)