Tuesday, November 12, 2019

ANBINIL PIRANTHA IRAIKULAM



அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
அறம் வளர்ப்போமே !

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் -- (2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம்
பரிவுள்ள இறைவன் திருவுளம் ஏற்போம் -- (அன்பினில்)

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை -- (2)
பிறந்த நம் வாழ்வின் பயன் பெற வேண்டும்

பிறனையும் நம்மைப் போல் நினைத்திடவேண்டும் -- (அன்பினில்)

1 comment:

Unknown said...

Thank you so much😊