Sunday, June 17, 2018

KARTHARUKU PUDHU PAATTA PAADUGA LYRICS


அல்லேலூயா பாடுவோம் – 4
கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
அல்லேலூயா
பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (2)
கர்த்தரப் பாடி அவருடைய
நாமத்தை ஸ்தோத்தரித்து (2)
நாளுக்கு நாள் அவருடைய
இரட்சிப்ப சுவிசேஷமாய்
அறிவித்துப் பாடிடுங்க(2) – கர்த்தருக்கு
ஜாதிகட்குள் அவருடைய
அதிசயங்கள் சொல்லுங்கள் (2)
கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்
ஸ்தோத்தரித்து பாடுங்க (2) – கர்த்தருக்கு
பரிசுத்த அலங்காரத்தோடு
கர்த்தர துதியுங்கள் (2)
இந்த உலகிலுள்ள யாவருமே
கர்த்தருக்கு நடுங்கிடுங்க (2) – கர்த்தருக்கு
நாட்டிலுள்ள யாவருமே
களிகூர்ந்து பாடிடுங்க (2)
கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (2) – கர்த்தருக்கு

ITHO MANITHARGAL MATHIYIL LYRICS


இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)
1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்
Itho manithargal mathiyil
Vasam seibavarae
Enggal naaduvile vasithidae
Virimbidum theivamae (devanae)
1. Umakku singhasanam ammaithida
Ummai thuthikindrom yesuvae
Parisutha alangarathudanae
Ummai tholugindrom yesuvae
Enggal mathiyil ulavidoam
Enggalodu yendrum vasam seiyum

ITHO ORU THIRANTHA VASAL LYRICS


இதோ ஓர் திறந்த வாசல்
உனக்காக எனக்காக
இயேசு தருகிறார்
ஒருவனும் பூட்ட முடியாதே – இதை 
1. அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட
அறுவடை பணியை நாம் செய்திட
2. கட்டுண்ட மக்களை விடுவிக்க
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட 
3. சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க
சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட 
4. கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க
சிலுவை கொடி தேசத்திலே பறந்திட 
5. இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட
மகிமையான ஊழியத்தை செய்திட

UYIRODU UYIRAGA KALANTHAVARU LYRICS


உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு
எங்க இயேசு (3) என்று சொல்லு
இதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லு
நம்ம இயேசு (3) நல்லா சொல்லு
தாயின் கருவில் தெரிஞ்சவரு
என் பேரை சொல்லி அழைச்சவரு
எனக்காக (3) மரித்தீரே
எனக்காக (3) உயிர்த்தீரே
1. பூமியில் வந்தாரே
அன்பை விதைத்தாரே
சந்தோஷம் தான் (2)
அன்று நடந்த அற்புதங்கள்
இன்று இங்கு நடக்கும் ஐயா
குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்
இயேசு மட்டும் எனக்கு போதும் – எனக்காக
2. கிருபை தருபவர் பெருக செய்பவர்
ஆராதிப்போம் (2)
யோசனை தந்து நடத்திடுவார்
பெரிய காரியம் செய்திடுவார்
உலகத்தை ஜெயித்தார்
சாத்தானை அழித்தார்
கண்ணீரைத் துடைத்து சுகம் கொடுப்பார் – எனக்காக
3. உன்னைப் படைத்தவர் என்னைப் படைத்தவர்
அழகானவர் (2)
ஏந்தி தூக்கி சுமந்தார் ஐயா
கண்மணி போல் காத்தார் ஐயா
நீயும் நானும் அவரின் சொந்தம்
உலகத்தை நாமும் கலக்கிடுவோம் – எனக்காக

UYIRTHELUNTHA NAM YESU LYRICS


உயிர்தெழுந்த நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடிருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்


ஹல்லேலூயா பாடுவோம்

ஆர்ப்பரித்து போற்றுவோம்-2


உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்

VALLA KIRUBAI NALLA KIRUBAI LYRICS


வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை 
உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே (2)
அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (2)
1. அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல்
கிருபை தாங்கினதே
ஹே முடி கூட கருகாமல்
புகை கூட அணுகாமல்
கிருபை தாங்கினதே 
அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)
2. பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
கிருபை தாங்கினதே
என் நெருக்கத்தின் நேரத்தில்
நசுங்கி நான் போகாமல்
கிருபை தாங்கினதே 
அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)
3. வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் காத்த கிருபை 
உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே (2)
அல்லே அல்லேலூயா
அல்லே அல்லேலூயா (4)

VINNILUM MANNILUM UMMAITHAVIRA LYRICS


விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு ? – இந்த
மண்ணுலகில் உம்மையன்றி வேற
விருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்


1. உம்மோடு தான் எப்போதும் நான்
வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே


2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
முடிவிலே என்னை மகிமையில்
ஏற்றுக்கொள்வீர்


3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா
எனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா


4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய்
கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே


5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர்
உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்