Tuesday, December 3, 2019

KALVAARI ARGIL VAAREER

கல்வாரிக்கருகில் வாரீர்
கூடிச்சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்
உள்ளத்தில் இயேசுவின் பால்
அன்பு கொண்டோர் யாரும் கூடுவீர்
கல்வாரிக்கருகில் கூடுவீர்

1. சிறுவர் நடுவர் முதுவர் யாவரும் சேர்ந்து கூடட்டும்
உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும்
துதியின் கீதம் எழுப்பி ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்
அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால்

2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்
விகற்பமின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார்
அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்வார்
கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? – ஆகையால்

3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள் மட்டும்
மிஷனெரிகள் என்ற வார்த்தை பேசப்படட்டும்
தியாகம் புரிவோர் மேலும் மேலும் எழும்பி வரட்டும்
இயேசுவின் உள்ளம் அதனால் ப10ரிப்பாகட்டும் – ஆகையால்

KALVARI ANBAI ENNIDUM VELAI

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே

சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே

எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்

KARTHARAI NAAN EKKALAMUM

கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
அவர் துதி என் நாவிலே
என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா

1. யெஹோவாவை நான் உள்ள வரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதை கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார்

2. அல்லேலூயா நான் பாடிடுவேன்
அவரை நான் ருசித்ததினால்
அநுதினம் அதிகாலையில்
அவர் பாதம் காத்திருப்பேன்

3. சிங்கக்குட்டிகளும் சோர்ந்திடுமே
பட்டினி கிடப்பதினால்
சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
சந்தோஷம் அடைவாரே

KARTHARIN MAAMSAM VANTHUT KOLLUNGAL

1. கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்

2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்

3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.

4. தாமே ஆசாரி, தாமே பலியாய்
தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்.

5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம்

6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்

7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்

8. தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.

9. விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.

10. எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.