Friday, December 6, 2019

NARKIRIYAI ENNIL THUVANGIYAVAR

நற்கிரியை என்னில் துவங்கியவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2
அழைத்த நாள் முதல் இன்று வரை
உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை
உடைக்கப்பட்ட நேரத்திலும்
உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-2

1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்
நீங்க என்னை விலகவில்லை
உடன் இருந்தோர் உடைந்து சென்றும்
நீங்க என்னை விலகவில்லை
முடிந்ததென்று நினைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
உலர்ந்ததென்று நகைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-2

2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
நீர் என் சபையை மறக்கவில்லை-2
உடைந்து போன மந்தையிலும்
பெரிதான மந்தையை தந்தவரே-2

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-4

MAATU THOZHUVATHIL BALAGANAI

மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்
இயேசு பிறந்தாரே
கொட்டும் பனியிலே இராஜாவாக
இயேசு பிறந்தாரே-2

நம் பாவங்கள் போக்க
சாபங்கள் நீக்க
பூலோகம் வந்தாரே-4

விண்மீன் காட்டிய வழி இது
இருளை போக்கிய ஒளி இது
நம் இயேசு இராஜாவின் வழி-2

சின்ன குழந்தை சிரிப்பினில்
இதயங்கள் மகிழுதே
செல்ல குழந்தையின் வருகையால்
இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில்

தூதர் உம்மையே துதித்திட
இடையர் உம்மையே வணங்கிட
சாஸ்திரியர் உம்மை தொழுதிட

இருள் போக்க பிறந்தாரே
கனிவாய் பரலோகம் திறந்தாரே
மாந்தர்கள் மத்தியில் நமக்காக
இயேசு பாலனாய் பிறந்தாரே-2-மாட்டுத்தொழுவத்தில்