Friday, September 30, 2022

NEERE EN BELAN NEER EN ADAIKALAM LYRICS,

நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
ஆபத்துக் காலத்தில் என் துணை
சுற்றி நின்று என்னைக்
காக்கும் கன்மலை

1.யாக்கோபின் தேவன்
என் அடைக்கலம்
யோகோவா தேவனே என் பலம்
கலக்கமில்லை பயங்கள்
இல்லை வாழ்விலே
நான் இருப்பதோ
கர்த்தரின் கரத்திலே

2.அமர்ந்திருந்து தேவனை
நான் அறிகிறேன்
அவர் கரத்தில் வலிமை
நித்தம் பார்க்கிறேன்
தாய் பறவை சேட்டை
கொண்டு மூடியே
கண்மணிபோல்
என்னைக் பாதுகாக்கிறீர்

3.பசும்புல் வெளியில் என்னைத்
தினம் மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீர் ஊற்றில்
தாகம் தீர்க்கிறீர்
சத்துருவின் கண்கள் காண எண்ணெயால்
என் தலையை அபிஷேகம் செய்கிறீர்

4.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்
வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
வார்த்தையாலே என்னைத்
திருத்தி நடத்துவீர்


ARIYAATHATHUM ETTAATHATHUMANA PERIA KAARIYAM TAMIL LYRICS

அறியாததும் எட்டாததுமான
பெரிய காரியம் செய்திட்டார்
எண்ண முடியாததும்
நான் நினையாததுமான
பெரிய காரியம் செய்திட்டார்

என் தேவனால்
எல்லா நன்மை கிடைத்திடுதே
என் தேவனால்
நல்ல மேன்மை கிடைத்திடுதே
என் தேவனால்
பரிபூரணமடைந்திட்டேனே

கிருபையால் நான்
என்றும் ஜெயித்திடுவேன் - 2

சிங்கத்தின் வாயை கிழிக்கின்ற
வரம் தந்தார்
சத்துரு கோட்டையை தகர்க்கின்ற
ஞானம் தந்தார் - 2

என் தேவனால்
நான் சேனைக்குள் பாய்வேன்
என் தேவனால் நான் வென்றிடுவேன் - 2
கிருபையால் நான் தாண்டிடுவேன்
கிருபையால் நான் வென்றிடுவேன்
அவர் கிருபையால் நான் தாண்டிடுவேன்
அவர் கிருபையால் நான் வென்றிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா - 2

ராஜாவின் பிள்ளையாய்
என்னை அவர் மாற்றினார்
தேவனின் ராஜ்ஜியத்தை
எனக்குள்ளே அவர் வைத்திட்டார் - 2
நித்திய ஜீவனை இரத்தத்தால் தந்தாரே
நீதிமானாய் என்னை மாற்றினாரே - 2
அவர் கிருபையால் நான் மீட்பு பெற்றேன்
அவர் கிருபையால் நான் நீதி பெற்றேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா - 2

தேவையெல்லாம் அவர் நிறைவாக சந்தித்தார்
ஐஸ்வர்யம் எல்லாம் எனக்காக வைத்திட்டார் - 2
பாலைவனம் கூட சோலையாய் மாறீற்றே
பொன்னின் மேல் நடக்கின்ற வாழ்வை தந்தார்
அவர் கிருபையால் நான் வாழ்வு பெற்றேன்
அவர் கிருபையால் நான் மேன்மை பெற்றேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா - 2
                                                                             - அறியாததும்

VAZHUVAMAL ENNAI KATHIDUM LYRICS,

வழுவாமல் என்னை காத்திடும்
அழகான தேவன் நீரே
வானம் மேலே பூமியின் கீழே
அளந்துவிட்டாலும்
உம் அன்பை அளக்க
என்னால் என்றும் முடியவில்லையே

அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்

தீமைகள் எல்லாம்
நீர் நன்மையாய் மாற்றினீர்
உந்தன் அன்பு சிறந்தது
இடராமல் காத்துக்கொண்டீர்
கண் உறங்காமல் பாதுகாப்பீர்
                                   - அன்பே

அக்கினியில் நடந்தேன்
நான் ஆறுகளைக் கடந்தேன்
உந்தன் அன்பு காத்ததே
என்னோடு என்றும் இருந்தீர்
என் வாழ்வோடு என்றும் இருப்பீர்
                                   - அன்பே

KIRUBAIYINAAL NAAN PILAITHUKONDEN TAMIL LYRICS

கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
கருணையினால் நான் மீட்கப்பட்டேன்-2
குற்றங்குறை பாக்காம பாவமெல்லாம் மாற்றினாரு
தப்பு தண்டா எல்லாமே அவர் மேல ஏற்றினாரு

வார்த்தை நெஞ்சத்துல என் வாழ்க்கை உச்சத்துல
அப்பாவின் கரத்தில குறையே இல்ல
கவலப்பட்டதில்லை தோல்விய தொட்டதில்ல
எல்லாமே அவரோட வார்த்தையால

கீழ கிடந்த என்ன தூக்கி விட்டாரே
வெல்ல துடித்த எனக்கு வெற்றி தந்தாரே-2
பட்டம் தேவை இல்ல பதவியும் தேவை இல்ல
திட்டம் வார்த்தையில குறையே இல்ல
சட்டம் செய்யவில்ல மொத்தம் கிருபையில
வட்டம் எனக்கொரு வரையே இல்ல

குற்றங்குறை பாக்காம பாவமெல்லாம் மாற்றினாரு
தப்பு தண்டா எல்லாமே அவர் மேல ஏற்றினாரு
- வார்த்தை நெஞ்சத்துல

இரக்கத்தினால் என்னை விலை கொடுத்து
பாசத்தினால் என்னை அரவணைத்து-2
அப்பா என்னோட வாழ்வில எப்போதும்
தப்பா நான் ஒருநாளும் போவதில்ல
வெறுப்பா என் முன்ன வருகிற சாத்தானை
நெருப்பா விரட்டிடும் அப்பாவுண்டு

குற்றங்குறை பாக்காம பாவமெல்லாம் மாற்றினாரு
தப்பு தண்டா எல்லாமே அவர் மேல ஏற்றினாரு
- வார்த்தை நெஞ்சத்துல

ERICHO EN MUN VILUNTHEDUTHE TAMIL LYRICS

எரிகோ என் முன் வீழ்ந்திடுதே
நீர் என்னோடு இருப்பதினால்
செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே
நீர் என்னுள்ளே இருப்பதினால் - 2

உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
உம்மைப் போற்றி
போற்றி துதிப்பேன் ராஜா நீரே - 2

என்னை நீர் மீட்டுக் கொண்டீர்
கிருபையால் சேர்த்துக் கொண்டீர்
பெலவானாய் மாற்றி விட்டீர்
புது வாழ்வு தந்து விட்டீர்

நீதியில் நாடத்துகின்றீர்
அன்பினால் தாங்குகின்றீர் - 2
- உம்மை போற்றி

பூரண தேவன் நீரே
மகிமையின் ராஜன் நீரே
அற்புத தேவன் நீரே
உண்மையின் ராஜன் நீரே

தவறின நேரங்களில்
தவறாமல் உதவினீரே (நான்) - 2

Thalai Nimira Seithaar ENNAI UYARTHIVITTAR

தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே

கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார் - 2

நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர

சிலுவையில் எந்தன் சிறுமையை
சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
வெற்றியின் தேவனே
கைகளில் பாய்ந்த ஆணியால்
என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால்
என்னை நடக்க செய்தாரே

நம் கர்த்தர் நல்லவரே-2

குகைதனில் ஒளிந்து கிடந்தேனே
அரண்மனை தந்தாரே
வெட்கத்தை அவர் மாற்றினார்
நம்பினேன் விடுவித்தார்
எதிரிகள் முன் உயர்த்தினார்
என் தலையை நிமிர செய்தார்
உத்தமம் அவர் வார்த்தைகள்
செய்கைகள் சத்தியம்

நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர

THUTHIPPEN THUTHIPPEN EN VAALNAAL MULUDHUM TAMIL LYRICS

துதிப்பேன் துதிப்பேன்
என் வாழ்நாள் முழுவதும்
என்னை காத்திட்ட நல் மேய்ப்பர்
நீர் ஒருவரே
புகழ்வேன் புகழ்வேன்
என் காலம் முழுவதும்
என்னை தாங்கிட்ட கைகள் உம்
கைகள் அன்றோ

வானம் மாறிப்போகும்
பூமி மாறிப்போகும்
உம் வார்த்தைகள்
என்றென்றும் மாறாதது-2

நீர் நல்ல தேவன்
அற்புதங்கள் செய்யும் தேவன்
சர்வ வல்லவர் சர்வ வல்லவர்
என் நிழலாய் என்றும்
இருப்பவர் நீரே-2

அறிவதும் என் வாழ்வின் எல்லா
திசைகள் பற்றி அறிவதும்
புரிவதும் என் மனதின் பாரம்
எல்லாம் சரியாய் புரிவதும்

நீர் அல்லால் வேறொருவர்
இங்கே இல்லை
மனக்காயம் மாற்ற வைத்தவர்
எவரும் இல்லை

ஜீவன் உள்ள நாள் எல்லாம்
உம் கூடாரத்தில் தங்கி
இளைப்பாருவேன்-2

நிரப்பினீர் உம் அன்பினால்
என் உள்ளம் எல்லாம் நிரப்பினீர்
கழுவினீர் உம் இரத்தத்தால்
என் பாவம் எல்லாம் கழுவினீர்

நீர் அல்லால் வேறொருவர்
எவரும் இல்லை
என் பாவ கறைகள் போக்க
யாரும் இல்லை

ஜீவன் உள்ள நாள் எல்லாம்
உம் கூடாரத்தில் தங்கி
இளைப்பாருவேன் - 2
- துதிப்பேன் துதிப்பேன்