Thursday, May 24, 2018

BALAN KODUPPEER NALLA LYRICS


பல்லவி
பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்
அனுபல்லவி
வழியோரமா? நான் கற்பாறையா?
முள் புதரா? நான் நல்ல நிலமா? – ..பலன்
1. இறைவனின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம்
பறவைகள் விரைந்தே தின்பது போல்
பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – ..பலன்
2. மண்ணிலா பாறை நிலமாகும்
மனதில் நிறையற்ற மனிதர்களே
வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
வெயிலில் வார்த்தை கருகி விடும் – ..பலன்
3. முட் செடி புதராம் மனுவுள்ளம்
முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே
இறைவனின் வார்த்தை வளரவில்லை
இறுகியே ஆசைகள் கொன்றதினால் – ..பலன்
4. இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர்
குறையில்லா பண்பட்ட நிலமாகும்
அறுபது முப்பது நூறு என்றே
அறுவடை எடுப்பார் தம் வாழ்வில் – ..பலன்

ARUVADAIYO MIGUTHI AATKALO LYRICS


அறுவடையோ மிகுதி
ஆட்களோ கொஞ்சம்
அறுவடையின் தேவனை நோக்கிடுவோம்
1. வயல் நிலங்கள் எல்லாம்
விளைந்து விட்டதன்றோ
ஓடி ஓடி அறுப்போம்
களஞ்சியத்தில் சேர்ப்போம் – அறுவடையோ
2. திறப்பிலே நிற்போம்
விரிசல்களை அடைப்போம்
விழித்திருந்து ஜெபிப்போம்
வெற்றி கண்டு மகிழ்வோம் – அறுவடையோ
3. நதியளவு கண்ணீர்
நாள்முழுதும் வடிப்போம்
இந்தியாவை நினைப்போம்
இரவும் பகலும் ஜெபிப்போம் – அறுவடையோ
4. ஆத்ம பாரம் கொள்வோம்
ஆர்வத்தோடு செல்வோம்
யுத்த களத்தில் நிற்போம்
கோலியாத்தை வெல்வோம் – அறுவடையோ
5. தொடர்ந்து நன்மை செய்வோம்
சோர்வில்லாமல் செல்வோம்
குறித்த காலம் வருமே
அறுவடை நிச்சயமே – அறுவடையோ

ENNAI AATKONDA YESU LYRICS


என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே
1. மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
2. தனிமை வாட்டும்போது – நம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

KANMANIPOLA KATHIRE EN YESAPA LYRICS


கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா
என்னைக் கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா 
என்னை தோள் மீது சுமந்திரே
என்னை பத்திரமாய் காத்தீர்
என்னை உள்ளங்கையில் வரைந்தீரே என் இயேசப்பா
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா 
என் வாழ்வில் நோக்கம் வைத்தீர்
எனக்கென்றோர் திட்டம் வைத்தீர்
உம் விருப்பம் போல் செய்திடுவேன் என் இயேசப்பா
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா 
என்னைப் படைத்தவரே உம் வழியில் வாழ்ந்திடவே
என்னை வரைந்தீரே உம்மைப் போல நடந்திடவே
நான் உம்ததமமாய் நடந்திடுவேன் என் இயேசப்பா
நான் உண்மையாக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

KERUBIN SERABINGAL LYRICS

கேரூபின் சேராபின்கள்
ஓய்வின்றி உம்மைப் போற்றுதே (2)
பூலோக திருச்சபை எல்லாம்
ஓய்வின்றி உம்மை போற்றிட
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள் பரலோக ராஜாவே (2)
இந்த வானம் பூமியுள்ளோர் யாவும்
உந்தன் நாமம் உயர்த்தட்டுமே
1. பூமியனைத்திலும் உந்தன் மகிமை
நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையாய் அசைகின்றதே
துதி கன மகிமைக்குப் பாத்திரர்
எல்லாப் புகழும் உமக்குத் தானே
2. வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நாங்கள் உங்கள் தேவ ஆலயம்
நீர் தாங்கும் தூயஸ்தலம்
சகலமும் படைத்த என் தேவா
நீர் நித்திய சிருஷ்டிகரே
3. பரலோகத்தில் உம்மை அல்லா
யாருண்டு தேவனே
பூலோகத்தில் உம்மைத் தவிர
வேறொரு விருப்பம் இல்லை
என்றும் உம்மோடு வாழ
எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர்

MANAVALAN KARTHAR YESU LYRICS


மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?
பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்
1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே
2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே
3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு – என் பிரியமே

ORU KODI PAADALGAL NAAN LYRICS


ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)

NIRAPUNKAPA NIRAPUNKAPA LYRICS


நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா


1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்


2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்


3. தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என்


4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்


5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

NEER THIRANTHAAL ADAIPAVANILLAI LYRICS


நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2)
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2)
1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர்
பூமியில் இல்லையே (2)
பலவானின் வில்லை ஒடித்து
கீழேத் தள்ளுகிறார் (2)
தள்ளாடும் யாவரையும்
உயர்த்தி நிறுத்துகிறார் (2)
உயர்த்தி நிறுத்துகிறார் – இல்லை இல்லை
1. நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்ப விடாமல்
கடலில் அழித்தவராம் (2)
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி (2)
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அனுகாது (2)
என்றும் அனுகாது – இல்லை இல்லை
2. தேவனைத் துதிக்கும் துதியாலே
எரிகோ விழுந்தது
பவுலும் சிலாவும் துதித்த போது
சிறையும் அதிர்ந்தது (2)
துதியாலே சாத்தானை
கீழேத் தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம் (2)
கொடியை ஏற்றிடுவோம் – இல்லை இல்லை
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) – இல்லை இல்லை

PARATHIL ULLA ENGAL PIDHAVE LYRICS

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
உம் சித்தம் நிறைவேற
1. நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள
2. மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்
பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள
3. காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே } -2 – பரத்திலுள்ள

PIRANTHAR PIRANTHAR KIRISTHU PIRANTHAR LYRICS


பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார்
2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார்
2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள் – பிறந்தார்

THUNBAM UNNAI SOOLNTHALAI LYRICS


துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
பல்லவி
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி
1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி
2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி
2. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்

UM SAMUGAME EN BAKIYAME LYRICS


உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்..
ராஜா.. இயேசு ராஜா
1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே
2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா -2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே

ULAGAI RATCHIPPAVARAE UNNATHA LYRICS


உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே
உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே
1. காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
உமக்கு கடினமில்லை
மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
உமக்கு நிகருமில்லையே
உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே
2. எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
அன்பினை அறிவிக்கத்தான்
அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
பேரன்பை நிரூபிக்கத்தானே
உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்

UMMAITHAN NAAN PAARKINDREN LYRICS


உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன் 2..
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை -2 – ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை
1. கண்கள் நீதிமானை பார்கின்றன (உம்)
சேவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம்
இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர்
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் –
2. உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்தின்றும் நீர் விடுவிக்கின்றீர்
3. நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
ஒரு நன்மையும் குறைவதில்லையே
4. துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்
5. தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்

UNTHAN NAAMAM MAGIMAI LYRICS


உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே
– ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்


1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே


2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே


3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம்


4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவநதி பெருகியோட வேண்டுமே


5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாச கூட்டம் பெருக வேண்டுமே

VALKAI KURUKIYATHE KAINTHA LYRICS


1. வாழ்க்கை குறுகியதே
காய்ந்த சருகைப் போன்றதே
மடியும் விதையைப் போன்றதே உணர்வாயே
நாட்கள் கடந்து போகுதே
முடிவு வேகம் வருகுதே
கடைசி காலம் இதுவே இதுவே
பல்லவி
இப்போதே இப்போதே
கர்த்தர் உன்னை அழைக்கும் நேரம் இப்போதே
பாவத்தில் நீ நிலைத்தால் இரட்சிப்பை நீ இழப்பாய்
பின்பு அழுதும் பயனில்லை திருந்திடு
2. அழகு பூக்கள் அழிந்துபோம்
இளமை அழகும் மறைந்துபோம்
வாழ தருணம் கிடைக்காதே திருந்திடு
கர்த்தர் உன்னை அழைக்கையில்
மீண்டும் காலங் கடத்தாதே
அழிவை நோக்கி ஓடாதே ஓடாதே
3. பாவி எச்சரிப்பைக் கேள்
இயேசுவைத் தெரிந்தெடு
பரலோகம் மகிழும் அப்போது
பாவ வாழ்க்கை வேண்டாம் வா
இயேசு உன்னை மாற்றுவார்
வாழ்வு புதியதாகுமே இப்போதே

VANTHEN MEL IRANGUM LYRICS


வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே
தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
சுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே
வல்லமை தாரும் வரங்கள் தாரும்
தாகம் தீர்த்து அபிஷேகியும்
1. சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
கேள்விப்பட்ட யாவையும் சொல்பவரே
கீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமை
சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே
2. காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே
3. சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
வரங்களால் பெற்றிட அருள் தாருமே

YESU ENNAI KAIVIDAMATAR LYRICS


இயேசு என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்
அவர் என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்
அவர் என்னை கைவிடமாடார் 
இயேசு என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
கடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுது
அவர் என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
கடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுது
இயேசு என்னை கைவிடவில்லை

YESU ENNODU IRUPATHA LYRICS


இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்..
1. கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியதம்மா
அகிலம் ஆளும் தெய்வம் – என்
அன்பு இதய தீபமே
2. பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா
3. உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா
4. எரிகோ கோட்டை எல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா

SATHANUKU SAVAL VIDUM LYRICS


சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி
சவால் …………..சவாலே
நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே
1. சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே
ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே
சவால் ……………சவாலே
நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே
2. சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே
ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை
சவால் …………….சவாலே
நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே
3. பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே
எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
சவால் ……………….சவாலே
நாங்க ஜோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே
4. என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்
என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்
சவால் ……சவாலே
நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

THOZHUGIROM ENGAL PITHAVE LYRICS


தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்
வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்
கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல (2)
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்
அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்
பாவிநேசன் பாவநாசன்
பரமபாதன் வரமே வாசன் (2)
துங்காசிங்கன் மங்காதங்கன்
துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்
பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்

STHOTHIRAM THUTHI PATHIRA UMMAI LYRICS


ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக
1. வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே
2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே
3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே
4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்
5. அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன்

STHOTHIRAME STHOTHIRAME APPA APPA LYRICS

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
நல்லவரே வல்லவரே 
1. கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
ரட்சகரும் தேவனுமானார் – நான்
நம்பின என் துருகமும் கேடகமானார்
ரட்சணிய கொம்புமானார்
2. தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு
சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்
3. உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம்
காருணியத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்

SUGAM BELAN ENAKULLE PAINTHU LYRICS


சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே -2 
இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தவணி எங்கும் பாய்கின்றதே -2
உங்க வல்லமையால் சுகமானேன்
உங்க வார்த்தையால் சுகமானேன்
உங்க தழும்புகளால் சுகமானேன்
உங்க தயவினால் சுகமானேன்
இயேசையா இரெட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே – உங்க
1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா
2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
வல்லமை பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே – இயேசையா
3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே
முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே – இயேசையா

SILUVAIYIN NIZHALIL ANUDHINAM LYRICS

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில்
1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்
2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்
3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்

SILUVAIYINADIYIL SINDHINA RATHATHIL LYRICS


சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா (2)
உன் தூய இரத்ததால்
என்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் ஐய்யா (2)
1. சிந்தையின் பாவங்கள் போக்கிட
சிரசினில் முல்முடி அறைந்தனரோ (2)
முட்களால் சிந்தின இரத்தத்தாலே (2)
சிந்தையை பரிசுத்தம் ஆக்கிடுமே (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா
2. திருக்குள்ள இதயத்தைக் கழுவிட
ஈட்டியால் இதயத்தைப் பிளந்தனரோ (2)
மாசில்லா உம் திரு இரத்தத்தாலே (2)
கேடுள்ள இருதயம் கழுவிடுமே (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா
3. கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்
இரத்தத்தில் மூழ்கிட வந்தேனைய்யா (2)
பரிசுத்த வாழ்வினைத் தந்திடுமே (2)
உன் தூய இரத்தத்தால் மூடுமைய்யா (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா

SILUVAIYO ANBIN SIGARAM LYRICS


சிலுவையோ அன்பின் சிகரம்
சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனை
சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையை எனக்காக மரித்தீர்
1. கால்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்
கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பை
எண்ணி என்ன சொல்லிடுவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன்
2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே
மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்
3. சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரே
நீர் செய்த நன்மை யாவும் என்றும் நினைத்திடுவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

SILUVAYIL THONGUM YESUVAI LYRICS


சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார்
1. முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
கருணை தேவன் உனக்காக
2. கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்

SINTHIKA VARIR SEYAL VEERARE LYRICS


சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2
சிந்திய இரத்தம் கூப்பிடுதே -3
சபையே நீ திரும்பிப் பார்
சபையே நீ குனிந்துப் பார்
சபையே நீ நிமிர்ந்துப் பார்
முன்னேப் பார் -3
1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்
பூர்வ பாதைகளை விசாரித்து அறி
இளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்கு
களைப்பை போக்கிடுமே போதுமதுவே
2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை
முழங்கால் முடக்கிக் குனிந்துபார்
வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமே
வனாந்தரத்தில் அதினால் அழிவாமே
3.வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்
வானவரின் வருகை சமீபமே
நிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே
நிலைத்திருப்பவைகளையே நாடு நீயே
4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை
கண்டிப்பாய் செயல்பட வேண்டுமே
அழியும் கணிகளைப் பொறுக்காவிடில்
அழுகை தான் தங்கிடுமே வருகையிலே

PARANAE EN IDHAYATHIL LYRICS

பரனே என் இதயத்தில் வாரும்
பரநோக்கம் நிறைவேற்ற வாரும்
அனுதினம் என்மனம் கழுவிடும்
அழகிய புதுமனம் தந்திடும்
பரிவுடன் பாவியை கண்டிடும் – என்
சுயமதை திருசலவை செய்திடும்
அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சை
புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை
பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை
அழுகிய சிந்தனை மங்கவே
மனதினுள் வசனங்கள் தங்கவே
அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே
அடைக்கலம் அருளுமே துங்கவே 
திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும்
கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன்
கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன்
புவியதன் சோதனை குறையவே
பரமனின் போதனை நிறையவே
பகலதன் பிள்ளையாய் வளரவே
உலகினில் தீபமாய் ஒளிரவே
மயக்கத்திலே மனம் கிரக்கத்திலே குணம்
உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் – கெட்ட
உணர்ச்சிகள் அனைத்தையும் கொளுத்திவிடும்
அகமதின் கபடினை தள்ளவே
ஆவியின் கனிதனை அள்ளவே
அசுரனை அனுதினம் வெல்லவே
அவனியில் கிருபையைச் சொல்லவே

PARALOGAM THAN EN PEACHU LYRICS


பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்
தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா
1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் -என்னை
2. உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை
3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
சேர்ந்து பாடிடுவேன் -நான்
நடனமாடிடுவேன்
4. என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும் – நான்
5. கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்
எல்லாமே புதிதாகும்
6. என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டிச் சென்றிடுவேன்