Monday, May 14, 2018

MAANGAL NEERODAI VAANJITHU LYRICS


மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
என் ஆத்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
நீர் என் பெலனும் என் கேடகமாம்
என்னாவி என்றும் உமக்கடிபணியும்
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்

KIRUBAIYAL NILAI NIRKIROM LYRICS


கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை – (7) – கிருபையால்
1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை
கிருபை – (7) – கிருபையால்
2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை
கிருபை – (7) – கிருபையால்
3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை
கிருபை – (7) – கிருபையால்
4. வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்தது உங்க கிருபை
கிருபை – (7) – கிருபையால்
5. கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
கிருபை – (7) – கிருபையால்




kirupaiyaal nilai nirkintom
thaeva kirupaiyaal nilai nirkintom

kirupai (kirupai) kirupai (kirupai) (7)

paer solli alaiththathu unga kirupai
periyavanaakkiyathum unga kirupai

neetheemaanaay maattinathu unga kirupai
niththiyaththil serppathum unga kirupai

kattukalai neekkiyathum unga kirupai
kaayangalai kattiyathum unga kirupai

vallamaiyai aliththathum unga kirupai
varangalai koduththathum unga kirupai



JEBATHAI KETKUM ENGAL DEVA LYRICS


1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்
2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்
3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம்
4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்

ENDRUM ANANDHAM EN YESU LYRICS


என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)


1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்


2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்


3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்


4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு


5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்


6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்


7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்

DEIVIGA KOODARAMAE ENN LYRICS


தெய்வீகக் கூடாரமே – என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
1. கல்வாரி திருப்பீடமே
கறைபோக்கும் திரு இரத்தமே
உயிருள்ள ஜீவ பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா
2. ஈசோப்புலால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோல
வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையால்
3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்
4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்
5. துபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்
6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்
மகிமையில் நுழைந்துவிட்டோம்

DEIVAME YESUVE UMMAI THEDUGIREN LYRICS


தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2


1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனையா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனையா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்


2. எதை நான் பேசவேண்டுமென்று
கற்றுத் தாருமையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே


3. உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரைத் துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன்

DASARE ITHARANIYAI ANBAI LYRICS

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்
1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே
3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே
4.இந்துதேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட
5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

AGORA KASTHI PATTORAI LYRICS


1. அகோர கஸ்தி பட்டோராய்
வதைந்து வாடி நொந்து,
குரூர ஆணி தைத்தோராய்
தலையைச் சாய்த்துக்கொண்டு,
மரிக்கிறார் மா நிந்தையாய்!
துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்
மரித்த இவர் யாவர்?

2. சமஸ்தமும் மா வடிவாய்
சிஷ்டித்து ஆண்டுவந்த,
எக்காலமும் விடாமையாய்
விண்ணோரால் துதிபெற்ற
மா தெய்வ மைந்தன் இவரோ?
இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ
பிதாவின் திவ்விய மைந்தன்?

3. அநாதி ஜோதி நரனாய்
பூலோகத்தில் ஜென்மித்து,
அரூபி ரூபி தயவாய்
என் கோலத்தை எடுத்து,
மெய்யான பலியாய் மாண்டார்
நிறைந்த மீட்புண்டாக்கினார்

என் ரட்சகர், என் நாதர்.

AGILATHAIYUM AAGAAYATHAIYUM LYRICS


அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே
ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனமகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை