Sunday, December 27, 2015

Imaipoludhum Ennai kaividamaateer

இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

1. நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன்
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர்

2. கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீர் அண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்

3. சத்துருக்கள் முன்பாய் ஒரு பந்தி ஆயத்தப்படுத்தி
என் தலையை எண்ணெய்யால் அபிஷேகித்தீர்
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
என்னை தொடரும்
உம் வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா - (2)

4. பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம்
உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் எதிர்காலம்
உந்தன் கையில்

5. நடத்துவீர் நடத்துவீர் கரம் பிடித்து நடத்துவீர்
காத்துக் கொள்வீர் காத்துக் கொள்வீர்
கண்மணிபோல காப்பீர்

6. அகற்றுவீர் அகற்றுவீர் என் வியாதிகளை அகற்றுவீர்
பார்த்துக்கொள்வீர் பார்த்துக்கொள்வீர்
என் தேவையை பார்த்துக் கொள்வீர்

7. என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுசு தந்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழையில் வைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்

Yesu Maharajane meendum

இயேசு மகாராஜனே
மீண்டும் வந்திடுவீரே
உம் மக்களாய் ஒன்று கூடினோம்
உம் மகிமையை தரிசிக்க

பஞ்சங்கள் கொள்ளை நோயும் வாட்டுதே
பூகம்பம் யுத்தங்கள் பெருகுதே
மனிதனின் அன்பு தணிந்து போகுதே
உபத்திரவ காலம் தொடங்குதே

இது என்னவோ என்று சிந்தித்துப் பார் நண்பனே
காலங்கள் இது முடிவுதான் என் நேசமே
இவைகளெல்லாம் வேதனைக்கு ஆரம்பம்
இராஜாதி ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்

உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் அரசு வருவதாக
உம் சித்தம் பூமியெங்கும் நிறைவேறுவதாக
என்னை மன்னித்தது போல் மற்றவர்களை
நானும் மன்னிக்கணுமே
எங்கள் அன்றாட உணவை அனுதினமும்
தரவேண்டுமே
உம் இராஜ்யம் கனமும் வல்லமை
என்றென்றும் உரித்தாகட்டும்

இயேசு மகாராஜனே
மீண்டும் வந்திடுவீரே
உம் மக்களாய் ஒன்று கூடினோம்
உம் மகிமையை தரிசிக்க
மகிமையை தரிசிக்க
மகிமையை தரிசிக்க

இயேசுவே வாருமே
இன்றே வாருமே
இயேசுவே வாருமே
ஆவலாய் நிற்கிறோம்
இயேசுவே இயேசுவே

Yesuvai Pol Oru Deivam illai

இயேசுவைப் போல் ஒரு தெய்வம் இல்லை
இந்த உலகத்தில் உம்ம போல யாரும் இல்லை
மேலே உயரே உயரே இருந்தவரே
விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே

இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... இயேசுவே...

தண்ணீரை ரசமகா மாற்றினீரே
அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே
கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே
கடும் காற்றும் உம்மை கண்டு அடங்கினதே

இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... இயேசுவே...

லாசருவே நீ வா என்றதும்
அன்று மரித்தவன் உயிர் பெற்று நடந்தானே
உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே
அது ஜீவனை தந்திடும் நிச்சயமே

இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... இயேசுவே...

வாரால் அடித்து அறைந்தனரே
உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே
ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள்
நீர் உயிரோடெழுந்தது சரித்திரமே

இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... இயேசுவே...

UYIRODU EZHUNTHAVAREY UMMAI TAMIL LYRICS

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா - (4)

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா - (4)

அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா - (4)

Ummai Nokki Parkidren

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம் - (4)

சரணங்கள்

1. உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே

3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் - நான்
என்னை மறக்கின்றேன்

UMMAI UYARTHI UYARTHI

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா

1. கரம்பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி (2) – உம்மை

2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்

3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

5. வலுவூட்டும் திருஉணவே
வாழ வைக்கும் நல்மருந்தே

Ummodu Irupathu Thaan ullathin

உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா

இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

1. எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்

2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

3. எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

4. மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்

Um Prasanam Naadi Vandhaan

உம் பிரசன்னம் நாடி வந்தேன்
கிருபையினால் நோக்கிடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே

என் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயம் அதில் ஆறுதலே
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
அஞ்சிடேனே நீர் இருக்கையிலே --- என் இயேசுவே

2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
உம் பிரசன்னம் என் அடைக்கலமே
திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே --- என் இயேசுவே