Monday, April 16, 2018

UNNATHAMANAVARIN MARAIVINILE SARVA LYRICS

உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்


1. ஆண்டவர் எனது அடைக்கலமானார்
நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
வேடர் கண்ணிகள் கொள்ளைநோய்கள்
தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்


2. தமது சிறகால் அரவணைக்கின்றார்
இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
சத்திய வசனம் எனது கேடகம்
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு


3. என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
பதினாயிரம் பேர்தாக்கினாலும்
பாதுகாப்பவர் என் பக்கத்திலே
பாதிப்பு இல்லையே பயமில்லையே


4. செல்லுமிடமெல்லாம் என்னைக்காக்க
தமது தூதருக்கு கட்டளையிட்டார்
பாதம் கல்லிலே மோதாமலே
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்


5. சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்
சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்

VINNAPATHAI KETPAVARE EN KANNERAI LYRICS

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்

THOOYATHI THOOYAVARE UMADHU PUGALAI LURICS


தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி
1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி 
2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி 
3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி
4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி

UM PAATHAM PANINTHEN LYRICS


உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
சரணங்கள்
1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம்
2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம்
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம்
4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம்
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம்
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம்
7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்

YESU ENDRA THIRUNAAMATHIRKU LYRICS


இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்
1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு
2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு
3. பாவத்திலே மாலும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு
4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு
5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு

ATHIMARAM THULIRVIDAMAL PUNALUM LYRICS


அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்
1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
3. எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்

ATHIKAALAYIL PALANAI THEDI LYRICS


அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
1. அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க — அதி
2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் — அதி

ASAIVAADUM AAVIYE THOOIMAIYIN LYRICS


அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே
1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே
2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்
3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே
4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே

KAAKUM DEIVAM YESU IRUKKA LYRICS


காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே
1. இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர் தானே – 2
2. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம்
3. காண்கின்ற உலகம் நமது இல்லை
காணாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு
4. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள்
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே
5. சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்து கொள்மனமே
சீடன் அவன் தானே
6. மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
கிருபை விலகாதென்றார் மனது
உருகும் தெய்வம்

KANGALAI YEREDUPEN MAAMERU LYRICS


கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்
1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்
2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்
3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்

KATTA PATTA MANITHARELLAM LYRICS


கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
தேவா… தேவா…
1. எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே
2. அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும்
3. பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும்
4. இமயம் முதல் குமரி வரை
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
5. உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்
6. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

UMMAYE NAAN NESIPPEN LYRICS


உம்மையே நான் நேசிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!
1. உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே!
உம்மையே நான் ஆராதிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!

UMMALE NAAN ORU SENAIKUL LYRICS

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன் – 2
ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்
1. எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்
2. மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்
3. பெலத்தால் இடைகட்டி
வழியை செவ்வையாக்கி வாழவைத்தவரே
4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே
5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்
6. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்
7. இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன்
8. அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
அப்பனே உம்மைத் துதிப்பேன்

YESU MANIDANAAI PIRANTHAR LYRICS


இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
1. மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே – இயேசு
2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு
3. மாட்டுத்தொழுவத்திலே – பரன்
முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்
ஏழையின் பாதையிலே – இயேசு

YUTHA RAJA SINGAM UYIR LYRICS

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே – யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத

4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத

5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார் 
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை

7. பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார்

8. கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம்

KARTHAVE UMMAI POTRUGIREN LYRICS


கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர்


1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
என் கவலைகள் பெருகும்போது
உம் கரங்கள் அணைக்குதையா


2. உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்
சாக்கு ஆடை நீக்கி, என்னை
சந்தோஷத்தால் மூடினீர்


3. உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
பெலத்தால் இடைகட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்


4. உம் திரு பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே


5. உமது கோபம் ஒரு நிமிடம் தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு

KARTHAVE UMATHU GOODARATHIL LYRICS


கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார் (2)


1. உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே


2. நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே


3. கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே


4. கைகளில் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே

KARTHAVE DEVARGALIL UMAKOPANAVAR LYRICS

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)
2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)
3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2)
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)

THOLUGIROM ENGAL PITHAVE LYRICS


தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்
வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்
கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல (2)
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்
அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்
பாவிநேசன் பாவநாசன்
பரமபாதன் வரமே வாசன் (2)
துங்காசிங்கன் மங்காதங்கன்
துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்
பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்

THIRUTHIYAKI NADATHIDUVAR LYRICS


திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளெல்லாம் சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்கு கொடுக்க வைப்பார்
பாடி கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்

1. ஐந்து அப்பங்களை ஆயிரமாய் பெருகச் செய்தார்
ஐயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார்

2. பொன்னோடும், பொருளோடும் புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு

3. காடைகள் வரவழைத்தார்;
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார்

4. நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும் பசுமையாய் வாழச் செய்வார்

5. கெம்பீர சத்தத்தோடு ஆரவார முழக்கத்தோடு
தெரிந்து கொண்ட தம்மக்களை
தினமும் நடத்தி சென்றார்

6. துதிக்கும் போதெல்லாம் சுவையான உணவு அது
ஆத்மா திருப்தியாகும் ஆனந்த ராகம் பிறக்கும்

THEEYA MANATHAI MAATRA VAARUM LYRICS


தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
நேய ஆவியே
1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
பாவி நான் – தீய 
2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
தீர்க்கும், தஞ்சமே – தீய 
3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
பாவி நான் ஐயா – தீய 
4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
இதயம் அஞ்சவே – தீய
5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
புகழ்ந்து காக்கவே – தீய 
6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
கிருபை தேடவே – தீய 
7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
தெளிவு வேண்டவே – தீய 
8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
சிறப்பாய் ஏற்றவே – தீய

Then Inimaiyilum Yesuvin lyrics


தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே – தேன்
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே – தேன்
3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே – தேன்
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே – தேன்
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே – தேன்

THIKKATRA PILLAIKALUKKU SAGAYAR NEERE LYRICS


திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்றுவிடுவீரோ
பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
2. கர்த்தாவே எழுந்தருளும்
கைதூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
3. தாயென்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும் – 2
இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
பக்கப்பலம் நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2

THIRUKARATHAL THANGI ENNAI LYRICS


1. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே
2. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்
3. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்
4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

THIRUPAATHAM NAMBI VANTHEN LYRICS


1. திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே
2. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தாங்கிடுவேன்
3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே
4. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்
5. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே
6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே
7. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

THAPU PANNAMATOM LYRICS


தப்பு பண்ண மாட்டோம்
தண்டனை வாங்க மாட்டோம்
Schoolக்கு போவோம் ஒழுங்காய்
பாடம் படிப்போம் நன்றாய் } – 2
Bible எங்கள் Guide
அது காட்டும் பாதை நடப்போம்
எபேசியர் 6:1ஐ மறந்து போக மாட்டோம்
மாட்டோம் (3) பொய் சொல்ல மாட்டோம்
மாட்டோம் (3) சண்டை போட மாட்டோம்
மாட்டோம் (3) எதிர்த்து பேச மாட்டோம்
மாட்டோம் (3) சினிமா பார்க்க மாட்டோம்
நடப்போம் (2) கீழ்ப்படிந்து நடப்போம்

VERU ORU AASAI ILLA LYRICS


வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர

1. உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்

2. இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே

3. மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே

4. சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா

5. இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே

6. செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்

VIDUTHALAI NAYAGAN VETRIYAI THARUGIRAR LYRICS


விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்


1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்


2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்


3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வல்லமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்


4. செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்

VINTHAI KIRISTHESU RAJA LYRICS


விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை
3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை
4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை