Sunday, October 2, 2022

ENTHAN DHEVANAAL ENTHAN DHEVANAAL TAMIL LYRICS

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயமாய் ஆசீர்வாதம் பெற்றிடுவேன் நான்
அவர் வசனம் போல நான் செய்வேன்
அவர் வழியின்படி நடந்திடுவேன் - 2

தேசத்தில் ஆசீர்வதிக்கப்படுவேன்
வேலையில் ஆசீர்வதிக்கப்படுவேன் - 2
எந்தன் வீட்டில் ஆகாரம் குறைவதில்லை
அவசியங்கள் ஒன்றும் தடைபடாதே - 2
                                             - எந்தன் தேவனால்

எனக்கெதிரான ஆயுதமெல்லாம்
ஒன்றுமே வாய்க்காமல் அகன்றுவிடும் - 2
எந்தன் ஆரோக்யம் கர்த்தர் கரங்களிலே
எந்தன் சரீரமும் ஆசீர்வதிக்கப்படும் - 2
                                             - எந்தன் தேவனால்

கடன் வாங்க என்னை அவர் விடவே மாட்டார்
கொடுத்திட தேவன் எனக்கு செல்வம் தருவார் - 2
உயர்வு என்றும் நான் அடைந்திடுவேன்
உன்னதங்களில் மகிமை படுத்திருவார் - 2
                                             - எந்தன் தேவனால்

ANAATHAI AAVATHILLAI YESU ENNAI THEDI VANDHAR TAMIL LYRICS

அனாதை ஆவதில்லை - 4

இயேசு என்னை தேடி வந்தார்
ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் - 2
- அனாதை ஆவதில்லை

தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்
தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் - 2
தலைவனானீர் தோழனுமானீர்
தனிமை எனக்கு இனி இல்லை - 2
                        - இயேசு என்னை

உலகம் என்னை தள்ளிடலாம்
உறவுகளும் வெறுத்திடலாம் - 2
உன்னதர் நீர் என் உறைவிடமானீர்
உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் - 2
                        - இயேசு என்னை

அகதியாய் நீ வாழ்ந்திடலாம்
ஆதரவின்றி தவித்திடலாம் - 2
படைத்த தேவன் மறந்திடவில்லை
உண்மையாய் உன்னை உயர்த்திடுவார் - 2
இனி கண்ணீர் தேவையில்லை
உந்தன் நிலமை மாறும் உண்மை - 2

அனாதை யாரும் இல்லை - 4
இயேசு நம்மை தேடி வந்தார்
சொந்தமாக ஏற்றுக்கொண்டார் - 2
அனாதை யாரும் இல்லை - 4


Tanglish

Anaathai Aavathillai - 4

Yesu Ennai Thedi Vandhar
Jeevan Thandhar Yetru Kondar - 2
Anaathai Aavathillai

Thaayin Vaitril Therindukondeer
Thandai Pol Ennai Sumanduvandeer
Thaayin Vaitril Therindukondeer
Thandai Pol Ennai Sumanduvandeer
Thalaivan Aaneer Thozhanum Aaneer
Thanimai Enakku Eni Illai - 2
Yesu Ennai Thedi Vandhar Jeevan
Thandhar Yetru Kondar - 2
Anaathai Aavathillai - 2

Ulagam Ennai Thallidalaam
Uravugalum Veruthidalaam
Ulagam Ennai Thallidalaam
Uravugalum Veruthidalaam
Unnadar Neer En Uraividam Aaneer
Uyiril Kalandeer Inimai Thandeer - 2

Yesu Ennai Thedi Vandhar Jeevan
Thandhar Yetru Kondar - 2
Anaathai Aavathillai - 2

Agathiyaai Nee Vaazhdhidalam
Adaravvindri Thavithidalam
Agathiyaai Nee Vaazhdhidalam
Adaravvindri Thavithidalam
Padaitha Devan Maranthidavillai
Unmaiyai Unnai Uyarthiduvar - 2
Ini Kanneer Thevai Illai Undan
Nilamai Maarum Unmai - 2

Anaathai Yaarum Illai - 4
Yesu Ennai Thedi Vandhar Jeevan
Thandhar Yetru Kondar - 2
Anaathai Yaarum Illai - 2

APPA UNGA MADIYIL NAAN THALAISAIKANUM LYRICS

அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் - 2

என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2
- அப்பா உங்க

என் உசுருக்குள்ள கலந்து
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ - 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ - என் - 2
                               - அப்பா உங்க

உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ - 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன - 2
                               - அப்பா உங்க

பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு - நான் - 2
                               - அப்பா உங்க

KALVARI PAATHAI ITHO KAAL NOGUM TAMIL LYRICS

கல்வாரி பாதை இதோ
கால் நோகும் நேரம் இதோ
காயமுரும் கன்மலையோ
கண்காண கோரம் இதோ

1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தே
கன்னத்தில் ஓடிடுதே
கைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தே
தள்ளாடும் நேரம் இதோ
கற்பாறை சுடும் கால்தடமோ
எப்பக்கம் குத்திடும் முட்கிரீடமே
காயமுறுத்திடும் கோரம் இதோ
கல்வாரியே..

2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில்
கள்ளர் நடுவினிலே
எவ்வளவும் கள்ளம் இல்லாமலே
எந்தனுக்காய் மாண்டீரே
தந்தையை நோக்கி கூப்பிடவே
சிந்தை கலங்கிடும் ரட்சகரே
பாவியாம் என்னையும் மீட்டிடவே
கல்வாரியே..

KRUSINMEL KRUSINMEL KAANGINRATHARIVAR TAMIL LYRICS

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்

பாவத்தின் காட்சியை
ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

YAARUMILLAI ENDRU NAAN ALUDHA TAMIL LYRICS

யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் - 2
- யாருமில்லை என்று

வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே - 2
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே - 4
- இயேசுதான் என்

எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம் - 2
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே - 4
- இயேசுதான் என்

வாலிப பாதையிலே
நான் விழுந்த வேளையிலே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே - 4
- இயேசுதான் என்