Wednesday, October 30, 2019

YESU NAMMAM UYARNTHA NAAMAM

இயேசு நாமம் உயர்ந்த நாமம்
உன்னத நாமம் மேலான நாமம்

மரணத்தின் வல்லமைகள்
தெறிப்பட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
பாதாள சங்கிலிகள்
அறுப்பட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்
மரணத்தை அவர் ஜெயித்திட்டார்

பாவத்தின் வல்லமைகள்
உடைபட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
வியாதியின் வல்லமைகள்
விலகியே போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

தடைசெய்த மதில்கள்
தளர்ந்து போய் விழுகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
எரிகோவின் வல்லமைகள்
பயந்துபோய் ஓடுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

YESU RAJANE NESIKKIREN

இயேசு ராஜனே
நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் -(4) - உயிருள்ள

அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
சந்தோஷமே, சமாதானமே

உம்மைத்தான் நேசிக்கிறேன் - நேசிக்

இம்மானுவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும், திருவார்த்தையே - உம்மை

திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே, நட்சத்திரமே

யோனாவிலும் பெரியவரே,
சாலமோனிலும் பெரியவரே
ரபூனியே போதகரே

பாவங்கள் நிவர்த்தி செய்யும்,
கிருபாதார பலி நீரே
பரிந்து பேசும் ஆசாரியரே

YESU RAAJANAE NAESIKKIRAEN UMMAIYAE

இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் (4)

1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
சந்தோஷமே, சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

2. இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும், திருவார்த்தையே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே, நட்சத்திரமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

4. யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்
கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே

உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

SEER YESU NAATHANUKKU JEYAMANKALAM

இயேசுவுக்கு ஜெயமங்களம்


சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் 

1. ஆதி சருவேசனுக்குää ஈசனுக்கு மங்களம்
அகில பிரகாசனுக்குää நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர்

2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர்கலை கியானனுக்குää ஞானனுக்கு மங்களம்
கானான் நல் நேயனுக்குää கன்னி மரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு – சீர் 

3. பத்து லட்சணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்கு சருவாதிகாரனுக்கு
பக்தர் உபகாரனுக்குää பரம குமாரனுக்கு – சீர்

DEVA ENNAI AASIRVATHIUM

தேவா என்னை ஆசீர்வதியும் – என்
எல்லையை பெரிதாக்கும்
உமது கரமே என்னுடன் இருந்து
எல்லா தீங்குக்கும் விலக்கிடும்
தேவனே இயேசுவே தேவனே
இயேசு தேவா

1. தாகம் தீர்க்கும் தண்ணீரையும்
வறட்சி நீக்கும் ஆறுகளும்
தேவ ஜனத்தில் ஆவியையும்
இன்று பலமாய் ஊற்றிடும்

2. தேவ சபையில் எழுந்தருளி
மகிமை பொழிந்திடுவீர்
மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்
மனதில் நிறைந்திடுவீர்

3. இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட
வாசல்கள் துதியால் நிறைந்திடும்
ஊழிய எல்லையை நீர் விரித்து
எந்நாளும் சேவையில் கலந்திடும்

4. என்றென்றும் இயேசுவின் கரத்தினால்
அன்றன்று தேவையை பெற்றிடுவேன்
ஒன்றுக்கும் இனி குறைவு இல்லை
சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன்

5. தெய்வீக வாசனை சாட்சிக்கே
தீங்கை முற்றும் நீக்கிடுமே
ஆவியும் அருளும் தங்கிடவே
ஞானத்தின் அறிவு பெற்றிடுவேன்
தேவனே இயேசுவே தேவனே

NEE STHIRAPPATUVAAY NEE STHIRAPPATUVAAY

நீ ஸ்திரப்படுவாய்
ஸ்திரப்படுவாய் நீ ஸ்திரப்படுவாய்
கர்த்தராலே நீ ஸ்திரப்படுவாய்
தேவ நீதியால் அவரின் வார்த்தையால்
நாம் என்றும் ஸ்திரப்படுவோம் -2

1. விசுவாசியாக அழைக்கப்பட்டோம்
விரைந்தே இயேசுவில் நிலைத்திடுவோம்
கிருபையின் காலமிது
கிறிஸ்து இயேசுவில் இரக்கமுண்டு

ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்
தேவசித்தம் நிறைவேற்றுவோம்

2. இந்தியர் இயேசுவில் ஸ்திரப்பட்டிட
சுவிசேஷப்பணியை ஆதரிப்போம்
தூக்கத்தை உதறி நாம்
தூதுப்பணிக்காக உழைத்திடுவோம்

ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்
தேவசித்தம் நிறைவேற்றுவோம்

3. காலமும் சிறிது, செயல்படுவோம்
கடமையும் பெரிது, புறப்படுவோம்
இயேசுவால் வெற்றி உண்டு
திறப்பில் நின்று ஜெபித்திடுவோம்

ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்
தேவசித்தம் நிறைவேற்றுவோம

NANDRI SOLLI YESUVAI

நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்
நன்மை செய்த அவரை நினைப்போம்
நன்றி சொல்லுவோம்
நாள்தோறும் அவரை துதிப்போம்

ஆ... அல்லேலூயா

சமாதானம் சந்தோஷம் தந்தீர்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
சாத்தானை மேற்கொள்ளச் செய்தீர்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
துன்பம் அதில் காத்தீர் உமக்கு நன்றி
துயரம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி

பாதம் இடறாமல் காத்தீர் உமக்கு நன்றி
பரிசுத்த வாழ்வை கொடுத்தீர் உமக்கு நன்றி
ஜெபிக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி
கொடுக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி

புதிய பாடலை தந்தீர் உமக்கு நன்றி
புதிய கிருபைகள் தந்தீர் உமக்கு நன்றி
பெலவீனம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி
பெலனை தினம் கொடுத்தீர் உமக்கு நன்றி

NANDRI NIRAINTHA ULLATHODU

நன்றி நிறைந்த உள்ளத்தோடு
நாதன் இயேசுவை நான் பாடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

ஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன்
உண்மையாய் தேடி வந்தீர்
உந்தன் மகனாக மாற்றி விட்டீர்

உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன்
உண்மையாய் தூக்கி விட்டீர்
என்னை உம்மோடு அமரச் செய்தீர்

மண்ணான எனக்கு மகிமையின் வாழ்வு
மன்னா நீர் கொடுத்தீரே
என்னை மார்போடு அணைத்தீரே

NEEYAE ENATHU OLI

நீயே எனது ஒளி நீயே எனது வழி
நீயே எனது வாழ்வு இயேசையா – 2
நான்கு திசையும் பாதைகள்
சந்திக்கின்ற வேளைகள்
நன்மை என்ன தீமை என்ன
அறியாத கோலங்கள் – 2

நீயே எங்கள் வழியாவாய்
நீதியின் பாதையின் பொருளாவாய் – 2
உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே
துன்ப துயர நிகழ்வுகள்
இருளின் ஆட்சிக் காலங்கள்
தட்டுத் தடுமாறி விழத்
தகுமான சூழல்கள் – 2
நீயே எங்கள் ஒளியாவாய்
நீதியின் பாதையின் சுடராவாய் – 2
உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உனதருள் தாரும் – நீயே

NEERE ALLAMAL EN VAAZHVIL

நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
உம்மையல்லாமல் என் துணை யாருண்டு
நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
உதவிடுவார் ஒருவருமில்லை

கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
ஆறுதல் அளிப்பார் இல்லை
சோகங்கள் சூழும் நேரம் – கடும்
பாரங்கள் நெருக்கும் போதும்

பாரினில் என்னை தேற்றிட தேவா
உம்மைப் போல் யாருமில்லை
நிந்தைகள் நெருக்கங்களோ
வியாகுலங்கள் வருத்தங்களோ
கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
பிரிந்திட முடியாதய்யா

NALLIRAVIL MAA THELIVAI

1. நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே;
“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே;”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.

2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே,
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே;
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே.

ENAKINBAM EHENNA KELU NAAN

நான் மகிழ்ந்து பாடிடுவேன்

1. எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்
என் பாரம் நீங்கிற்றே
வம்பன் வந்தென்னை நோக்கி எங்கே நீங்கிற்றென்றால்
தெம்பாய் நீங்கிற்றென்பேன்

அதைக் கல்வாரியின் இரத்தத்தால் மூடியாச்சுதே
அவை வானம் பூமிபோல நீங்கிற்றே
அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே
ஆமென்! சுத்தமானேன்

2. அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்
என்பாரம் நீங்கிற்றே
என் உள்ளம் பொங்கிற்றே பிசாசோடிப் போனான்
அன்றே சுகமானேன்

3. சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்
சீ போ நீங்கிற்றென்பேன்
நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்
நேசர் சுகம் தந்தார்

4. எப்போதும் நேசருடன் என் நாளெல்லாம் வாழ்வேன்
அப்போதென் பாக்கியமாம்
தப்பாது பாட்டுப்பாடி ஜெபித்துப் போற்றுவேன்
ஆஹா பேரின்பமே!

NIMMADHI THEDI

நிம்மதி தேடி, நிம்மதி தேடி
அலைந்தேன் உலகினிலே
அலைந்தேன் உலகினிலே - (2)
ஓடினேன் ஓடினேனே...
தேடினேன் தேடினேனே...
நிம்மதியில்லையே, நிம்மதியில்லையே (2) - நிம்மதி தேடி...

1) நிலையில்லா உலகில் நிலைநிற்க செய்பவரே
அலைமோதும் வாழ்வில் அலையாமல் காப்பவரே - (2)
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான் - என்
இயேசு ஒருவர் தான் - நிம்மதி தேடி...

2) இருள்சூழ்ந்த வாழ்வில் ஒளியாக இருப்பவரே
அன்பில்லா உலகில் அன்பாக இருப்பவரே - (2)
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான் - என்
இயேசு ஒருவர் தான் - நிம்மதி தேடி

3) ஜீவனற்ற வாழ்வில் ஜீவனைத் தருபவரே
வழியின்றி தவிப்பவர்க்கு வழியாக இருப்பவரே - (2)
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான் - என்
இயேசு ஒருவர் தான்

நிம்மதி தேடி நிம்மதி தேடி
அலைந்தேன் உலகினிலே
அலைந்தேன் உலகினிலே - (2)
ஓடினேன் ஓடினேனே
தேடினேன் தேடினேனே
நிம்மதியடைந்தேனே, நிம்மதியடைந்தேனே

PARALOGA DEVANE UMMAI

பரலோக தேவனே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே
உம்மை ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை 
நான் கண்டேனே நான் கண்டேனே -2

மோசேயின் தேவனே
என்னை வழி நடத்திடுவீர் -4

யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர் -4

தேவாதி தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
ராஜாதி ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்

PAADI THUTHI MANAME

பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து

தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்

சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்

எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை