Friday, April 18, 2025

Pentecostae Naazhlil Vandhadhu பெந்தெகொஸ்தே நாளில் வந்தது

 பெந்தெகொஸ்தே நாளில் வந்தது போல்

இறங்கி வாரும் பரிசுத்தாவியே
உமது சமூகம் சந்தோஷம் மகிழ்ச்சி
அக்கினியால் அபிஷேகியும் – எங்களை

அக்கினி மயமான நாவுகள் இறங்கி
பலத்த காற்று அடிக்கும் இடி முழக்கம்போலே
அஸ்திபாரம் அசைய வாரும் ஆவியே
என் தேவாலயம் நிரம்பி வழியவே

ஒரு மன ஐக்கிய ஆவியை ஊற்றும்
ஒரே இருதயமாக மாறவே
வல்லமையோடு வந்தமருமே – தேவ
அன்பினாலே எம்மை நிரப்புமே

பரிசுத்த பிரசன்னம் அசைவாடட்டும்
பரலோக மகிமை எம் கண்கள் காணட்டும்
ஆத்துமாக்களை வந்து ஆற்றித் தேற்றுமே
ஆனந்தப் பரவசத்தால்

Pithavae Arathikindrom Yesuve பிதாவே ஆராதிக்கின்றோம்

 பிதாவே ஆராதிக்கின்றோம்

இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

ஸ்தோத்திரமும் கனமும
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

Pithave Potri Kumaaran Potri பிதாவே போற்றி குமாரன் போற்றி

 பிதாவே போற்றி

குமாரன் போற்றி
ஆவியே போற்றி
போற்றி போற்றி

யேகோவாயீரே போற்றி போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

யேகோவாநிசியே போற்றி போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர்

யேகோவா ஷாலோம் போற்றி போற்றி
சமாதானம் தருகின்றீர்

யேகோவா ராப்பா போற்றி போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர்

யேகோவா ஷம்மா போற்றி போற்றி
கூடவே இருக்கின்றீர்

Pothum Pothum Intha Ulagathin போதும் போதும் இந்த உலகத்தின்

 போதும் போதும் இந்த உலகத்தின் துன்பம்

வாரும் வாரும் எங்கள் இயேசுவே வாரும்
கல்லான மனங்களெல்லாம் கனிய செய்யும்
பொல்லாத மனிதர்களை நீரே மாற்றும்

உலகத்தின் பாவமே நிறைந்து வழியுது
தீமைகள் நாளக்கு நாள்பெருகி வருகிறது
எங்கும் அநீதி சுடர் விட்டு எரிகிறது
எங்களின் தெய்வமே எங்களை காருமே

ஆத்தும பாரத்தை எனக்கு தந்தீர் நீர்
ஆத்தம ஆதாயம் நானும் செய்திட
அழிந்திடும் மாந்தரை உம்மிடம் சேத்திட
உன்னதர் இயேசுவே வல்லமை தாருமே

அழிந்திடும் மாந்தர்கள் வெளிச்சம் காணட்டும்
மரிக்கும் மாந்தர்கள் ஜீவனை அடையட்டும்
தூயரின் இரத்தமே சாபத்தை போக்கட்டும்
தூய்மையாய் வாழ்ந்திட பெலனை ஈந்திடும்

Podhum Podhum Sodhanaigal போதும் போதும் சோதனைகள்

 போதும் போதும் சோதனைகள் போதுமே

வேண்டும் வேண்டும் ஆறுதலும் வேண்டுமே
தயாபரனே…

தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே

தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்
தப்பிக்க வழியில்லையா
தப்பே செய்யாத என் இயேசு தேவா
தப்பிக்க வழி செய்வீரா

கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்
ஜீவனில் பெருமைகொண்டேன்
எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று
உம்மையே நோக்கி நின்றேன்

பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது
கர்த்தரை நான் மறக்கிறேன்
பாவத்தின் பலனை நான் அடையும்போதோ
கர்த்தரை நான் நினைக்கிறேன்