Wednesday, November 13, 2019

THALAI SAIKKUM KAL NEERAIAH

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

SUYA ATHIGARA SUNDARA KUMAARA

சுய அதிகாரா சுந்தரக் குமாரா

பல்லவி 

சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான --- சுய 

சரணங்கள்

1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த --- சுய

2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் --- சுய

3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த --- சுய

4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் --- சுய

SILUVAI SUMANDHORAI SISANAKKUVOM

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்

இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்

அல்லேலூயா(4)

சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்

வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்

சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்

விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்

SONTHAM ENTU SOLLIKKOLLA UMMAI VIDA

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே

1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன், நான் பெலனானேன்

2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்
நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்

3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்

SILUVAI SUMANTHA URUVAM

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே 
நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா – 2 

1. பொல்லா உலக சிற்றின்பங்கள் 
எல்லாம் அழியும் மாயை 
காணாய் நிலையான சந்தோஷம் புவியில் 
கர்த்தாவின் அன்பண்டை வா 

2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் 
ஆத்மம் நஷ்டமடைந்தால் 
லோகம் முமுவதும் ஆதாயமாக்கியும் 
லாபம் ஒன்றுமில்லையே 

3. பாவ மனித ஜாதிகளைப் 
பாசமாய் மீட்க வந்தார் 
பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் 
பாவமெல்லாம் சுமந்தார் 

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ 
நித்திய மோட்ச வாழ்வில் 
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் 
தேவை அதை அடைவாய் 

5. தாகமடைந்தோர் எல்லோருமே 
தாகத்தைத் தீர்க்க வாரும் 
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் 
ஜீவன் உனக்களிப்பார்

SINGARA MALIGAIYIL JEYAGEETHANGAL

சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்

3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்

4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்

5. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்

THIRUPATHAM SERAMAL

திருப் பாதம் சேராமல் இருப்பேனோ – நான்
தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ

அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்
ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே
சத்திய மார்க்கமும் சகலமுமான
நித்திய ஜீவனும் நிமலனுமான
ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன்
உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்
மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்

DEVASAENAI VANAMEETHU KOETIKOETIYAKATH

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும் 
பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும் 
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும் 
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் 
அல்லேலூயா, அல்லேலூயா – 4 

2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும் 
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும் 
தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும் 
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் 

3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம் 
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை 
வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும் 
நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

PUULOEKATHTHAARAE YAAVARUM KARTHAVIL

திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம்

1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி பாட வாருங்கள்

2. பராபரன் மெய்த் தெய்வமே நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்
நாம் ஜனம் அவர் ராஜனே நாம் மந்தை அவர் மேய்ப்பனார். 

3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்
சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி துதிசெய்யுங்கள். 

4. கர்த்தர் தயாளர் இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. 

5. விண் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

SUNABU ADICHA KALARAI

சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
ஏன் கேட்குற சில்லறை
பணத்துக்காக ஏங்குற
அதுக்குத்தான் பல்ல காட்டுற

Money is your teaching
Money is your preaching
Stop this Preaching
Where is the Reaching

பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயா
உலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயா
இந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2

பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யா
சுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யா
பரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா

SINGA KUTTIGAL PATTINI KIDAKKUM

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகின்றார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

ஆத்துமாவைத் தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

KARTHARAI NAMBIYE JEEVIPPOM

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் 

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் 

1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் --- கர்த்தரை

2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார் --- கர்த்தரை

3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய்க் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் --- கர்த்தரை

YESUVIN PINNAAL NAANUM SELVEN



இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் 
திரும்பி பார்க்க மாட்டேன் - (2)
சிலுவையே முன்னால் உலகமே பின்னால் 
இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே 

அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை அடியேன் உள்ளத்திலே 
ஆண்டவர் இயேசு அடைக்கல பாறை ஆதலின் குறையில்லை 
ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால்  - (2)
அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே விடுதலை அடைந்தேனே 

தாயும் அவரே தந்தையும் அவரே தரணியில் நமக்கெல்லாம் 
சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும் ஆயனும் அவரன்றோ 
ஆயனே முன்னால் அலகையே பின்னால் - (2)

அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே ஆறுதல் அடைந்தேனே 

UN PUGAZHAI PAADUVADHU YEN VAALVIN



உன் புகழை பாடுவது என் வாழ்வின் இன்பமய்யா 
உன் அருளை போற்றுவது என் வாழ்வின் செல்வமையா 

துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய் 
கண்ணயர காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் 
அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய் 
உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் 
நீ என்றும் அணைத்திருப்பாய் 

பல்லுயிரை படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய் 
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய் 
அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன் 
உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன் 

நான் என்றும் வாழ்ந்திருப்பேன்