Thursday, February 7, 2019

EN SUVASA KATRE LYRICS

என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய் 

என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய் 

என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய் 

எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப் போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய் 

IDAIVIDA SAHAYA MATHA LYRICS


இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா 
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் 
நிதம் துணை சேர்ப்பாயே - 2

ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை 
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2 
மாறாத கொடுமை நீங்காத வறுமை 
தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி 
உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2 
வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட 
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2

ITHAYAM MAKIZHUTHAMMA LYRICS

இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா

தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா...!

வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2
உண்மை மனதும் உயர்ந்த நெறியும்
நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா...! 

NEE ILLATHA ULLAM OOR LYRICS

நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம்   (2)
 

இறைவா இறைவா இறைவா இறைவா 

மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன்
ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்
விடிவில்லா இரவாகினேன்  (2)
உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ
வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ  (2) -இறைவா 

கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்
தவிக்கின்றேன் உனைத் தேடியே
போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்
அழுகின்றேன் துணை நாடியே   (2)
எதனாலும் நிறையாத வெறுமையிது - உன்
அருளின்றி துயிலாத இதயம் இது   (2) -இறைவா 

KALANGARAI THEEBAMAE LYRICS

கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே

துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே
காத்திடுவாய்த் தாயே --2

மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே
மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகலச் செய்வாய்

தாயெனவே தாவிவந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என் உள்ளம் தாயுனைத்தேடி கூவிடும் குரல் கேளாய்

VIDIYALAI THEDUM NENJANKALAE LYRICS

விடியலைத் தேடும் நெஞ்சங்களே
விடியாக் கனவின் சொந்தங்களே --2
நமக்கொரு தாய் இருக்கின்றாள்
வாருங்கள் அவளிடம் செல்வோம் --2

இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்
கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் --2
தாயவள் அழகு பொற்சித்திரம்
கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் --2

புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்
மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் --2
வாழ்வினில் என்றும் போராட்டமே
தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே

EN AANMA ENNALUMAE LYRICS

என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது  -2

ஏழைகளை எளியவரை உயர்த்தினார்  -பல
இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார்  -2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார்  -2 நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார்  -2

அடிமைகளை அன்புடனே நோக்கினார் -அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார்  -2
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார்  -2 வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார்  -2

VAZHLVATHU NAANALLA ENNIL LYRICS

வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் - 2 

இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார் - 2
அன்பும் அருளும் பொழிகின்றார் - 2
என்னை முழுவதும் ஆள்கின்றார் 

உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே - 2
யாழும் இசையும் போலவே - 2 
வாழும் இறையில் ஒன்றிப்போம் 

கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே - 2
கிறிஸ்து நம்முள் வாழவே - 

KAALAI NERAM INBA JEBA LYRICS

காலை நேரம் இன்ப ஜெய தியானமே
கருணை பொற்பாதம் காத்திருப்பேன்
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு இயேசு தினம் பேசுவார்

எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே

பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல்
பொய்யாய் சொன்னாலும் களிகூருவாய்
இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்
இந்த மெய் வாக்கு நிறைவேறுதே

சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே


பறந்து புறா போல் சிறகடித்தே
பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன்
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே

EN MUDIVUKKU VIDIVU NEERE LYRICS

என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா (2) தெரிந்து கொண்டீர்
என்னையா (2) அழைத்து வீட்டீர்

தகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே

பூமியிலே நான் பரதேசி - ஆனால்
உமக்கோ இப்பொழுதே விசுவாசி

புல்லைப்போல் உலர்ந்திடும்
என் வாழ்க்கை - ஆனால்
உம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர்

குயவன் கையில் களிமண் போல்
தேவனே என்னை வனைகின்றீர்

சோதித்த பின் சுத்த பொன்னாக - இந்த
மண்ணிலே என்னை விளங்க செய்வீர்

INNUM ETTANAI TURAM PAYANAM CEYYANUM LYRICS


இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா - 2
என்னால் முடியவில்லை முடியவில்லை நாதா
உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா - 2
தேவா இயேசு தேவா ..... - 2 - இன்னும்

சரண்ங்கள் 

1. கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் - 2
உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே
விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் - 2
வழுவாமல் வழி நடத்தி செல்லணும் என் தேவனே
நாதா இயேசு தேவா ..... - 2 - இன்னும்

2. அக்கினி கடல்தனில் நடந்து நான்  செல்கையில்
ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே - 2
அலைபோல் வெள்ளம் என் மேல் புரண்டு வந்தாலும்
மலை போல் வந்து நின்று தடுக்கும் என் தேவனே - 2
நாதா இயேசு தேவா .... -2 - இன்னும்

3. உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் சேருவேன்
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
மறவாத உந்தன் அன்பை நினைத்து நான் ஏங்குவேன்
நாதா இயேசு தேவா .... -2 - இன்னும்

ULLAM ELLAM URUGUTHAIYA LYRICS

உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்
அன்பை நினைக்கையிலே
தன்னாலே கண்ணு கலங்குது
கர்த்தாவே உம்மை நினைக்குது

 இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே - என்னை
நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே

 கருவினில் அநாதையானேன்
தெருவினில் நான் கிடந்தேன்
அருகினில் வந்து என்னை
அணைத்த அன்பு தெய்வமே
அற்புதமே அதிசயமே உம்மைநான் என்றும் மறவேன்

தேற்றிட ஒருவரில்லை
ஆற்றிட யாருமில்லை
தூற்றிட பலருண்டு
சேற்றை வீசும் மனிதருண்டு
ஏற்றிடும் என் விளக்கை
தேற்றும் எந்தன் தெய்வமே
சற்பரனே பொற்பரனே உம்மைநான் என்றும் துதிப்பேன்

 ஊரெல்லாம் சென்றிடுவேன்
உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்
தெருவெல்லாம் ஏசுவே என்றுஉம் நாமம் உயர்த்திடுவேன்
ஆளுகை செய்யும் என்னை
எந்தன் அன்பு தெய்வமே
உம்மையன்றி இவ்வுலகில்
ஆறுதல் எனக்கு யாருமில்லை

ENNUI VAZHAVAIKUM ANBU DEIVAME LYRICS

என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே
என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே
நீங்க இல்லாத ஒரு நிமிஷம் கூட
என்னால நெனச்சு பார்க்க முடியல
நான் போகும் இடமெல்லாம்
நீங்க வரணும் நான் அமரும்
இடமெல்லாம் நீங்க அமரணும் - நான்
பேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும்
நீங்க இல்லாம நான் இல்லையே
கண்ணீரில் நான் நடந்து போது
கண்ணீரை துடைத்தெறிந்த தேவனே
கலங்கியே நின்ற எந்தன் வாழ்வில்
ஒளியாக வந்துதித்த தெய்வமே
தனிமையிலே நான் நடந்து போது
தோளோடு தோள் கோர்த்த தேவனே
தவறி நான் கீழே விழுந்த போது
தூக்கியே சுமந்து சென்ற தெய்வமே

DHIKKATRA PILLAIGALUKKU SAGAAYAR LYRICS

திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு
நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு
சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்க பலம் நீரே அல்லவோ
என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
பேதைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்
கர்த்தாவே எழுந்தருளும்
கை தூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்
தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும்
இயேசுவே மனமிரங்கும்

NAAN NIRPATHUM NIRMULAM LYRICS


நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் 
சுகமுடன் இருப்பதும் கிருபையே 

தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2

1. காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2

2. கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

NAAN UYIRODU IRUKKUM NAALELLAM LYRICS

நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவரே நீர்

என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய்

உந்தன் அன்பு பெரியதே-4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே -4
கிருபையான இயேசுவே

பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே

NALLAVAR NEER MIGAVUM LYRICS

நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவரே நீர்

என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய்

உந்தன் அன்பு பெரியதே-4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே -4
கிருபையான இயேசுவே

பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே