Wednesday, April 18, 2018

NAANUM EN VEETARUM UMMAIYE LYRICS


நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே

MARANAM VARUTHU UN MUDIVUM LYRICS

மரணம் வருது
உன் முடிவும் வருது
மரிக்கும் முன்னே
மனந்திரும்பு
1. சொத்துபத்து சேர்த்தது போதும்
சொகுசாக வாழ்ந்தது போதும்
சோம்பேறியாய் இருந்தது போதும்
மனந்திரும்பு..
வேதவாக்கு நிறைவேறும் காலம்
வேதனைகள் ஆரம்பிக்கும் காலம்
வேகமாக தேவன் வரும் நேரம்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு
2. ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய்
பாதியிலே வழிதப்பி நடந்தாய்
உண்மையான ஊழியத்தை துறந்தாய்
மனந்திரும்பு
அவனவன் செயலுக்கு தக்கதாய்
அவனவனுக்கு தேவன் தருவார்
தண்டனைக்கு தப்பித்திட நினைத்தால்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு
3. ரட்சிப்புக்கு நாள் குறித்திடாதே
இன்றுதானே ரட்சணிய நாளே
காலம் போனால் மீண்டும் வந்திடாதே
மனந்திரும்பு
ஆவி உன்னை பிரிந்திடும் முன்னே – நீ
பாவியென்று பரன் சொல்லும் முன்னே
லேவியனாய் மாறிவிட நினைத்தால்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு

MANGALAM SEZHIKKA KIRUBAI ARUZHUM LYRICS

பல்லவி
மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே
சரணங்கள்
1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ
2. மங்கள மணமகன் xxxxxx-க்கும்
மங்கள மணமகள் xxxxx-க்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்
3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே

MANIDHANIN AALOSANAI VEENANADHU LYRICS

மனிதனின் ஆலோசனை வீணானது
தேவனின் ஆலோசனை மேலானது
1. நடந்திடும் என்று மனிதன் கூறுவான்
தேவன் நிறுத்தி வைப்பார்
நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால்
தேவன் நடத்தி வைப்பார்
2. அறிவினால் உன் பெலத்தினால்
நடத்திட முடியாது
ஜெபத்தினால் அவர் கிருபையால்
நடக்கும் தவறாது 
3. இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன்
மனதிலே எண்ணம் உனக்கு
நடந்ததும் இனி நடப்பதும்
இறைவன் மனக்கணக்கு

MANNAN YESU VARUGINRAR NEE LYRICS


மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா! ஆனந்தமே!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)
1. மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் – அல்லேலூயா
2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே – அல்லேலூயா
3. வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே – அல்லேலூயா

MANTHAI AAYAR MANAM MAGILAVE LYRICS


1. மந்தை ஆயர் மனம் மகிழவே
மழலை உருவாய் வந்தவரே
மண்ணின் மாந்தரை மீட்பதற்காக
மாசற்ற ஜோதியாய் வந்தவரே
மரணத்தை ஜெயித்த மன்னவே
மனுவின் ஜோதியாய் வந்தீரே
வா வா என் நேசர்
வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்
நீ அன்பாய் — (2)
2. வாக்குகட்கு பங்காளிகளாக்கி
நோக்கமாய் நம்மை ரட்சித்தாரே
ஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கி
நாடும் நம்மை தம் சரீரமாக்கி
சஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவே
சமாதான பிரபுவாய் உதித்தவரே

MARANAM THUTHIYATHU BAADHALAM LYRICS

மரணம் துதியாது பாதாளம் துதியாது
உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்
1. உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்
நீர் உண்மையுள்ளவர்
நீர் வாக்கு மாறாதவர்-2
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா
2. நீர் மகிமையானவர்
நீர் மகத்துவமானவர்
நீர் அருமையானவர்
நீர் அழகில் சிறந்தவர்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

MANTHAYIL SERA AADUGALE LYRICS


மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்
1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை
2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

MANAME MANAME NEE YEN LYRICS


மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
நீ ஏன் பதறுகிறாய் 
மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர்
நீர் வல்லமையுள்ளவரே
உனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர்
நீர் நல்லவர் நல்லவரே
1. யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரே
யகோவா எல்ரோயி என்னை காண்பவரே -2
யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமே
நீர் என்றும் உயர்ந்தவரே
யகோவா ஷம்மா சமாதான தெய்வமே
நீர் என்றும் பெரியவரே-2
2. என்னுயிர் நேசமே லீலி புஷ்பமே
உந்தன் பாசமே எனக்கு போதுமே-2
அழகில் சிறந்தவர் மென்மையானவர்
என்னை ஆளுகை செய்பவரே
என் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே -2

MANAM IRANGUM DEIVAM YESU LYRICS


மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்


1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்


2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்


3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்


4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்

MANAM THIRUMBUM PAAVIKKELLAAM PUGALIDAMAE LYRICS


மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே
வந்தனமப்பா வந்தனமே
1. திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்
உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன்
2. இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல
உம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்ல
உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல
3. கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே

MANAME O MANAME NEE LYRICS

மனமே ஓ மனமே
நீ ஏன் அழுகிறாய்
தினமே அனுதினமே
துயரில் விழுகிறாய் 
சுமக்க முடியாத சுமையை
நீ ஏன் சுமக்கிறாய்
சகிக்க முடியாத வலியில்
நீ ஏன் தவிக்கிறாய்
உன் பாரங்களை தந்துவிடு
இயேசுவிடம் வந்துவிடு
மற்றவை மறந்துவிடு 
எவரும் அறியா ரகசியம்
உனக்குள் இருக்குதோ
மறக்க முடியா அவ்விஷயம்
உன் மனதை உருத்துதோ
நம் தேவனிடம் தயவுண்டு – நீ
வேண்டிக்கொண்டால் விடையுண்டு
விடுதலை உனக்குண்டு 
உலகம் தரமுடியா அமைதி
தருபவர் இயேசுதான்
கலகம் வழிந்தோடும் உலகில் –
உன் புகலிடம் இயேசுதான்
நீ தேடுகின்ற ஆதரவும்
நாடுகின்ற உண்மை அன்பும்
இயேசு ஒருவரில் தான்.