Wednesday, November 6, 2019

KANMANIPOLE KAAKKUM YESU RAJA

கண்மணி போல் காக்கும் இயேசு ராஜா
கைவிடாத கர்த்தர் இயேசு ராஜா
ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்
ஊற்றிடும் எந்நாவில் ஊற்றிடும்

இயேசு ராஜனே ஸ்தோத்திரம்
அல்லேலூயா ராஜராஜனே
ஸ்தோத்திரம் அல்லேலுயா அல்லேலுயா

நான் பிறந்த நாள் முதல் இந்த நாள்
வரையிலும் ஆதரித்து வந்த இயேசுவே
இந்த மட்டும் கைவிடாமல்
இனி மேலும் கைவிடாமல் இன்றும்
என்றும் தேற்றும் இயேசுவே
தந்தை தாயின் பாசமோ உந்தன் பாசமாகுமோ
சொந்த பந்த நேசமோ உந்தன் நேசமாகுமோ
போதுமையா உந்தன் நேசமைய்யா

தீமையான யாவையும் நன்மையாக மாற்றினீர்
தீங்கு நீக்கி என்னை மீட்டினீர்
இன்னல் வேளை வந்த போது
நல்ல வேளாயாக வந்து
நண்பனாக நன்மை செய்திட்டீர்
இரக்கமுள்ள தேவனே இரங்கி வந்த நாதனே
மீட்க வந்த மீட்பரே தேடி வந்த தெயவமே
போதுமைய்யா உந்தன் நேசமைய்யா -2

KANGAL PANNIR THARUM ULLAM VANDHU

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் – (2)

கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ

1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்

2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்

KATTADAM KATTIDUM SIRPIGAL NAAM

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்

கைவேலை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய்

பாவமாம் மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே - ஆவலாய்
இயேசுவின் வார்த்தைக் கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்

ORU MAGIMAYIN MEGAM

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே


விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர்


ஆவியானவரே அன்பின் ஆவியானவரே 
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே 
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே 
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே 
- ஒரு மகிமையின்


என் பேச்சில என் மூச்சில
என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவில என் நடத்தையில
என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க


அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா - ஒரு மகிமையின்

ORU NIMISHAM KOODA

ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ முடியாதைய்யா
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாலே
வாழ தெரியாதைய்யா
வாழ முடியாதைய்யா வாழத்தெரியாதைய்யா
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ தெரியாதய்யா
இருள் சூழ்ந்த உலகில் பாதைக்கு வெளிச்சம்
என் தெய்வம் நீரே ஐயா
தலை மேல் உம் தீபம் நீர் அருளிய வெளிச்சம்
இருளை நான் கடந்து வந்தேன்
நீங்காத மகிழ்ச்சி நித்திய வெளிச்சம்
நீரே போதுமைய்யா
நீரே போதுமைய்யா
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ முடியாதைய்யா
வாழ தெரியாதைய்யா
உமது முகத்தை மறைத்துக்கொண்டால்
திகைத்து போவோமைய்யா
இமைப்பொழுதென்னை
கைவிட்டுப்போனால்
உயிரற்று போவோமைய்யா
நீங்காத சமுகம் நித்திய இன்பம்
நீரே போதுமைய்யா
நீரே போதுமைய்யா

EBI NESARUKKU PUTHU PAADAL

என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே

ஆனந்தமே எந்நாளுமே
அப்பா உம் சமூகத்திலே

புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்

புது உயிர் தினமும் தருகின்றீர்
ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்

இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்

நன்மையும் கிருபையும் தொடருமே
உயிரோடு வாழும் நாளெல்லாம்

நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
நித்திய நித்திய காலமாய்

EN NAESARUKKU PUTHUPAATAL PAATUVAEN

என் நேசருக்கு புதுபாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
எபி நேசருக்கு புதுபாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்

1. கர்த்தர் என் மேய்பராய் இருக்கின்றீர்
குறைவொன்றும் எனக்கு இல்லையே (2)
ஆனந்தமே எந்நாளுமே
அப்பா உம் சமூகத்திலே – அல்லேலூயா

2. புல் உள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரன்டை சேர்க்கின்றீர்
ஆனந்தமே…

3. புது உயிர் தினமும் தருகின்றீர்
ஆன்மாவை தேற்றி மகிழ்கின்றீர்
ஆனந்தமே…

4. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
ஆனந்தமே…

5. நன்மையும் கிருபையும் தொடருமே
உயிரோடு வாழும் நாளெல்லாம்

6. நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
நித்திய நித்திய காலமாய்

7. என்னோடு கூட இருக்கின்றீர் – உம்
கோலும் தடியும் தேற்றுமே

8. எதிரிகள் கண்முன் விருந்தொன்று
ஏற்பாடுசெய்கின்றீர் எனக்காய்

9. எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது

EN NESAR VELLAI POLA

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2)


அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர்


1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் – என் நேசர்


2. வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் – என் நேசர் 

EN IDAYAM YAARUKU THERIUM

என் இதயம் யாருக்குத் தெரியும் 
என் வேதனை யாருக்குப் புரியும் 
என் தனிமை, என் சோர்வுகள் யார்
என்னைத் தேற்றுவார் -4

1.நெஞ்சின் ரோகங்கள் – அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே(2)

2.சிறகு ஒடிந்த பறவை – அது வானில் பறக்குமோ (2)
வீசும் புயலில் படகும் தப்புமோ(2)

3.மங்கி எரியும் விளக்கு
பெரும் காற்றில் நிலைக்குமோ (2) 
என் உடைந்த உள்ளமும் 
ஒன்றாய் சேருமோ (2)

4.அங்கே தெரியும் வெளிச்சம் 
கலங்கரை தீபமோ(2) 
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே (2)

என் இதயம் இயேசுவுக்கு தெரியும் 
என் இதயம் இயேசுவுக்கு புரியும் 
என் தனிமை, என் சோர்வுகள் 
இயேசென்னைத் தேற்றுவார்! (2)

ENTHA KAALATHILUM ENTHA NERATHILUM

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நேரே ---எந்த

தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே --- எந்த

வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே

வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே --- எந்த

துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர் --- எந்த

ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே --- எந்த

ஞானமும் நீரே - தானமும் நீரே
நியாமமும் நேரே - என் நாதனும் நீரே ---- எந்த

ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே
ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே --- எந்த

மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே --- எந்த

தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே --- எந்த

ENNI ENNI PAAR ENNI PAAR

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை – 2
நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – 2
தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே – 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி
காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே – 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் – 2
சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2
ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் – 2

ULLATHIN AVARPAAL PERANBULLORELLAM

உள்ளத்தில் அவர்பால்
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே

1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம் 
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை 
உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
தமதாக்கியவர் வாழுவார் , மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள் 
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மை அவர்க்காய் அளிப்பார்

ULLATHIL AVARPAAL PERANBULLORELLAM

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே

1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம் 
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை 
உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
தமதாக்கியவர் வாழுவார் , மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள் 
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மை அவர்க்காய் அளிப்பார்