Friday, February 8, 2019

VANNA VANNA LEELIMALAR LYRICS


அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அருமருந்தாய் விண்ணவர்கரசியாய்
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே
தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா - 2


வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- 2
தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - 2  

அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம் தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் - 2
வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே - 2 

தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே - 2
வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே
ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே - 2 

AROKKIYA THAYAE AMMA LYRICS



ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா உந்தன்
அருட்பதம் நாடி வந்தேன்
மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே
இறையருள் நிறையச் செய்வாய் -2

சங்கீதம் பொங்கும் சந்தோச வேளையிலே
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே -2
உன்னைத்தான் நம்பித்தான் உலகதை உனக்களித்தான்
தேவன் வியந்தான், மகிழ்ந்தான் உன் பெருமை எண்ணித்தான்
-ஆரோக்கியத் தாயே

உள்ளம் முழுதும் நீ தந்தாயே தேவனுக்கு
வெள்ளம்போலே அருள் தந்தாளும் தாரகையே -2
எண்ணில்லா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய்
இறை நிழலாய் நினைவாய் என் வாழ்வில் வருவாய்   -ஆரோக்கியத் தாயே

NEEYE NIRANTHARAM LYRICS


நீயே நிரந்தரம்... இயேசுவே ஏன் வாழ்வில் நீயே நிரந்தரம்..
அம்மை அப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் (2)
நான் மாண்ட பின்னும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்.
நிரந்தரம்  நிரந்தரம்  நீயே நிரந்தரம் (2)

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் (2)
நிரந்தரம்  நிரந்தரம்  நீயே நிரந்தரம்  (2)

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் (2)
நிரந்தரம்  நிரந்தரம்  நீயே நிரந்தரம்  (2)

AANDAVAR THUNAIYIRUPPAR AABATHU LYRICS


ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாது
மதில்போல் சூழ்ந்திருப்பார் துன்பங்கள் நெருங்காது
கலங்காதே மனமே கலங்காதே மனமே
அன்பான தேவன் அரவணைப்பார் கலங்காதே மனமே

உன்னைக் காப்பவர் அயர்வதில்லை
உன்கால் இடற விடுவதில்லை
உன்னைக் கைவிட்டுப் பிரிவதில்லை
உன்னோடு உயிராய் இணைந்திருப்பார் --2

பகலின் வெயிலோ இரவின் நிலவோ தீமை செய்யாது அஞ்சாதே
புயலும் மழையும் புவியைச் சூழ்ந்தால்
தீமை செய்யாது திகையாதே
கண்ணான தேவன் எந்நாளும் காப்பார்
கவலையோ கலக்கமோ இனி வேண்டாம்   -ஆண்டவர் துணை

வானத்துப் பறவையை காக்கின்றவர்
வறுமையில் உன்னை விடுவாரோ
வயல்வெளி மலரை மகிழ்விப்பவர்
நோயினில் விடுதலை தருவாரே --2

உலகம் ஆயிரம் பேசினாலும் சோர்ந்து வீழ்ந்து போகாதே
தீங்கு செய்வோர் சூழ்ந்து கொண்டால் வாடி வதங்கி போகாதே
இஸ்ராயேல் இறைவன் மாறாத தேவன்
இன்றும் என்றும் உடனிருப்பார்   -ஆண்டவர் துணை

ALAIKADALIN OOSAIYILAE LYRICS


அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா --2 

நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே --2
அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா --2 

கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் --2
எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா --2 

வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் --2
வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் --2 

NENJATHILAE THOOIMAIUNDO LYRICS

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!
இயேசு வருகின்றார்.!
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்.!

வருந்தி சுமக்கும் பாவம் - உன்னை
கொடிய இருளில் சேர்க்கும் -2
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் -2

குருதி சிந்தும் நெஞ்சம் - உன்னை
கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
செய்த பாவம் இனி போதும் 
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2

மாய லோக வாழ்வு - உன்னில்
கோடி இன்பம் காட்டும் - 2
என்னில் வாழும் அன்பர் இயேசு
உன்னில் வாழ இடம் வேண்டும் - 2

ORU THARAM ORE THARAM LYRICS


ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்
இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் - 2
முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர
மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர - 2 

இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம்
பின்பு பிரிந்து திரிந்த காலம் - 2
இனியொரு தரம் இறைவனின் கரம்
விலகிடின் என்ன சுகம் சொல் மனமே - 2 

உலக வாழ்வில் உறவும் பிரிவும் விலக்கு இல்லா நியதி
அதை மறுப்போர் இல்லை உறுதி - 2
தினம் அவர் தரும் உறவினில் வரும்
சுகமோ என்ன சுகம் என் மனமே - 2 

CHRISTHUVIN SAREERAMITHU LYRICS


கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது - இந்த
உணவையே உண்போம் ஓருடலாவோம்  

ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் - 2 

கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது - 2
அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது - 2 

மனதிற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் - 2
மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் - 2 

உறவுக்குப் பாலமிது நம் உரிமைக்குக் குரலுமிது - 2
உண்மையின் கோலமிது எந்த நன்மைக்கும் நன்மையிது - 2 

SUMAI SUMANTHU SORNTHIRUPPORAE LYRICS


சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்
இளைப்பாற்றி கொடுக்கின்றார்  

இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் - 2
இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன் 

வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் - 2
வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன் 
   
துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் - 2
அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார் 

வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே
வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன்

SEMMARIYIN VIRUNTHUKKU LYRICS

செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க - 2 

இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன - 2
உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் - 2
உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய் 

வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே
வளமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே - 2
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே - 2
உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே 

உலகம் எல்லாம் இணைவது உன் உள்ளம் ஒன்றிலே
இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே - 2
மனித உள்ளம் மகிழ்வது உன் புனித உறவிலே - 2
மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே 

NAANAE VAANININTRU IRANGI VANTHA LYRICS


நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு
இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான்  (2) 

எனது உணவை உண்ணும் எவரும்
பசியை அறிந்திடார்   (2)  -என்றும்
எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார் 

அழிந்து போகும் உணவிற்காக
உழைத்திட வேண்டாம்  (2) -என்றும்
அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்