Wednesday, December 25, 2019

VARUSHA PIRAPPAAM INRU

1. வருஷப் பிறப்பாம் இன்று
புது பக்தியுடனே
தேவரீரிடத்தில் வந்து
வாழ்த்தல் செய்ய இயேசுவே
உந்தன் ஆவியை அளித்து
என்னைப் பலப்படுத்தும்
அடியேனை ஆதரித்து
வழிகாட்டியாய் இரும்

2. இது கிருபை பொழியும்
வருஷம் ஆகட்டுமேன்
என்னில் ஒளி வீசச்செய்யும்
என் அழுக்கை அடியேன்
முழுவதும் கண்டறிந்து
அருவருக்கச் செய்யும்
பாவம் யாவையும் மன்னித்து
நற்குணத்தை அளியும்

3. நீர் என் அழுகையைக் கண்டு
துக்கத்தாலே கலங்கும்
அடியேனைத் தேற்றல் செய்து
திடன் அளித்தருளும்
இந்த புது வருஷத்தில்
பாவத்துக்கும் கேட்டுக்கும்
தப்புவித்து என்னிடத்தில்
கிருபை கூர்ந்தருளும்

4. மாயமற்ற கிறிஸ்தோனாக
இந்த வருஷத்திலே
நான் நடக்கத்தக்கதாக
ஈவளியும் கர்த்தரே
யாவர்மேலும் அன்பின் சிந்தை
வைத்து தெய்வ பக்தியை
எனக்கு ரட்சிப்புண்டாக
காண்பித்திருப்பேனாக

5. பூரிப்பாய் இவ்வருஷத்தை
நான் முடிக்க என்னை நீர்
தாங்கி உந்தன் திருக் கையை
என்மேல் வைக்கக்கடவீர்
வருத்தம் வந்தாலும் உம்மை
நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்
மரித்தாலும் பேரின்பத்தை
நான் அடைந்து வாழுவேன்.

RAAJAN THAAVEETHIN OORINILAE

ராஜன் தாவீதின் ஊரினிலே
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
மந்தையைக் காக்க
விண்தூதர்கள் இறங்க
விண் ஜோதி கண்டவரே

1. திகையாதே கலங்தாதே
மகிழ்விக்கும் செய்தியுண்டு
ராஜாதி ராஜன் வல்லமைத் தேவன்
மானிடனாய் உதித்தார்

2. ஒரு மாட்டுத் தொழுவத்தினில்
அன்னை மரியின் மடியினில்
புல்லணை மீதினிலே
கடுங்குளிர் நேரத்தில்
பாலகனாய் பிறந்தார்

3. நட்சத்திரத்தின் ஒளியிலே
மூன்று ஞானியர் வந்தனரே
பொன் வெள்ளைத் தூபம்
காணிக்கையேந்தி
பாதம் பணிந்தனரே

MULLUGALUKKUL ROJAA MALAR NEERAE KAATU

முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு
புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன் என்றும்
ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்

1. எத்தனை எத்தனை குறைகள் எந்தன் வாழ்விலே
அத்தனையும் நீர் மன்னித்தீரே
மறந்தும் போனீரே உம்மை

2. வாடி வறண்ட வாழ்வில்
ஜீவன் தந்தீரே
வாசம் வீசும் மலராக
மலரச்செய்தீரே - உம்மை

MATHAVE SARANAM UNTHAN PUVIKKADHARAM

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி

மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே

நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே

IMMANUEL IMMANUEL ENNODIRUPPAVARE

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

1.பெத்லகேமில் பிறந்த அவர்
பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

2.மகிமை நிறைந்த தேவன் அவர்
மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர்
நன்மை தரும் தகப்பன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

3. மனிதனாகப் பிறந்த அவர்
பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மாம்சமாக வந்த அவர்
நமக்குள் வாழும் இயேசு அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

PARAM IRANGI VANDHA RAJANE

பரம் இறங்கி வந்த ராஜனே
வரம் கொடுக்க வந்த மீட்பரே
உலகத்தையே ஈன்ற உந்தன் குரல்
இதயத்தையே மீட்கும் உன்னின் தழல்

உயிரும் நீயே ஆவாய்
வழியும் நீயே ஆவாய்
வாய்மையும் நீயே என்று
அனுதினம் வானம் பூமி போற்றுதே

1) வலி கொடுத்திடும்
குளிர் அடித்திட அன்னை
மடியினின் தவழ்ந்ததும் எனே!
உயிர் எடுத்திடும் பலி படைத்திட
பாவ பழியதை சுமந்ததும் எனே!

முவ்வுலகை ஆளும் ராஜன்
மூவடிவில் தாங்கும் தேவன்
இவ்வுலக மாந்தர்காக
பிறந்தது அதிசயமே!
மனுகுலம் பிழைத்திடவே

SIRUSHTIPIN ATHIPATHIYE ENTHAN

சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.

வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ..

கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..
செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ..

NADU IRAVIL KADUM KULIRINIL

நடு இரவினில் கடும் குளிரினில்
என் பாலன் பிறந்தார் புவியினில்-2

எங்கும் இருள் சூழ்ந்ததே
எல்லா வாசல்கள் அடைந்திட்டதே
பெத்லகேம் வீதியிலே
தங்க இடம் தேடி அலைந்தனரே
சத்திரத்தில் இடமில்லை
ஒரு மாட்டுத்தொழுவத்தை அடைந்தனர்

இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2

உலகத்தின் இரட்சகர்
நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
உன்னையும் என்னையும்
அவரோடு சேர்த்துக்கொள்ள
உலகில் வந்துதித்தார்
உலகில் வந்துதித்தார்

தம் சொந்த குமாரனை நமக்கு தந்தார்
அவர் அன்பிற்கு அளவே இல்லை
தேவனின் சித்தத்தை செய்ய வந்தார்
அவர் அன்பிற்கு இணையே இல்லை

மாட்டுத்தொழுவத்தை தெரிந்து கொண்டார்
உலகத்தை இரட்சிக்கவே
கல்வாரி சிலுவையை தெரிந்து கொண்டார்
மனிதனை மீட்டிடவே

இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2

உலகத்தின் இரட்சகர்
நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
உன்னையும் என்னையும்
அவரோடு சேர்த்துக்கொள்ள
உலகில் வந்துதித்தார்
தூதர்கள் பாடினர்
மேய்ப்பர்கள் மகிழ்ந்தனர்
சாஸ்திரிகள் வியந்தனர்
இராஜாக்கள் நடுங்கினர்

இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்

நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
நம் பாவம் போக்க
சிலுவையில் மரித்தார்
மரணத்தை ஜெயித்தார்
மூன்றாம் நாள் எழுந்தார்
பரலோகம் சென்றார்
மீண்டும் வருவார்-2

உலகத்தின் இரட்சகர்
உன்னையும் என்னையும்

இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2

உலகத்தின் இரட்சகர்
நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
உன்னையும் என்னையும்
அவரோடு சேர்த்துக்கொள்ள
உலகில் வந்துதித்தார்

YESU RAJAN INRU PIRANTHAR

நடு இரவினில் கடும் குளிரினில்
என் பாலன் பிறந்தார் புவியினில்-2

எங்கும் இருள் சூழ்ந்ததே
எல்லா வாசல்கள் அடைந்திட்டதே
பெத்லகேம் வீதியிலே
தங்க இடம் தேடி அலைந்தனரே
சத்திரத்தில் இடமில்லை
ஒரு மாட்டுத்தொழுவத்தை அடைந்தனர்

இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2

உலகத்தின் இரட்சகர்
நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
உன்னையும் என்னையும்
அவரோடு சேர்த்துக்கொள்ள
உலகில் வந்துதித்தார்
உலகில் வந்துதித்தார்

தம் சொந்த குமாரனை நமக்கு தந்தார்
அவர் அன்பிற்கு அளவே இல்லை
தேவனின் சித்தத்தை செய்ய வந்தார்
அவர் அன்பிற்கு இணையே இல்லை

மாட்டுத்தொழுவத்தை தெரிந்து கொண்டார்
உலகத்தை இரட்சிக்கவே
கல்வாரி சிலுவையை தெரிந்து கொண்டார்
மனிதனை மீட்டிடவே

இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2

உலகத்தின் இரட்சகர்
நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
உன்னையும் என்னையும்
அவரோடு சேர்த்துக்கொள்ள
உலகில் வந்துதித்தார்
தூதர்கள் பாடினர்
மேய்ப்பர்கள் மகிழ்ந்தனர்
சாஸ்திரிகள் வியந்தனர்
இராஜாக்கள் நடுங்கினர்

இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்

நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
நம் பாவம் போக்க
சிலுவையில் மரித்தார்
மரணத்தை ஜெயித்தார்
மூன்றாம் நாள் எழுந்தார்
பரலோகம் சென்றார்
மீண்டும் வருவார்-2

உலகத்தின் இரட்சகர்
உன்னையும் என்னையும்

இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2

உலகத்தின் இரட்சகர்
நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
உன்னையும் என்னையும்
அவரோடு சேர்த்துக்கொள்ள
உலகில் வந்துதித்தார்