Friday, December 27, 2019

THUTHIKANAM MAKIMAI ELLAAM

துதிகனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவிற்கே

தூதர்களே துதியுங்கள்
தூத சேனையே துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்

வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவையே துதியுங்கள்

அக்கினி கன்மலையே துதியுங்கள்
மூடு பனி பெருங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்

வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம்

DEIVEEGA KOODARAME EN DEVANIN

தெய்வீகக் கூடாரமே – என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1. கல்வாரி திருப்பீடமே
கறைபோக்கும் திரு இரத்தமே
உயிருள்ள ஜீவ பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா

2. ஈசோப்புலால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோல
வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையால்

3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்

5. துபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்
மகிமையில் நுழைந்துவிட்டோம்

THEDUVEN ATHIKALAI NERAME

தேடுவேன் அதிகாலை நேரமே
நாடுவேன் என்றும் உந்தன் பாதமே
நாளெல்லாம் உம்மையே தேடுவேன்
கன்மலை உம்மையே நாடுவேன்

அல்லேலூயா
ஆராதிப்பேன் ஆரதிப்பேன்

கிருபை உள்ளவரே
தயவு நிறைந்தவரே
காலை தோறும் கிருபை
புதிதாக தானே நீர் பொழிகின்றீரே
மாலை புலம்பல்கள் எல்லாம்
களிப்பாக மாற்றி நீர் நடத்துகின்றீர்
அல்லேலூயா

இரக்கம் உள்ளவரே
உருக்கம் நிறைந்தவரே
உலகின் எல்லைகள் எங்கும்
உமக்காக சாட்சியாய் சென்றிடுவேனே
சுவாசம் உள்ள வரைக்கும்
உம்மையே நான் பாடி ஆராதிப்பேன்
அல்லேலூயா

DEVANAE ENNAI THARUGIREN

தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்


எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே


ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது


தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது

VAANOER RAAJAN PIRANTHAAR PIRANTHAAR

வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் (2)

1. பூவினை மீட்கப் பரலோகப் பூமான் பூதலந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப் பூலோகத்தில் பிறந்தார் (2)
வாசல்களே உயருங்கள் கதவுகளே திறவுங்கள் (2)
வானாதி ராஜன் வல்லமை தேவனை வாழ வழிவிடுங்கள் (2)

2. ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு அடைக்கலந்தரப் பிறந்தார்
ஆருயிரீந்து அன்பினைக் காட்ட ஆண்டவரே பிறந்தார் (2)
ஆத்துமமே ஸ்தோத்தரி அல்லேலுயா ஆர்ப்பரி (2)
ஆண்டவரான அருளுள்ள வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் (2)

Thursday, December 26, 2019

VAALAAKKAAMAL ENNAI THALAYAKUVAAR

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
அல்லேலுயா துதி உமக்கே
அல்லேலுயா துதி உமக்கே -2

Verse 1
அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2)
– அல்லேலுயா
வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
-அல்லேலுயா

Verse 2
கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2)
-அல்லேலுயா
வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
-அல்லேலுயா

VALAKAMAL ENNAI THALAIYAKUVEER

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
நம்பிடு என்னை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுவேன்

யேகோவா நிசியே நீர் என் தேவனே
யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்

செங்கடலை நீர் பிளந்தீரே
வழியை உண்டாக்கி நடத்தினீரே
யோர்தான் வெள்ளம் போல வந்தாலும்
எரிகோ தடையாக நின்றாலும்

தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே
சோர்ந்து போவதில்லை நீர் என்னோடு
தேவையை சந்திக்கும் தேவன் நீரே
உதவி செய்திடுவீர்

VALAKKAMAL ENNAI THALAYAKKINEER

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்

கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர்

உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியா
மாத்திப்புட்டீங்க

மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள
நடத்த வச்சிங்க

VESAM PODUM MANITHA ULAGILE

வேஷம் போடும் மனித உலகிலே
பாசம் காட்ட யாருமில்லையோ
மோசம் போக்கும் மாய உலகிலே
நேசம் காட்ட யாருமில்லையோ

பார் அதோ கல்வாரியில் நேசரின் (இயேசுவின்) உண்மை
நேசத்தை உன்னை நேசித்தால் தானே உதிரம் சிந்தினார்

ஓடி ஒதுங்கும் உறவுகள் நடுவினிலே
உன்னை நெருங்கி அழைக்கும்
உருக்கமான உண்மை அன்பு இது
அது மேலானது மேன்மையானது
இணையேதும் இல்லாதது

உள்ளத்திலே வடியும் கண்ணீர் துளிகளையும்
தம் அன்பு கரத்தால் துடைக்கும் அன்பு இது
பாவம் போக்குவார், சாபம் நீக்குவார்
சமாதானம் தந்திடுவார்

உனக்கொரு திட்டம் அவரிடம் உண்டு
உன்னை உயர்த்தி மகிழும்
இதயம் அவருக்கு உண்டு
அதை அறிந்திடவே அவர் பாதம் அமர்ந்திடு
சொன்னதைச் செய்திடுவார்

VAANAMUM BOOMIYUM MARIDINUM

வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல்ல தேவனவர்
காத்திடுவார் தம் கிருபையியென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே
கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே
கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள் கண்டிட வந்திடாயோ
ராகங்கள் மாற்றிடும் ஔஷதமே
தாயினும் மேலவர் தயையிதே — கல்வாரி

கிருபையின் காலம் முடித்திடுமுன் (2)
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரணனே உன்னை மாற்றிடவே
புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார் — கல்வாரி

கிறிஸ்துவின் மரணசாயலிலே (2)
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய அபிஷேகமும் தந்து
நீதியின் பாதை நடத்திடுவார் — கல்வாரி

வருகையின் நாள் நெருங்கிடுதே (2)
வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார் — கல்வாரி

VARAVENDUM DEVA AAVIYE

வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே

ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டுமையா
அனல் மூட்டும்

RAJA NEER SEITHA NANMAIGAL

ராஜா நீர் செய்த நன்மைகள் 
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றி பலி
என் ஜீவ நாளெள்ளாம்

நன்றி ராஜா இயேசு ராஜா -4

அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைந்து நனைந்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா -2

வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல் 
கேட்கும் பாக்கியம் தந்தீரையா

ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா

கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி
கூடவே வந்தீரையா

உமக்காக வாழ உம் நாமம் சொல்ல
தெரிந்து எடுத்தீரையா
உம்மோடு வைத்து ஊழியனாக
உருவாக்கி வந்தீரையா

YEGOVA YERE THANTHAIYAM DEIVAM

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமே
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு

யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் என் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்திலே
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு

யேசுவே நீரே என் அத்ம நேசர் 
என்மேல் எவ்வளவ் அன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க தம் உயிர் தந்தீர்
உம் அன்புக்கு இனையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு

MEI JOTHIYAM NAL MEETPARE

1. மெய் ஜோதியாம் நல் மீட்பரே,
நீர் தங்கினால் ராவில்லையே;
என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
மேகம் வராமல் காத்திடும்.

2. என்றைக்கும் மீட்பர் மார்பிலே,
நான் சாய்வது பேரின்பமே;
என்றாவலாய் நான் ராவிலும்
சிந்தித்துத் தூங்க அருளும்.

3. என்னோடு தங்கும் பகலில்,
சுகியேன் நீர் இராவிடில்;
என்னோடே தங்கும் ராவிலும்
உம்மாலே அஞ்சேன் சாவிலும்.

4. இன்றைக்குத் திவ்விய அழைப்பை
அசட்டை செய்த பாவியை
தள்ளாமல் வல்ல மீட்பரே,
உம்மண்டை சேர்த்துக் கொள்ளுமே.

5. வியாதியஸ்தர், வறியோர்,
ஆதரவற்ற சிறியோர்,
புலம்புவோர் எல்லாரையும்
அன்பாய் விசாரித்தருளும்.

6. பேரன்பின் சாகரத்திலும்
நான் மூழ்கி வாழுமளவும்,
என் ஆயுள்காலம் முழுதும்
உம் அருள் தந்து காத்திடும்.