Sunday, May 6, 2018

MANATHURUGUM DEIVAME YESAIAH LYRICS


மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 
1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா
2. எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா – ஐயா
3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா
4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்
5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

JEBAM KAETTEERAIYAA JEYAM THANDHEERAIYAA LYRICS

ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே
கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன்
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்

KARAIYERI UMATHANDAI NIRKUMPOTHU LYRICS


1. கரையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ
ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா
2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
தூக்கிப்பார் நிர்ப்பந்தராய்
3. தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன்
4. வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாழும் வருமோ
5. பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்துசேர உழைப்பீர்

MUDIYATHU MUDIYATHU UMMAI PIRINDHU LYRICS


முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது -என்னால் (இயேசையா)


1. திராட்சை செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன்


2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே


3. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
விருப்பம் போல் வனைந்துக் கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்


4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
எதையும் செய்திட பெலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால், உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன் -இயேசையா


5. பூமியிலே பரதேசி நான் -உமது
வார்த்தையை ஒருபோதும் எனக்கு
மறைத்து விடாதேயும்

MUGAMALARINTHU KODUPAVARAI KARTHAR LYRICS


முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்
1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம்
2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே
4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

NAAN NAANAGAVE VANDHIRUKKIREN LYRICS

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக நானாக வந்திருக்கிறேன் — நான்
2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் — நான்

NAAN EN NESARUDAIYAVAN EN LYRICS

நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்
1. பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்
2. தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்
3. எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்
4. என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்

NAAN BAYAPADUM NAALINILE LYRICS

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்


1. உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே


2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

MUTHIRAI MUTHIRAI YEZHU MUTHIRAI LYRICS

முத்திரை முத்திரை ஏழு முத்திரை
இவைகளை திறப்பது யாரது
இயேசு கிறிஸ்து தானது
1. வெள்ளை குதிரையில் ஒருவன்
அந்தி கிறிஸ்து அவன்
ஜெயிக்க வரும் ஒருவன்
ஜனங்களை வஞ்சிப்பவன்
போலியாய் பலர் வந்துபோவார் எச்சரிக்கை வேண்டும்
வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும்
இது முத்திரை முதல் முத்திரை 
2. சிவப்பு குதிரையில் ஒருவன்
அதிகாரம் கொண்டவன்
பட்டயம் கையில் கொண்டவன்
பலரை கொல்லும் ஒருவன்
யுத்த செய்திகள் கேட்கும்போது எச்சரிக்கை வேண்டும்
இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும்
இந்த முத்திரை இரண்டாவது 
3. கறுப்பு குதிரையில் சவாரி செய்து ஒருவன் வருகின்றான்
தராசை கையில் ஏந்திக்கொண்டு அவனே வருகின்றான்
பூமி எங்கும் பஞ்சம் உண்டாகும்
பட்டினியாலே துன்பம் உண்டாகும்
இந்த முத்திரை மூன்றாவது 
4. நாலாம் முத்திரை உடைத்தபோது மங்கின நிறமுள்ள குதிரை
மரணம் என்பது அவனது நாமம்
மேற்கொள்ளுமே பலரை
பஞ்சத்தாலும், போரினாலும், பூமி அதிர்ந்ததாலும்,
கொள்ளை நோயின் பிடியினாலும் மரணம் மேற்கொள்ளும்
மனிதனை மரணம் மேற்கொள்ளும்
முத்திரை முத்திரை ஏழு முத்திரை 
5. ஐந்தாம் முத்திரை உடைத்தபோது
பலிபீடத்தின் கீழே
ரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின்
விண்ணப்பம் சென்றது மேலே
தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை
உலகம் பகைத்திடும்
கர்த்தரே தேவன் என்று போற்றினால்
கொலையும் செய்திடும்
6. ஆறாம் முத்திரை உடைத்தபோது பூமியும் அதிர்ந்ததே
சூரியன் கறுத்து சந்திரன் சிவந்து
விண்மீண் விழுந்ததே 
மனுஷ குமாரனின் அடையாளங்கள் விண்ணில் தெரியுது பார்
மன்னாதி மன்னன் வருவதை பார்த்து மனிதர் புலம்பிடுவார் – பூமியின் மனிதர் புலம்பிடுவார்
7. இறுதி முத்திரை உடைந்தது
பரலோகில் அமைதி நிலவியது
பூமியின் நியாயத்தீர்ப்புக்காய்
ஆயத்தமாகும் ஒரு அமைதியது

BETHLEHEM OORORAM LYRICS

1. பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி
2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து
3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்
4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ
5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி
6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு
7. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே